
INDvsENG முதல் டெஸ்ட்: மூன்றாம் நாள் ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடுவது ஏன்?
செய்தி முன்னோட்டம்
லீட்ஸில் இந்தியா vs இங்கிலாந்து இடையே நடந்து வரும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது நாளில், மோட்டார் நியூரான் நோயால் (MND) பாதிக்கப்பட்டு 61 வயதில் காலமான முன்னாள் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டேவிட் சிட் லாரன்ஸுக்கு இரு அணிகளும் அஞ்சலி செலுத்தின. இரு அணி வீரர்களும் மரியாதை நிமித்தமாக கருப்பு பேட்ஜை கைகளில் அணிந்திருந்தனர். மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கும்போது, லாரன்ஸின் நினைவாக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் இங்கிலாந்து 209/3 என்ற நிலையில் மீண்டும் தனது இன்னிங்ஸைத் தொடங்கியது, ஓலி போப் மற்றும் ஹாரி புரூக் ஆகியோர் கிரீஸில் இருந்தனர்.
டேவிட் சிட் லாரன்ஸ்
டேவிட் சிட் லாரன்ஸ் புள்ளி விபரங்கள்
இங்கிலாந்து கிரிக்கெட்டில் குறிப்பிடத்தக்க ஒருவரான டேவிட் சிட் லாரன்ஸ், 1988 மற்றும் 1992 க்கு இடையில் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 18 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக விளையாடிய முதல் பிரிட்டிஷ் வம்சாவளியைச் சேர்ந்த கறுப்பின கிரிக்கெட் வீரர் இவர் என்பதுதான் இந்த சிறப்புக்கு காரணமாகும். மேலும், உள்நாட்டு கிரிக்கெட்டில் குளோசெஸ்டர்ஷையர் அணிக்காக நீண்டகாலம் விளையாடிய 185 முதல் தர போட்டிகளில் 515 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2022 ஆம் ஆண்டில், குளோசெஸ்டர்ஷயர் கவுண்டி கிரிக்கெட் கிளப்பின் முதல் கருப்பினத் தலைவரானார்.