
இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம்: இஸ்ரேலில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இஸ்ரேல் மீது நேற்று ஈரான் 200 ஏவுகணைகளை வீசி தாக்கியது.
இந்த தாக்குதலில் உயிர் சேதம் ஏதும் இல்லை என இஸ்ரேல் தெரிவித்திருந்தால், இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் அவர்களுக்கு சில முக்கிய அறிவுறுத்தல்களையும் தூதரகம் வெளியிட்டுள்ளது.
நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் விழிப்புடன் இருக்க, உள்ளூர் அதிகாரிகளின் ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளது.
உதவி எண்கள்
இந்தியர்களுக்கு உதவி எண்களை அறிவித்துள்ளது தூதரகம்
"இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையுடன், உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும். தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும், பாதுகாப்பு நிர்வாகத்துக்கான பகுதிகளில் இருக்கவும்," என தூதரகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், நிலையை கவனித்துக் கொண்டிருப்பதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.
மேலும், அங்கே தவிக்கும் இந்தியர்களுக்கான அவசரநிலைகளுக்கான தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொலைபேசி உதவி எண்கள்:
+972-547520711
+972-543278392
மின்னஞ்சல்: consi.telaviv@mea.gov.in
மேலும் இந்திய தூதரகத்தில் இன்னும் பதிவு செய்யாத இந்தியர்கள் உடனடியாக பதிவு செய்யவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#தகவல்பலகை | இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம் : இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் உதவிக்கு +972 547520711; +972 543278392 ஆகிய எண்களுக்கு தொடர்புகொள்ளலாம்!
— Sun News (@sunnewstamil) October 2, 2024
இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பு முகாம்களில் இருக்குமாறும், தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் இந்திய வெளியுறவு அமைச்சகம்…