22 Jun 2025
மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில், தேர்தலில் இந்து வாக்கு வங்கி உள்ளிட்ட ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றம்
மதுரையில் நடைபெற்ற இந்து முன்னணி தலைமையிலான முருக பக்தர்கள் மாநாட்டில், தமிழ்நாட்டில் உள்ள கோயில் நிர்வாகத்திலிருந்து இந்து சமய மற்றும் அறநிலையத் துறையை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஆறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஐசிசி 2026 டி20 உலகக்கோப்பைக்கு கனடா கிரிக்கெட் அணி தகுதி பெற்றது
கனடாவின் கிங் சிட்டியில் நடந்த அமெரிக்க தகுதிச் சுற்றில் பஹாமாஸை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் கனடா ஆடவர் ஐசிசி டி20 உலகக்கோப்பை 2026க்கு அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்றுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதற்கு ஈரான் நாடாளுமன்றம் ஒப்புதல்; எண்ணெய் விலைகள் உயரும் அபாயம்; இந்தியாவுக்கு பாதிப்பா?
ஈரான் அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, உலகின் மிக முக்கியமான எண்ணெய் கப்பல் பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதற்கு ஈரான் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவி கிடைத்தால் ஏற்பேன் என சவுரவ் கங்குலி கருத்து
முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டனும், முன்னாள் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி, எதிர்காலத்தில் இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளர் பொறுப்பு வந்தால் ஏற்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஈரான் மீதான தாக்குதலுக்குப் பிறகு டிரம்பிற்கு சொந்தமான ட்ரூத் சோசியல் சமூக வலைதளம் முடங்கியது
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானின் முக்கிய அணுசக்தி தளங்கள் மீது வெற்றிகரமான ராணுவத் தாக்குதலை அறிவித்த சிறிது நேரத்திலேயே, அவரது சமூக ஊடக தளமான ட்ரூத் சோசியல் அமெரிக்கா முழுவதும் பெரும் செயலிழப்பை சந்தித்தது.
கலை நிகழ்ச்சிகளுடன் பிரமாண்டமாக தொடங்கியது முருக பக்தர்கள் மாநாடு; ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பங்கேற்பு
மதுரையில் உள்ள புகழ்பெற்ற பாண்டி கோயில் அருகே இந்து முன்னணி ஏற்பாடு செய்த பெரிய அளவிலான முருக பக்தர்கள் மாநாடு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) நடைபெற்றது.
இந்தியாவின் காபி ஏற்றுமதி 11 ஆண்டுகளில் 125% அதிகரித்து $1.8 பில்லியனை எட்டியுள்ளது
கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவின் காபி ஏற்றுமதித் துறை 125% குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்து, $1.8 பில்லியனை எட்டியுள்ளது.
பழங்குடி மக்கள் குறித்த சர்ச்சைப் பேச்சுக்கு நடிகர் விஜய் தேவரகொண்டா மீது எஃப்ஐஆர் பதிவு
நடிகர் சூர்யாவின் ரெட்ரோ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வின் போது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து, நடிகர் விஜய் தேவரகொண்டா மீது எஸ்சி/எஸ்டி (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
INDvsENG முதல் டெஸ்ட்: மூன்றாம் நாள் ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடுவது ஏன்?
லீட்ஸில் இந்தியா vs இங்கிலாந்து இடையே நடந்து வரும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது நாளில், மோட்டார் நியூரான் நோயால் (MND) பாதிக்கப்பட்டு 61 வயதில் காலமான முன்னாள் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டேவிட் சிட் லாரன்ஸுக்கு இரு அணிகளும் அஞ்சலி செலுத்தின.
மழைக்கால முடி பராமரிப்பு: ஈரப்பதமான காலநிலையில் முடி உதிர்தல் மற்றும் சேதத்தைத் தடுப்பதற்கான நிபுணர் குறிப்புகள்
நாட்டின் பல்வேறு பகுதிகளில் பருவமழை தொடங்குவதால், ஈரப்பதம் அதிகரிப்பது முடியின் ஆரோக்கியத்திற்கு ஒரு கவலையாகி வருகிறது.
