தொழில்நுட்பம்: செய்தி
மெமரி சிப் சந்தையில் 70% வரை விலை உயர வாய்ப்பு - அதிரவைக்கும் AI புரட்சி
சர்வதேச மெமரி சிப் சந்தையில் 2026-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய விலை உயர்வு ஏற்படும் என்று சந்தை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
வைஃபை வேகம் நத்தை போல உள்ளதா? ராக்கெட் வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த இந்த டிப்ஸ் போதும்
இந்தியாவில் இன்டர்நெட் பயன்பாடு அதிகரித்து வரும் சூழலில், வீடுகளில் வைஃபை வேகம் குறைவது அல்லது அடிக்கடி துண்டிக்கப்படுவது பலருக்கும் பெரும் சவாலாக உள்ளது.
மைக்ரோசாஃப்ட் ஊழியர்களுக்குப் பேரதிர்ச்சி? 22,000 பேர் பணிநீக்கமா? மவுனம் கலைத்த நிறுவனம்
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இந்த ஜனவரி மாதத்தில் சுமார் 11,000 முதல் 22,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகப் பரவிய செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
மனிதர்களை மிஞ்சும் ஏஐ! 5 ஆண்டுகளில் உலகமே மாறும்? நிபுணர் வெளியிட்ட பகீர் எச்சரிக்கை
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மனிதர்கள் கற்பனை செய்ததை விட மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இது உலகிற்குப் பெரும் சவாலாக மாறக்கூடும் என்று பிரிட்டனின் ஏஐ பாதுகாப்பு நிபுணர் டேவிட் டால்ரிம்பிள் எச்சரித்துள்ளார்.
ஏஐ சாட்போட்களிடம் நீங்கள் ஒருபோதும் இதையெல்லாம் கேட்காதீங்க; நிபுணர்கள் எச்சரிக்கை
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கருவிகளான சாட்ஜிபிடி, க்ரோக் மற்றும் ஜெமினி போன்றவை இன்று இந்தியப் பயனர்களிடையே, குறிப்பாக மாணவர்கள் மற்றும் தொழில்முறை வல்லுநர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
உலகிலேயே முதல்முறை! இந்திய ராணுவ பீரங்கிகளில் ரேம்ஜெட் குண்டுகள்; ஐஐடி மெட்ராஸின் பிரம்மாண்ட கண்டுபிடிப்பு
இந்திய ராணுவம் தனது ஆயுத பலத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் வகையில், உலகிலேயே முதல்முறையாக ரேம்ஜெட் (Ramjet) தொழில்நுட்பத்தால் இயங்கும் பீரங்கி குண்டுகளைப் பயன்படுத்தத் தயாராகி வருகிறது.
2026 கனவுகளை நனவாக்க உதவும் கூகுள் ஜெமினி! ஏஐ மூலம் 'விஷன் போர்டு' உருவாக்குவது எப்படி?
புத்தாண்டில் நமது இலக்குகளைத் தெளிவுபடுத்தவும், அவற்றை அடைய உந்துதல் பெறவும் 'கனவுப் பலகை' (Vision Board) ஒரு சிறந்த கருவியாகும்.
பனியை மின்சாரமாக மாற்றும் ஜப்பானிய தொழில்நுட்பம்
வெப்பநிலை வேறுபாடுகளை பயன்படுத்தி பனியை மின்சாரமாக மாற்றும் ஒரு புரட்சிகரமான ஆற்றல் அமைப்பை ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் சோதித்து வருகின்றனர்.
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் புதிய ஏஐ வசதிகள்: இனி போட்டோக்களை மாற்ற தனி ஆப்ஸ் தேவையில்லை
வாட்ஸ்அப் நிறுவனம் தனது ஸ்டேட்டஸ் பகுதியில் மெட்டா செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புகைப்படங்களை எடிட் செய்யும் புதிய வசதிகளைச் சோதித்து வருகிறது.
இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவை தாமதமாவது ஏன்? மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா விளக்கம்
எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் உள்ளிட்ட செயற்கைக்கோள் இணையச் சேவைகள் இந்தியாவில் தொடங்குவதில் நிலவும் தாமதம் குறித்து மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா விளக்கம் அளித்துள்ளார்.
ஜெனரேட்டிவ் ஏஐ மீது நம்பிக்கை போய்விட்டது: 4,000 ஊழியர்களை நீக்கிய பிறகு சேல்ஸ்ஃபோர்ஸ் ஒப்புதல் வாக்குமூலம்
முன்னணி மென்பொருள் நிறுவனமான சேல்ஸ்ஃபோர்ஸ் (Salesforce), ஜெனரேட்டிவ் ஏஐ (Generative AI) தொழில்நுட்பத்தின் மீதான தனது அதீத நம்பிக்கையைக் குறைத்துக்கொள்வதாகத் தெரிவித்துள்ளது.
