Page Loader
பழமையான கோகர்ணா கோயிலில் இந்து வழக்கப்படி ரஷ்ய வீரரின் இறுதிச் சடங்குகள்
பழமையான கோகர்ணா கோயிலில் இந்து வழக்கப்படி ரஷ்ய வீரரின் இறுதிச் சடங்கு

பழமையான கோகர்ணா கோயிலில் இந்து வழக்கப்படி ரஷ்ய வீரரின் இறுதிச் சடங்குகள்

எழுதியவர் Sekar Chinnappan
Jun 21, 2025
12:50 pm

செய்தி முன்னோட்டம்

ஒரு தனித்துவமான மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக, கர்நாடகாவின் கோகர்ணாவில் உள்ள பண்டைய ஸ்ரீ மகாபலேஷ்வரர் கோயிலில், ரஷ்ய ராணுவ வீரர் செர்ஜி கிராப்லெவின் இறுதிச் சடங்குகள் இந்து வழக்கப்படி செய்யப்பட்டன. இந்து மதத்தின் தீவிரப் பின்பற்றுபவரான கிராப்லெவ், 18 ஆண்டுகளாக கோகர்ணாவுக்குத் தொடர்ந்து சென்று வந்தார், மேலும் வாரணாசியில் ஆன்மீகத் தீட்சையும் பெற்றார். ஆபத்துகள் இருந்தபோதிலும், சமீபத்தில் மீண்டும் ரஷ்ய ராணுவப் பணிக்குத் திரும்பினார். இந்நிலையில், ஏப்ரல் 28 அன்று போரில் கொல்லப்பட்டார். அவரது குடும்பத்தினர் இந்தியாவுக்கு வர முடியாததால், இறுதிச் சடங்குகளை வி. பிரசாந்த் ஹிரேகங்கே என்ற இந்து மதகுரு மூலம் நடத்தினர். அதே நேரத்தில் கிராப்லெவின் உறவினர் எலெனா வீடியோ அழைப்பு மூலம் இறுதிச் சடங்கில் பங்கேற்றார்.

வேத நடைமுறைகள்

முழு வேத நடைமுறைகளுடன் இறுதிச் சடங்கு

சடங்குகளில் ஆன்மா விடுதலை பெற உதவும் என்று நம்பப்படும் நெருப்பு சடங்கான நாராயணபலி மற்றும் முன்னோர்களை திருப்திப்படுத்த நெய் மற்றும் எள் விதைகளுடன் அரிசி உருண்டைகளை பாரம்பரியமாக வழங்கும் பிண்டா தானமும் செய்யப்பட்டது. கிராப்லெவின் ஆன்மீக நம்பிக்கைகளை மதிக்கும் வகையில் இவை முழு வேத நடைமுறைகளுடன் மேற்கொள்ளப்பட்டன. இறுதிச் சடங்கு நடைபெற்ற ஸ்ரீ மகாபலேஷ்வரர் கோயில், 4 ஆம் நூற்றாண்டில் கடம்ப வம்சத்தினரால் கட்டப்பட்ட ஒரு கோவிலாகும். மேலும், இது ஏழு முக்திஷேத்திரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கார்வார் கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள இந்தக் கோயில் குறிப்பிடத்தக்க ஆன்மீக மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது, யாத்ரீகர்களையும் சுற்றுலாப் பயணிகள் இங்கு அதிக அளவில் வருகின்றனர்.