அமெரிக்க தாக்குதலுக்குப் பிறகு ஈரான் அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாடல்; போர்ப் பதற்றம் குறித்து கவலை
மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஈரான் அதிபர் டாக்டர் மசூத் பெஷேஷ்கியனுடன் ஒரு குறிப்பிடத்தக்க தொலைபேசி உரையாடலை நடத்தினார்.
ஸ்போர்ட்டி டிசைன் மற்றும் பிரீமியம் அம்சங்களுடன் ஹோண்டா லிமிடெட் எடிஷன் சிட்டி ஸ்போர்ட் அறிமுகம்
ஹோண்டா அதன் பிரபலமான நடுத்தர அளவிலான செடானான சிட்டியின் லிமிடெட் எடிஷனை சிட்டி ஸ்போர்ட் என்ற பெயரில் வெளியிட்டுள்ளது.
அமெரிக்க தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்
ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) அமெரிக்கப் படைகள் இஸ்ரேலுடன் இணைந்து, ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் ஆகிய மூன்று முக்கிய ஈரானின் அணுசக்தி நிலையங்களை குண்டுவீசித் தாக்கிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, ஈரான் இஸ்ரேல் மீது புதிய ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதால் மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் அதிகரித்தது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 23) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (ஜூன் 23) தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
காஷ்மீரில் பஹல்காம் தாக்குதல் தீவிரவாதிகளுக்கு உதவிய 2 பேரை கைது செய்தது என்ஐஏ
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் விசாரணையில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக, தேசிய புலனாய்வு நிறுவனம் (என்ஐஏ) இரண்டு பேரை கைது செய்துள்ளது.
இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் வரலாற்றில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் ஜோ ரூட்
இங்கிலாந்து மண்ணில் இந்தியா vs இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த சச்சின் டெண்டுல்கரின் நீண்டகால சாதனையை முறியடித்து இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் கிரிக்கெட் வரலாற்றில் தனது பெயரைப் பதித்துள்ளார்.
சிங்கத்தின் முதல் கர்ஜனை; வெளியான 15 நிமிடங்களில் 1 மில்லியன் பார்வைகளை பெற்ற ஜனநாயகன் வீடியோ
நடிகர் விஜயின் வரவிருக்கும் படமான ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளர்கள் அவரது பிறந்தநாளை முன்னிட்டு ஒரு சிறப்பு வீடியோவை வெளியிட்டனர்.
அற்புதமான வெற்றி; ஈரான் அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதலுக்குப் பிறகு டொனால்ட் டிரம்ப் அமெரிக்க மக்களுக்கு உரை
மத்திய கிழக்கில் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில், ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) அமெரிக்க போர் விமானங்கள் ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி நிலையங்கள் மீது குண்டுமழை பொழிந்து தாக்குதல் நடத்தியுள்ளது.
தனக்கு பிறகு யார்? போர்ப் பதற்றங்களுக்கு மத்தியில் 3 வாரிசுகளை அறிவித்தார் ஈரான் தலைவர் அலி கமேனி
இஸ்ரேலுடனான ஈரானின் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, தனது மகன் மொஜ்தபா கமேனியை பரிசீலனையில் இருந்து விலக்கி, தனக்கு பிறகு தலைமைப் பொறுப்புக்கான வாரிசுரிமைத் திட்டங்களைத் தொடங்கும் அரிய நடவடிக்கையை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
INDvsENG முதல் டெஸ்ட்: ஓலி போப் சதம் மூலம் இரண்டாம் நாளில் மீண்டெழுந்தது இங்கிலாந்து
இந்தியா vs இங்கிலாந்து இடையே ஹெடிங்கிலியில் நடந்து வரும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2வது நாளில் இங்கிலாந்து வலுவான பதிலடி கொடுத்து மீண்டது.
ஈரான் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்க ராணுவ விமானங்கள் குண்டுமழை பொழிந்து தாக்குதல்
இஸ்ரேல்-ஈரான் மோதலின் குறிப்பிடத்தக்க அதிகரிப்பில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி நிலையங்களான ஃபோர்டோவ், நடான்ஸ் மற்றும் எஸ்ஃபஹான் மீது அமெரிக்கப் படைகள் நேரடி வான்வழித் தாக்குதல்களை நடத்தியதை உறுதிப்படுத்தினார்.