2025 இல் இந்தியாவில் அதிக சம்பளத்தை அள்ளித் தந்த டாப் 5 திறன்கள்: இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
இந்தியாவில் பொதுவாக ஒரு ஊழியருக்கு ஆண்டுக்கு 8 முதல் 12 சதவீத ஊதிய உயர்வு கிடைப்பதே பெரிய விஷயமாகக் கருதப்படுகிறது.
விசா கெடுபிடியால் இந்தியாவுக்கு அதிர்ஷ்டம்: முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் 32,000 பேருக்குப் புதிய வேலைவாய்ப்பு
அமெரிக்காவின் எச்1பி (H-1B) விசா விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மெட்டா, ஆப்பிள், கூகுள், அமேசான், மைக்ரோசாஃப்ட் மற்றும் நெட்ஃபிலிக்ஸ் போன்ற உலகளாவிய முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தியாவில் தங்களது ஆட்சேர்ப்பு நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளன.
கூகுளின் அதிரடி அப்டேட்: பழைய இமெயில் முகவரியை மாற்ற இனி புதிய கணக்கு தேவையில்லை
ஜிமெயில் பயனர்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, கூகுள் நிறுவனம் ஒரு புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது.
மெட்டா 2026இல் அறிமுகம் செய்யும் 'மேங்கோ' மற்றும் 'அவகேடோ' ஏஐ மாடல்கள்: முக்கிய விபரங்கள்
மெட்டா நிறுவனம் தனது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தில் அடுத்தகட்ட பாய்ச்சலுக்குத் தயாராகி வருகிறது.
வாட்ஸ்அப் GhostPairing மோசடி: உங்கள் ரகசியங்கள் திருடப்படும் புதிய தொழில்நுட்ப அச்சுறுத்தல்; பாதுகாத்துக் கொள்வது எப்படி?
வாட்ஸ்அப் செயலியில் தற்போது கண்டறியப்பட்டுள்ள GhostPairing எனும் மோசடி, சாதாரண ஆன்லைன் மோசடிகளை விட மிகவும் ஆபத்தானது.
கூகுளின் ரகசியத் திட்டம்: Torch TPU மூலம் என்விடியா நிறுவனத்திற்குப் போட்டியாக புதிய ஏஐ சிப்
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்திற்கான சிப் சந்தையில் தற்போது என்விடியா நிறுவனம் ஒருமித்த ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
தொழில்நுட்ப சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்தவும் இந்தியா விண்வெளி ஆய்வகங்களை அமைக்கவுள்ளது
இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் (IN-SPACe), அந்தரிக்ஷ் பிரயோக்ஷாலா என்று அழைக்கப்படும் அதிநவீன விண்வெளி ஆய்வகங்களை அமைப்பதற்கான ஒரு பெரிய முயற்சியை அறிவித்துள்ளது.
டீப்ஃபேக் வீடியோக்களைக் கண்டறியும் புதிய வசதி கூகுளின் ஜெமினி ஏஐ செயலியில் அறிமுகம்
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் உருவாக்கப்படும் டீப்ஃபேக் வீடியோக்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், அதைக் கண்டறிவதற்கான ஒரு புதியக் கருவியை கூகுள் தனது ஜெமினி செயலியில் அறிமுகப்படுத்தியுள்ளது.
குயிக் கட்: எடிட்டிங்கை எளிதாக்கும் புதிய தொழில்நுட்பம் ஸ்னாப்சாட்டில் அறிமுகம்
ஸ்னாப்சாட் நிறுவனம் தனது பயனர்கள் தங்களின் பழைய நினைவுகளை மிக வேகமாகவும் எளிதாகவும் வீடியோக்களாக மாற்றும் வகையில் 'குயிக் கட்' (Quick Cut) என்ற புதிய தொழில்நுட்பக் கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவின் முதல் உள்நாட்டு 64-பிட் ப்ராசெசர் DHRUV64 அறிமுகம்; அதன் முக்கியத்துவத்தை தெரிந்துகொள்வோம்
இந்தியா தனது முதல் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட 1GHz, 64-பிட் dual-core microprocessor-ஆன DHRUV64 ஐ வெளியிட்டுள்ளது.
