Page Loader
டெஸ்ட் வரலாற்றில் மூன்றாவது முறை; கூட்டாக சாதனை படைத்த  யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில்
டெஸ்ட் வரலாற்றில் மூன்றாவது முறை; யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில் கூட்டாக சாதனை

டெஸ்ட் வரலாற்றில் மூன்றாவது முறை; கூட்டாக சாதனை படைத்த  யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில்

எழுதியவர் Sekar Chinnappan
Jun 21, 2025
11:45 am

செய்தி முன்னோட்டம்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷுப்மன் கில் ஆகியோர் முதல் நாளில் சதங்களை அடித்து வரலாறு படைத்துள்ளனர். அவர்களின் சிறப்பான ஆட்டத்தின் மூலம், இந்திய கிரிக்கெட் அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 359/3 ரன்கள் குவிக்க உதவியது. முன்னதாக, இங்கிலாந்து போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்த நிலையில், இந்திய அணி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 101 ரன்களும், கே.எல்.ராகுல் 42 ரன்களும் எடுத்தனர். சாய் சுதர்சன் டக்கவுட் ஆனாலும் ஷுப்மன் கில் 127 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 65 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இரண்டு பேர் சதம்

முதல் நாளில் இரண்டு வீரர்கள் சதம்

யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷுப்மன் கில் ஆகியோர் இந்த போட்டியின் முதல் நாளில் சதங்களை பதிவு செய்த மூன்றாவது இந்திய ஜோடி என்ற பெருமையை பெற்றுள்ளது. மேலும், எட்டு ஆண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் நாளில் இரண்டு இந்திய வீரர்கள் சதமடிப்பது இதுவே முதல்முறையாகும். 2001 ஆம் ஆண்டு ப்ளூம்ஃபோன்டைனில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்டின் போது சச்சின் டெண்டுல்கர் மற்றும் வீரேந்தர் சேவாக் ஆகியோர் முதல் முறையாக இந்த சாதனையை இந்திய அணிக்காக செய்தனர். அதற்குப் பிறகு, 2017 ஆம் ஆண்டில், ஷிகர் தவான் மற்றும் சேதேஷ்வர் புஜாரா இலங்கைக்கு எதிராக இந்த சாதனையைச் செய்த இரண்டாவது ஜோடி என்ற சிறப்பைப் பெற்றனர். இவர்களின் வரிசையில் தற்போது ஜெய்ஸ்வால்-கில் ஜோடி இணைந்துள்ளது.