21 Jun 2025
INDvsENG முதல் டெஸ்ட்: மூன்று சதங்கள் அடித்தும் சோகமான சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் அணி
ஹெடிங்லியில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் 2வது நாளில் இந்திய கிரிக்கெட் அணி அதிர்ச்சியூட்டும் சரிவை சந்தித்தது.
பீகார் மற்றும் ஜார்க்கண்டில் ₹100 கோடி ஜிஎஸ்டி ரீஃபண்ட் மோசடியை கண்டுபிடித்தது சிபிஐ
மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) கிட்டத்தட்ட ₹100 கோடி மதிப்புள்ள பெரிய அளவிலான ஜிஎஸ்டி ரீஃபண்ட் மோசடியைக் கண்டுபிடித்துள்ளது.
மானேசர் தொழிற்சாலையில் 50,000வது எலக்ட்ரிக் பைக்கை உற்பத்தி செய்தது ரிவோல்ட் மோட்டார்ஸ்
ரிவோல்ட் மோட்டார்ஸ் ஹரியானாவில் உள்ள அதன் மானேசர் உற்பத்தி ஆலையில் இருந்து அதன் 50,000வது மின்சார இரு சக்கர வாகனத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஒரு குறிப்பிடத்தக்க உற்பத்தி மைல்கல்லை எட்டியுள்ளது.
மோதலால் பாதிக்கப்பட்ட ஈரானில் இருந்து 600 மாணவர்களை விமானம் மூலம் மீட்டது இந்தியா
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், ஆபரேஷன் சிந்து நடவடிக்கையின் கீழ் ஒரு பெரிய மீட்பு முயற்சியில், ஈரானில் இருந்து 600 க்கும் மேற்பட்ட மாணவர்களை இந்தியா வெற்றிகரமாக வெளியேற்றியது.
எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிப்பு; வாக்குச்சாவடி வீடியோ பதிவு காட்சிகளை வெளியிட முடியாது என தேர்தல் ஆணையம் உறுதி
எதிர்க்கட்சிகள் வாக்குச்சாவடி வீடியோ காட்சிகளை வெளியிட வேண்டும் என்று முன்வைத்த கோரிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.
ஈரான் முழுவதும் துல்லியத் தாக்குதல்களில் மூன்று உயர்மட்ட தளபதிகளை ஒரே நாளில் கொன்றது இஸ்ரேல்
ஈரானுடனான மோதலில், இஸ்ரேல் சமீபத்திய உயர் துல்லிய வான்வழித் தாக்குதல்களில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (ஐஆர்ஜிசி) மூன்று உயர் தளபதிகளைக் கொன்றது.
INDvsENG முதல் டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் 471 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இந்தியா; மழையால் இங்கிலாந்து பேட்டிங் தொடங்குவதில் தாமதம்
ஹெடிங்கிலியில் நடைபெற்று வரும் இந்தியா vs இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது நாளில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 471 ரன்களுக்கு ஆல் அவுட்ஆனது.
16 ஆண்டுகளுக்குப் பிறகு பேட்ரியாட் படத்தில் மம்மூட்டி-மோகன்லால் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்
மலையாள சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரங்களான மம்மூட்டி, மோகன்லால் மற்றும் ஃபஹத் ஃபாசில் ஆகியோர் மாலிக் திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் தயாராக உள்ள மல்டி ஸ்டார் படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
4ஜி 5ஜியையெல்லாம் விடுங்க; இந்த நாட்டுல இன்னும் 2ஜி தான் பயன்படுத்திக்கிட்டு இருக்காங்களாம்; ஆச்சரிய தகவல்
5ஜி அறிமுகப்படுத்தப்பட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும், உலகம் 6ஜி இணைப்பை எதிர்நோக்கியுள்ள நிலையில், இன்னும் 2ஜியை மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்தும் ஒரு நாடு உலகத்தில் உள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறாதா? உண்மைதான்.