சிட்னி துப்பாக்கிச் சூடு தொடர்பாக தவறான தகவலை பகிர்ந்த எலான் மஸ்கின் க்ரோக் ஏஐ
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள பாண்டி கடற்கரையில் நடந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து எலான் மஸ்கின் க்ரோக் ஏஐ (Grok AI) ஆனது தவறான மற்றும் சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்பியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
எலான் மஸ்க் புல்டோசர் போன்றவர்: மைக்ரோசாஃப்ட் ஏஐ சிஇஓ முஸ்தபா சுலேமான் கருத்து
மைக்ரோசாஃப்ட் ஏஐயின் தலைமைச் செயல் அதிகாரியான (சிஇஓ) முஸ்தபா சுலேமான் சமீபத்திய நேர்காணலில், செயற்கை நுண்ணறிவுப் (ஏஐ) புரட்சியை வடிவமைக்கும் முக்கிய ஆளுமைகள் குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்து ஏஐ துறையில் உலகின் மூன்றாவது போட்டித்தன்மை மிகுந்த நாடாக மாறியது இந்தியா
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையில் உலகிலேயே மூன்றாவது மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த நாடாக இந்தியா உயர்ந்துள்ளது என்று ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.
இனி ஹெட்போன் இருந்தால் போதும்; எந்த மொழியையும் புரிந்துகொள்ளலாம்! கூகுளில் புதிய அம்சம் அறிமுகம்
கூகுள் நிறுவனம் அதன் 'கூகுள் டிரான்ஸ்லேட்' (Google Translate) செயலியில் ஒரு முக்கியப் புதிய அம்சத்தை வெளியிட்டுள்ளது.
வாட்ஸ்அப்பில் விடுமுறைக் கால முக்கிய அப்டேட்: மிஸ்டு கால் மெசேஜ்கள், மேம்பட்ட ஏஐ படக் கருவிகள் அறிமுகம்
வாட்ஸ்அப் இந்த ஆண்டின் இறுதிப் பகுதியில், உலகளாவிய பயனர்களை இலக்காகக் கொண்டு, அழைப்புகள், அரட்டைகள், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கருவிகள் மற்றும் ஸ்டேட்டஸ் ஆகியவற்றை மேம்படுத்தும் ஒரு புதிய அப்டேட் தொகுப்பை வெளியிட்டுள்ளது.
இனி Spotify'இல் உங்கள் உணர்வுக்கேற்ற பாடல்கள் கேட்கலாம்! ஏஐ மூலம் புதிய அம்சம் அறிமுகம்
இசை ஸ்ட்ரீமிங் தளமான ஸ்பாடிஃபை (Spotify), பயனர்களின் இசைத் தேடல் அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் விதமாக, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் இயக்கப்படும் புதிய அம்சமான 'Prompted Playlists'யை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
ஆந்திராவைத் தொடர்ந்து தெலுங்கானா; ₹2,500 கோடியில் 48 MW தரவு மையத்தை அமைக்கிறது அதானி குழுமம்
தொழிலதிபர் கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமம், தெலுங்கானாவில் அதிநவீன செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பசுமைத் தரவு மையத்தை (Green Data Centre) அமைக்க உள்ளது.
எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எலான் மஸ்கின் Grok 4.20 ஏஐ மாடல்; சாட்ஜிபிடி, ஜெமினியை விஞ்சும் என தகவல்
எலான் மஸ்கின் xAI நிறுவனத்தின் அடுத்த பெரிய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மாடலான Grok 4.20, இன்னும் 3 முதல் 4 வாரங்களுக்குள் வெளியிடப்படும் என்று எலான் மஸ்க் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
150 நாடுகளில் அரசு ஆதரவு ஹேக்கர்களின் சைபர் தாக்குதல்கள்: ஆப்பிள், கூகுள் நிறுவனங்கள் உலகளாவிய எச்சரிக்கை
அரசுகளின் ஆதரவு பெற்ற ஹேக்கிங் குழுக்கள் தனிநபர் சாதனங்களைத் தாக்க முயற்சிப்பதாக ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் உலகம் முழுவதும் உள்ள 150க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள தங்களது பயனர்களுக்குப் புதிய அச்சுறுத்தல் எச்சரிக்கைகளை விடுத்துள்ளன.
சாட்ஜிபிடி போலவே எழுதவும் பேசவும் தொடங்கிவிட்ட மனிதர்கள்; புதிய ஆய்வில் வெளியான தகவல்
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கருவிகள் இணையத்தை ரோபோட்டிக் எழுத்துக்களால் நிரப்பிவிடும் என்று நீண்ட காலமாக இருந்த கவலைக்கு மத்தியில், ஒரு புதிய ஆய்வு மக்கள் தாங்களாகவே சாட்ஜிபிடி போன்றே பேசவும் எழுதவும் தொடங்கியுள்ளனர் என்ற ஆச்சரியமான உண்மையை வெளிப்படுத்தியுள்ளது.
