Page Loader
SENA நாடுகளில் அதிக ரன்கள்; எம்எஸ் தோனியின் சாதனையை முறியடித்தார் ரிஷப் பண்ட்
SENA நாடுகளில் எம்எஸ் தோனியின் சாதனையை முறியடித்தார் ரிஷப் பண்ட்

SENA நாடுகளில் அதிக ரன்கள்; எம்எஸ் தோனியின் சாதனையை முறியடித்தார் ரிஷப் பண்ட்

எழுதியவர் Sekar Chinnappan
Jun 21, 2025
08:50 am

செய்தி முன்னோட்டம்

லீட்ஸில் உள்ள ஹெடிங்லியில் இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாளில், SENA நாடுகளில் அதிக டெஸ்ட் ரன்கள் எடுத்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற எம்எஸ் தோனியின் சாதனையை ரிஷப் பண்ட் முறியடித்துள்ளார். SENA நாடுகள் என்பது தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவற்றைக் குறிக்கும். எம்எஸ் தோனியின் சாதனையை முறியடிக்க ரிஷப் பண்டிற்கு 50 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், நிதானமான இன்னிங்ஸுடன் 65 ரன்கள் எடுத்து முதல் நாள் முடிவில் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆறு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களுடன் பண்டின் ஆட்டம், இந்தியாவுக்கு ஒரு முக்கியமான நேரத்தில் வந்தது.

அதிக சதங்கள்

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள்

மேலும் அவர் தொடர்ந்து சிறப்பாக செயல்படும்பட்சத்தில் இது அவரது ஏழாவது டெஸ்ட் சதமாகக் கூட மாறலாம். ஏற்கனவே ரிஷப் பண்ட் மற்றும் எம்எஸ் தோனி இருவரும் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆறு சதங்களை அடித்துள்ளனர். இதன் மூலம், இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்களில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதமடித்தவர்கள் பட்டியலில் இருவரும் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். மேலும், ஏழாவது சதத்தை ரிஷப் பண்ட் எடுத்தால், எம்எஸ் தோனியை பின்னுக்குத் தள்ளி தனிப்பெரும் சாதனையாளராக உருவெடுப்பார். இதற்கிடையே, போட்டியைப் பொறுத்தவரை முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்கள் குவித்து வலுவாக உள்ளது.