எம்எஸ் தோனியின் சாதனை முறியடிப்பு; டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த இந்திய விக்கெட்-கீப்பர் ஆனார் ரிஷப் பண்ட்
லீட்ஸில் உள்ள ஹெடிங்லியில் இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது நாளில், இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் எம்எஸ் தோனியின் நீண்ட கால சாதனையை முறியடித்துள்ளார்.
ஆர்.பிரக்ஞானந்தா FIDE செஸ் தரவரிசையில் டி.குகேஷை முந்தி ஐந்தாவது இடத்திற்கு முன்னேற்றம்
இந்தியாவின் இளம் செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆர்.பிரக்ஞானந்தா நேரடி FIDE தரவரிசையில் நடப்பு உலக சாம்பியனான டி.குகேஷை முந்தி 2777.2 மதிப்பீட்டுடன் உலகளவில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
மூன்று மூத்த அதிகாரிகளை உடனடியாக நீக்கக்கோரி ஏர் இந்தியாவிற்கு டிஜிசிஏ உத்தரவு; காரணம் என்ன?
விமானப் பாதுகாப்பு நெறிமுறைகளை கடுமையாக மீறியதைத் தொடர்ந்து, மூன்று மூத்த அதிகாரிகளை அவர்களின் குழு திட்டமிடல் பொறுப்புகளில் இருந்து உடனடியாக நீக்கக் கோரி, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) ஏர் இந்தியாவிற்கு கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளது.
2026 முதல் இரு சக்கர வாகனங்களில் ABS கட்டாயம்; மத்திய அரசு அதிரடி உத்தரவு
சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான ஒரு மைல்கல் நடவடிக்கையாக, ஜனவரி 2026 முதல் இந்தியாவில் விற்கப்படும் அனைத்து புதிய இரு சக்கர வாகனங்களிலும், ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS) பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்று சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் அறிவித்துள்ளது.
பழமையான கோகர்ணா கோயிலில் இந்து வழக்கப்படி ரஷ்ய வீரரின் இறுதிச் சடங்குகள்
ஒரு தனித்துவமான மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக, கர்நாடகாவின் கோகர்ணாவில் உள்ள பண்டைய ஸ்ரீ மகாபலேஷ்வரர் கோயிலில், ரஷ்ய ராணுவ வீரர் செர்ஜி கிராப்லெவின் இறுதிச் சடங்குகள் இந்து வழக்கப்படி செய்யப்பட்டன.
இறங்கிய வேகத்தில் ஏறிய விலை; இன்றைய (ஜூன் 21) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை சரிந்த நிலையில் சனிக்கிழமை (ஜூன் 21) மீண்டும் உயர்ந்துள்ளது.
டெஸ்ட் வரலாற்றில் மூன்றாவது முறை; கூட்டாக சாதனை படைத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷுப்மன் கில் ஆகியோர் முதல் நாளில் சதங்களை அடித்து வரலாறு படைத்துள்ளனர்.
தீராத ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுவர்களுக்கான எளிய வீட்டு மற்றும் ஆயுர்வேத சிகிச்சை முறைகள்
ஒற்றைத் தலைவலி என்பது கடுமையான தலைவலியை விட அதிக உபத்திரவத்தைக் கொடுக்கும் ஒன்று.
இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதற்காக டிரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டுமாம்; பாகிஸ்தான் பரிந்துரை
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமீபத்திய மோதலைத் தணிப்பதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ராஜதந்திர முயற்சிகளை மேற்கோள் காட்டி, 2026 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு அவரை பரிந்துரைப்பதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
SENA நாடுகளில் அதிக ரன்கள்; எம்எஸ் தோனியின் சாதனையை முறியடித்தார் ரிஷப் பண்ட்
லீட்ஸில் உள்ள ஹெடிங்லியில் இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாளில், SENA நாடுகளில் அதிக டெஸ்ட் ரன்கள் எடுத்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற எம்எஸ் தோனியின் சாதனையை ரிஷப் பண்ட் முறியடித்துள்ளார்.
'ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்': 11வது சர்வதேச யோகா தினத்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து
ஒற்றுமை, அமைதி மற்றும் நல்வாழ்வுக்கான பயிற்சியாக யோகாவை உலகம் தழுவி வருவதைக் கொண்டாடும் வகையில், 11வது சர்வதேச யோகா தினத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.