இனி கோடிங் படிப்பவர்களுக்கு வேலை இருக்குமா? ஏஐ நிபுணர் சொல்வதைக் கேளுங்க
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) வளர்ச்சியால், கோடிங் திறன் விரைவில் மதிப்பிழக்கும் என்ற கருத்து தொழில்நுட்பத் துறையில் அதிகரித்து வருகிறது.
ஏஐ விரைவில் 80% வேலைகளை அழிக்கும்: தலைமைச் செயல் அதிகாரிகள் உட்பட யாருக்கும் பாதுகாப்பு இல்லையாம்! நிபுணர் எச்சரிக்கை
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் முன்னோடியான ஸ்டூவர்ட் ரஸ்ஸல், ஏஐ'யின் தாக்கம் குறித்துப் பேசியபோது, விரைவில் உலகில் உள்ள வேலைகளில் 80% க்கும் அதிகமானவை நீக்கப்படலாம் என்று எச்சரித்துள்ளார்.
டிகிரி அப்புறம்தான்; இந்தத் திறமைதான் ஏஐ உலகில் உங்களை மதிப்புமிக்கவராக்கும்: மைக்ரோசாஃப்ட் சிஇஓ அறிவுரை
பணியிடங்களில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ள நிலையில், மைக்ரோசாஃப்ட் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) சத்யா நாதெள்ளா, இன்று நிலையில் மிகவும் முக்கியமான திறன் 'உணர்ச்சி நுண்ணறிவு' (Emotional Intelligence) தான் என்று வலியுறுத்தியுள்ளார்.
உங்கள் லேப்டாப் மெதுவாக ஒர்க் ஆகிறதா? அதை நீங்களே சரி செய்து விடலாம்
நீங்கள் இன்னும் விண்டோஸ் 10 ஐ பயன்படுத்துகிறீர்கள் என்றால், உங்கள் கணினி வழக்கத்தை விட மெதுவாக இயங்குவதை நீங்கள் கவனித்திருக்கலாம்.
கூகுள் புகைப்படங்கள் 2025 ரீகேப் வெளியீடு: உங்களின் இந்த ஆண்டை ஒரு ஹைலைட் ரீலாகக் காணும் வசதி
கூகுள் போட்டோஸ் (Google Photos) அதன் 2025 ஆம் ஆண்டிற்கான ரீகேப் (Recap) அம்சத்தை உலகளவில் வெளியிட்டுள்ளது.
இனி இன்டர்நெட் இல்லாமலேயே மொபைலில் வீடியோ, லைவ் கிரிக்கெட் பார்க்கலாம்: வருகிறது 'D2M' தொழில்நுட்பம்
இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் தினசரி திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் நேரடி விளையாட்டு நிகழ்வுகளை மொபைல் போன்களில் பார்க்கிறார்கள்.
ஸ்மார்ட்போன் அடிமைத்தனத்தைக் குறைக்க பழைய லேண்ட்லைன் வடிவில் போன்; அறிமுகமான 3 நாட்களில் ₹1 கோடி வருமானம்
சமூக ஊடகங்களின் ஆதிக்கத்தால் அதிகரித்துவரும் ஸ்மார்ட்போன் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில், ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனர், பழைய கால லேண்ட்லைன் தொலைபேசி போன்ற வடிவமைப்பைக் கொண்ட ஒரு சாதனத்தை உருவாக்கியுள்ளார்.
பணியில் இருப்பவர்களுக்காக ஏஐ தலைமையியல் ஆன்லைன் படிப்பு ஐஐடி மும்பையில் அறிமுகம்; யாரெல்லாம் சேரலாம்?
இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி) மும்பை, அதன் ஷைலேஷ் ஜே.மேத்தா மேலாண்மைக் கல்விப் பிரிவும் (SJMSOM) கிரேட் லேர்னிங் (Great Learning) தொழில்நுட்பக் கல்வி நிறுவனமும் இணைந்து, நடுத்தர மற்றும் மூத்த நிலை நிர்வாகிகளுக்கான 'ஏஐ தலைமையியல்' (Leadership with AI) என்ற நான்கு மாத ஆன்லைன் சான்றிதழ் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
பலே கண்டுபிடிப்பா இருக்கே! பசியைக் கண்டறிந்து தானாக உணவு ஆர்டர் செய்யும் செயற்கை நுண்ணறிவு சாதனம்
மங்களூரைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனர் மற்றும் கன்டென்ட் கிரியேட்டரான சோஹன் எம். ராய், ஒரு புதுமையான செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சாதனத்தை உருவாக்கியுள்ளார்.