
ஈரான் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்க ராணுவ விமானங்கள் குண்டுமழை பொழிந்து தாக்குதல்
செய்தி முன்னோட்டம்
இஸ்ரேல்-ஈரான் மோதலின் குறிப்பிடத்தக்க அதிகரிப்பில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி நிலையங்களான ஃபோர்டோவ், நடான்ஸ் மற்றும் எஸ்ஃபஹான் மீது அமெரிக்கப் படைகள் நேரடி வான்வழித் தாக்குதல்களை நடத்தியதை உறுதிப்படுத்தினார். பி-2 ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானங்களை உள்ளடக்கிய இந்த பணி மிகவும் வெற்றிகரமாக இருந்ததாகவும், ஃபோர்டோவில் முழுமையாக குண்டுகளை வீசிய பின்னர் அனைத்து விமானங்களும் ஈரானிய வான்வெளியிலிருந்து பாதுகாப்பாக வெளியேறியதாகவும் டிரம்ப் சமூக வலைதள பதிவில் தெரிவித்தார். ஆபரேஷன் ரைசிங் லயன் கீழ் இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்களுடன் இணைந்து, மோதலில் அமெரிக்க ராணுவப் படைகளின் முதல் நேரடி ஈடுபாட்டை இது குறிக்கிறது.
அணுசக்தி
ஈரானின் அணுசக்தியை முழுமையாக தகர்க்கும் திட்டம்
ஈரானின் அணுசக்தி அபிலாஷைகளை தகர்க்கும் முயற்சியில் இஸ்ரேலிய தாக்குதல் ஈரானின் ராணுவ உள்கட்டமைப்பு, வான் பாதுகாப்பு மற்றும் அணு விஞ்ஞானிகளை குறிவைத்துள்ளது. பூமிக்கு அடியில் ஆழமாக புதனிந்துள்ள மையங்களைத் தாக்கும் திறன் கொண்ட மேம்பட்ட பதுங்கு குழி-பஸ்டர் குண்டுகளைப் பயன்படுத்தியுள்ளதை அமெரிக்க அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இதற்கு பதிலளிக்கும் விதமாக ஈரான் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. அமெரிக்காவின் தலையீடு சீர்படுத்த முடியாத சேதத்திற்கு வழிவகுக்கும் என்று உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி எச்சரித்தார். அதே நேரத்தில் ஈரானின் வெளியுறவு அமைச்சகம் இந்த தாக்குதல்களை முழுமையான போருக்கு முன்னோடியாகக் குறிப்பிட்டது. இந்த மோதல் ஏற்கனவே ஈரானில் பொதுமக்கள் உட்பட 657 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
அமைதி
அமைதிக்கான நேரம்
அதிகரித்து வரும் பதட்டங்கள் இருந்தபோதிலும், டொனால்ட் டிரம்ப் அமைதிக்கு அழைப்பு விடுத்து, "இப்போது அமைதிக்கான நேரம்" என்று கூறியுள்ளார். மேலும். இந்த தாக்குதலுக்குப் பிறகு, அவர் அமெரிக்கா மக்களிடம் உரையாற்ற உள்ளதாகவும் அறிவித்துள்ளார். இதற்கிடையே, தங்களுடைய இருப்புக்கான அச்சுறுத்தல்கள் அனைத்தும் நடுநிலையாக்கப்படும் வரை ஈரானில் இஸ்ரேலிய ராணுவ நடவடிக்கைகள் தொடரும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் உறுதிப்படுத்தினார். மேலும், அமெரிக்காவின் தாக்குதல் வரலாற்றை மாற்றும் எனக் கூறி, டொனால்ட் டிரம்பிற்கு வாழ்த்து தெரிவித்தார்.