
இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதற்காக டிரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டுமாம்; பாகிஸ்தான் பரிந்துரை
செய்தி முன்னோட்டம்
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமீபத்திய மோதலைத் தணிப்பதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ராஜதந்திர முயற்சிகளை மேற்கோள் காட்டி, 2026 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு அவரை பரிந்துரைப்பதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. எக்ஸ் தளம் வாயிலாக வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பில், இரு அணு ஆயுத நாடுகளுக்கும் இடையிலான பதட்டங்களைத் தணிப்பதில் டிரம்பின் தீர்க்கமான தலைமைத்துவத்துடன் செயல்பட்டதாக பாராட்டி உள்ளது. இருப்பினும், பாகிஸ்தான் கேட்டுக்கொண்டதன் பேரில், நேரடி இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் தாக்குதல் நிறுத்தப்பட்டதாகவும், எந்த வெளி தரப்பினரின் செல்வாக்கின் கீழும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறி, இந்தியா இந்தக் கூற்றை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
தெளிவுபடுத்தல்
டொனால்ட் டிரம்பிடம் கூறிய பிரதமர் நரேந்திர மோடி
இந்திய அதிகாரிகளின் கூற்றுப்படி, தாக்குதலை நிறுத்த பாகிஸ்தான் இந்தியாவை முதலில் அணுகியது. மேலும் இது வார தொடக்கத்தில் முன்னாள் அமெரிக்க அதிபர் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இடையேயான தொலைபேசி அழைப்பின் போது பிரதமர் மோடியால் டிரம்பிற்கு தெளிவுபடுத்தப்பட்டது. இதற்கிடையே, டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்கு வந்தவுடன் உக்ரைன்-ரஷ்யா போரை நிறுத்திவிடுவேன் எனக் கூறிய நிலையில், அவரால் எந்த போரையும் நிறுத்த முடியவில்லை என்பதுதான் நிதர்சனம் என்றும், தனது உள்நாட்டு அரசியலுக்காக இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்திவிட்டதாக தொடர்ந்து பரப்புரை செய்து வருகிறார் என்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் கூறப்படுகிறது.