NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு நடந்ததை அடுத்து ஈரானிய வான்வெளியில் விமானங்கள் பறக்க தடை
    அடுத்த செய்திக் கட்டுரை
    விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு நடந்ததை அடுத்து ஈரானிய வான்வெளியில் விமானங்கள் பறக்க தடை

    விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு நடந்ததை அடுத்து ஈரானிய வான்வெளியில் விமானங்கள் பறக்க தடை

    எழுதியவர் Sindhuja SM
    Apr 19, 2024
    11:11 am

    செய்தி முன்னோட்டம்

    சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தின் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் ஆளில்லா விமானத் தாக்குதலை சில நாட்களுக்கு முன் நடத்தியது.

    இந்நிலையில், ஈரான் மீது மீண்டும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேலிய ஏவுகணைகள் ஈரானில் உள்ள ஒரு தளத்தைத் தாக்கியுள்ளன.

    ஈரானின் இஸ்பஹான் நகரில் உள்ள விமான நிலையத்தில் வெடிச்சத்தம் கேட்டது. ஆனால் அதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.

    ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் திட்டத்தின் மையப் பகுதியான இஸ்பஹான் மாகாணத்தில் நடான்ஸ் உட்பட பல ஈரானிய அணுசக்தி தளங்கள் அமைந்துள்ளன.

    இஸ்பஹான் நகரில் உள்ள விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு நடந்ததை அடுத்து, ஈரானிய வான்வெளியில் பறக்க இருந்த பல விமானங்கள் திருப்பி விடப்பட்டன.

    ஈரான் 

    இஸ்ரேல் மீது ஈரான் கடந்த வாரம் தாக்குதல் நடத்தியது

    சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரக வளாகத்தில் ஏப்ரல் 1 ஆம் தேதி இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலுக்குப் பழிவாங்குவதாக ஈரான் சபதம் செய்ததது.

    இந்த தாக்குதலில் ஒரு உயர்மட்ட ஈரானிய ஜெனரல் மற்றும் ஆறு ஈரானிய இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர். தனது தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தன் நாட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாக ஈரான் பார்க்கிறது.

    இதனையடுத்து, இஸ்ரேல் மீது ஈரான் கடந்த வாரம் தாக்குதல் நடத்தியது.

    அந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் இன்று ஈரான் நாட்டில் உள்ள இஸ்பஹான் மாகாணத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஈரான்
    இஸ்ரேல்
    ஈரான் இஸ்ரேல் போர்

    சமீபத்திய

    'ஒன்றரை வருட பிளானிங்': 40 ரஷ்ய ஜெட் விமானங்களை துவம்சம் ஆகிய உக்ரைனின் ட்ரோன்கள்  உக்ரைன்
    30 ஆண்டுகள் சிறை; சென்னை நீதிமன்றம் ஞானசேகரனுக்கு வழங்கிய தண்டனையின் முழு விபரம் பாலியல் வன்கொடுமை
    இனி சேமிப்பு கணக்கில் மினிமம் பேலன்ஸ் தேவையில்லை; கனரா வங்கி வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ் வங்கிக் கணக்கு
    ஜூன் மாதத் தொடக்கத்திலேயே ஷாக் கொடுத்த தங்க விலை; இன்றைய (ஜூன் 2) விலை நிலவரம் தங்கம் வெள்ளி விலை

    ஈரான்

    இஸ்ரேலிய உளவுத்துறை  ஏஜென்ட்டை தூக்கிலிட்டது ஈரான்  இஸ்ரேல்
    காசா போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர நெதன்யாகுவிடம் மோடி வலியுறுத்தல் பிரதமர் மோடி
    குஜராத் பகுதியில் கப்பலை தாக்கிய ட்ரோன் ஈரானிலிருந்து ஏவப்பட்டது- அமெரிக்கா ஏமன்
    வணிக கப்பல் தாக்குதல் விவகாரம்: 3 போர்க்கப்பல்களை அரபிக்கடலில் நிலைநிறுத்தியது இந்தியா  இந்தியா

    இஸ்ரேல்

    இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஐநா ஏஜென்சி உதவியதாக குற்றச்சாட்டு: நிதியுதவியை நிறுத்திய உலக நாடுகள்  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    வடக்கு காசாவிற்கு ஐ.நா விஜயம் செய்யலாம்: இஸ்ரேல் அனுமதி காசா
    காசாவில் உள்ள மக்கள் பசியுடன் உள்ளனர்: ஐ.நா கவலை  காசா
    ரஃபா தாக்குதலை அடுத்து அனைத்து UNRWA அலுவலகங்களையும் அகற்ற இஸ்ரேல் திட்டம்  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    ஈரான் இஸ்ரேல் போர்

    ஈரான்-இஸ்ரேல் போர்: அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என ஐ.நா கவலை  ஈரான்
    ஈரானுக்கு எதிரான பழிவாங்கும் திட்டத்தை இஸ்ரேல் இறுதி செய்துள்ளதாக தகவல் ஈரான்
    ஏவுகணைகள் மூலம் ஈரான் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இஸ்ரேல் இஸ்ரேல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025