NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஈரான்-இஸ்ரேல் போர்: அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என ஐ.நா கவலை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஈரான்-இஸ்ரேல் போர்: அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என ஐ.நா கவலை 

    ஈரான்-இஸ்ரேல் போர்: அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என ஐ.நா கவலை 

    எழுதியவர் Sindhuja SM
    Apr 16, 2024
    11:42 am

    செய்தி முன்னோட்டம்

    சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தின் மீது சமீபத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

    அந்த தாக்குதலுக்கு பதிலடி தாக்குதல் நடத்திய ஈரான், இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி நேரடி தாக்குதலை நடத்தியது.

    இந்நிலையில், ஈரானுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் கூறியுள்ளது.

    அதனால், மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதட்டம் அதிகரித்துள்ளது. பிற நாடுகளும் இந்த போரில் பங்கு பெறலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

    மேலும், ஈரானில் உள்ள அணுசக்தி தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தக்கூடும் என ஐக்கிய நாடுகளின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

    ஈரான்

    பதட்டங்களைத் தணிக்க அழைப்பு விடுத்தார் ஐநா பொதுச்செயலாளர் 

    "இந்த சாத்தியம் குறித்து நாங்கள் எப்போதும் கவலைப்படுகிறோம்" என்று IAEA டைரக்டர் ஜெனரல் ரஃபேல் க்ரோஸி கூறியுள்ளார்.

    ஈரானிய தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்கும் என அந்நாட்டு ராணுவ தலைமை அதிகாரி கூறியதால், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது போர் அமைச்சரவையை நேற்று மாலை சந்தித்தார்.

    ஈரானிய தாக்குதலைத் தொடர்ந்து, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு அவசரக் கூட்டத்தை நடத்தியது.

    அந்த கூட்டத்தில் பேசிய ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் மத்திய கிழக்கு "போரின் விளிம்பில்" இருப்பதாக எச்சரித்தார். மேலும், பதட்டங்களைத் தணிக்க அவர் அழைப்பு விடுத்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஈரான்
    இஸ்ரேல்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    ஈரான்

    இஸ்ரேல் ஹமாஸ் போருக்கு இடையே, வைரலாகி வரும் அமெரிக்காவிற்கு ஒசாமா எழுதிய கடிதம் அமெரிக்கா
    இஸ்ரேல் தாக்குதலில் காசா மருத்துவமனையில் 12 பேர் கொல்லப்பட்டனர்- ஹமாஸ் சுகாதார அமைச்சகம் இஸ்ரேல்
    தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதலில் மூத்த ஹிஸ்புல்லா தலைவர் கொல்லப்பட்டார் லெபனான்
    செங்கடலில் வர்த்தக கப்பல் மீது ஹூதி போராளிகள் ஏவுகணை தாக்குதல்: அமெரிக்கா தகவல் ஏமன்

    இஸ்ரேல்

    வடக்கு காசாவில் இருந்த ஹமாஸ் இராணுவக் கட்டமைப்பு தகர்க்கப்பட்டதாக அறிவித்தது இஸ்ரேல்  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    காசா பல்கலைக்கழகத்தின் மீது குண்டுகளை வீசிய இஸ்ரேல்: வைரலாகும் வீடியோ  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    சுதந்திரமான பாலஸ்தீனத்தை நிறுவ பரிந்துரைத்தார் அமெரிக்க அதிபர் பைடன்  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இனப்படுகொலைக்கான தூண்டுதலைத் தடுக்கவும் தண்டிக்கவும் இஸ்ரேலுக்கு உலக நீதிமன்றம் உத்தரவு  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025