உலகம் செய்தி
உலகில் எவைவெல்லாம் செய்தியாக உருவாகின்றதோ, அவை சுடச்சுட உங்கள் பார்வைக்கு இங்கே.
கப்பலில் பரவிய மர்ம வைரஸ்: 3 பேர் பலி; விமானப் பயணிகளுக்கு வலைவீச்சு
தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் பயணம் செய்த 'எம்.வி. ஹோண்டியஸ்' என்ற சொகுசுக் கப்பலில் ஹண்டாவைரஸ் (Hantavirus) தொற்று பரவியதில் மூன்று பேர் உயிரிழந்துள்ள சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உலகப்போரைத் தவிர்க்கும் ட்ரம்ப்? ஈரானுடன் திடீர் உடன்பாடு
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரான் மீதான ராணுவ நடவடிக்கையான 'புராஜெக்ட் ஃப்ரீடம்' தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்க ராணுவத்தின் முக்கிய போயிங் கேசி-135 விமானம் கத்தார் வான்பரப்பில் காணாமல் போனது
அமெரிக்க இராணுவத்தின் மிக முக்கியமான வான்வழி எரிபொருள் நிரப்பும் விமானமான போயிங் கேசி-135 ஸ்ட்ராடோடேங்கர், கத்தார் வானத்தில் காணாமல் போயுள்ளது.
ஜெர்மானியர்கள் தங்கள் குடும்பத்தின் நாஜி கடந்த காலத்தைக் கண்டறிய உதவுகிறது புதிய இணையவழித் தரவுத்தளம்
ஜெர்மன் செய்தித்தாளான 'டை ஸைட்' (Die Zeit) அறிமுகப்படுத்திய ஒரு இணையவழித் தரவுத்தளம், பல ஜெர்மானியர்களின், அவர்களின் மூதாதையர்கள் உட்பட, நாஜி கட்சி உறுப்பினர் விவரங்களை வெளிப்படுத்தியுள்ளது.
அமெரிக்கக் கப்பல்கள் தாக்கப்பட்டால் ஈரான் தரைமட்டமாக்கப்படும்: டிரம்ப் எச்சரிக்கை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், "ஈரான் அணு ஆயுதம் வைத்திருப்பதை அமெரிக்காவால் அனுமதிக்க முடியாது" என்று கூறி, ஈரானுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சீனாவில் பயங்கரம்! பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 21 பேர் உயிரிழப்பு
மத்திய சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள பட்டாசுத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் சுமார் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
வளைகுடா நாடுகளில் மீண்டும் போர் மேகங்கள்; 12 ஏவுகணைகளால் அமீரகம் மீது தாக்குதல்
மே 4 அன்று ஹார்முஸ் நீரிணை மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) அடுத்தடுத்து நிகழ்ந்த ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் கடற்படை மோதல்கள் காரணமாக, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேற்காசிய போரில் அதிரடித் திருப்பம்: 14 அம்ச அமைதித் திட்டத்தை முன்வைத்தது ஈரான் - டொனால்ட் ட்ரம்ப்பின் ரியாக்ஷன் என்ன?
மேற்காசியப் பகுதியில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நீடித்து வரும் கடும் போரை முடிவுக்குக் கொண்டு வர ஈரான் ஒரு புதிய ராஜதந்திர நகர்வை மேற்கொண்டுள்ளது.
லஷ்கர் பயங்கரவாதிகள் பலி; ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை உறுதிப்படுத்திய பாகிஸ்தான் போஸ்டர்கள்!
இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' (Operation Sindoor) நடவடிக்கையால் தங்களுக்கு ஏற்பட்ட பேரிழப்புகளை, பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா (LeT) முதல்முறையாகப் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளது.
ஈரான் ட்ரோன்களை வேட்டையாடும் இஸ்ரேலின் 'அயர்ன் பீம்': அமீரகத்திற்குப் பாதுகாப்பு அரண்!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மூண்டுள்ள போர், ஐக்கிய அரபு அமீரகத்தையும் ஒரு முக்கிய போர்க்களமாக மாற்றியுள்ளது.
வன்முறைக்கு துணைபோகும் காலிஸ்தான் தீவிரவாதம்: கனடா உளவுத்துறை கடும் எச்சரிக்கை!
கனடா நாட்டின் உளவுத்துறை (CSIS) வெளியிட்டுள்ள சமீபத்திய பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கை, சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹார்முஸ் நீரிணையில் 'ப்ராஜெக்ட் ஃப்ரீடம்': சிக்கியுள்ள கப்பல்களை மீட்க அமெரிக்கா களம் இறங்கியது
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) சிக்கித் தவிக்கும் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு வணிகக் கப்பல்களை பாதுகாப்பாக வெளியேற்றும் நோக்கில் 'Project Freedom' என்ற புதிய திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவிற்கு ஈரான் கொடுத்த புதிய ஆஃபர்: அணுசக்தி தளர்வு மற்றும் பொருளாதார மீட்சி சாத்தியமா?
பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தரப்பிலிருந்து ஈரான் மீது தொடங்கப்பட்ட ராணுவ நடவடிக்கைகளால் உருவான போர்ச் சூழல், ஏப்ரல் 8 முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
"ஈரான் இன்னும் பெரிய விலையைக் கொடுக்க வேண்டும்!" டிரம்பின் அடுத்த மூவ்வால் மேற்கு ஆசியாவில் மீண்டும் பதற்றம்
மேற்கு ஆசியாவில் அமைதியை நிலைநாட்ட ஈரான் அனுப்பிய 14 அம்சத் திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆய்வு செய்து வரும் அதே வேளையில், அந்நாட்டின் மீது மீண்டும் ஒரு ராணுவத் தாக்குதல் நடத்தப்படும் என்ற பகீர் எச்சரிக்கையையும் அவர் விடுத்துள்ளார்.
ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த அல்டிமேட்டம்! இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளுக்கு குவியும் அமெரிக்க ஆயுதங்கள்: பின்னணி என்ன?
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரான் உடனான போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், தனது முக்கிய நட்பு நாடுகளான இஸ்ரேல், குவைத், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவற்றிற்கு 8.6 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ தளவாடங்களை விற்பனை செய்ய அமெரிக்க வெளியுறவுத்துறை வெள்ளிக்கிழமை (மே 1) ஒப்புதல் அளித்துள்ளது.
நேட்டோ கூட்டணியில் விரிசல்! ஜெர்மனிக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப்: அமெரிக்கத் துருப்புகள் வாபஸ் பெறப்படுவது ஏன்?
ஈரான் போர் விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான மோதல் வலுத்து வரும் நிலையில், ஜெர்மனியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள 5,000 அமெரிக்கத் துருப்புகளைத் திரும்பப் பெறுவதாக பென்டகன் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
கார் விலைகள் உயருமா? ஐரோப்பிய நாடுகளுக்கு டிரம்ப் விடுத்த கடும் எச்சரிக்கை: 25% வரி உயர்வு பின்னணி
அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் (EU) இடையிலான வர்த்தகப் போர் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
டார்க் ஈகிள் என்றால் என்ன? ஈரானுக்கு எதிராகப் பயன்படுத்த அமெரிக்கா பரிசீலித்து வரும் ஒரு அதிவேக ஏவுகணை
தற்போது நடைபெற்று வரும் ஈரான் மோதலில், அமெரிக்கா தனது மிகவும் மேம்பட்ட அதிவேக ஆயுதங்களில் ஒன்றான 'டார்க் ஈகிள்'-ஐ நிலைநிறுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவில் போய் படித்தும், அங்கு வேலை கிடைக்காததால் ஆந்திராவை சேர்ந்த நபர் தற்கொலை
ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதான மாணவர் இரகனபோயினா சந்து, அமெரிக்காவில் தற்கொலை செய்துகொண்டார்.
'பல போர்களை நிறுத்தியதற்காக' 2026-ஆம் ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசுக்கு டொனால்ட் டிரம்ப் பரிந்துரைக்கப்பட்டார்: அறிக்கை
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், 2026 ஆம் ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிராந்திய பதற்றங்களுக்கு மத்தியில் ஈரான், லெபனான், ஈராக் ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்ய UAE தடை விதித்துள்ளது
ஐக்கிய அரபு அமீரகம் (UAE) தனது குடிமக்கள் ஈரான், லெபனான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்வதற்குத் தடை விதித்துள்ளது.
ஏரியா 51 அருகே ஏற்பட்ட நிலநடுக்கங்கள் அணு ஆயுத சோதனை சந்தேகங்களை தூண்டுகின்றன
அதி உயர் இரகசியத் தகவல் கொண்ட அமெரிக்க விமானப்படை தளமான ஏரியா 51- க்கு அருகில், தொடர்ச்சியாக குறைந்தது 17 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.
அமெரிக்காவின் புதிய 'வாட்ச் லிஸ்ட்' பட்டியல்: இந்தியாவுக்கு மீண்டும் நெருக்கடி கொடுக்கும் டொனால்ட் டிரம்ப் அரசு
அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் நேற்று வெளியிட்ட 2026-ஆம் ஆண்டின் சிறப்பு 301 அறிக்கையில், அறிவுசார் சொத்துரிமை(IPR) பாதுகாப்பு மற்றும் அமலாக்கத்தில் உள்ள குறைபாடுகளைக் காரணம் காட்டி, இந்தியாவை மீண்டும் தனது 'முன்னுரிமை கண்காணிப்புப் பட்டியலில்' சேர்த்துள்ளது.
அமெரிக்காவைப் பதற வைக்கும் பெட்ரோல் விலை! ஒரு கேலன் $4.40 ஆக உயர்வு; ஈரான் போரால் சாமானிய மக்கள் பாதிப்பு
ஈரான் போர் காரணமாக உலகளாவிய எரிசக்தி சந்தையில் ஏற்பட்டுள்ள இடையூறுகளால், அமெரிக்காவில் பெட்ரோல் விலை ஒரு கேலனுக்கு (Gallon) $4.40 ஆக உயர்ந்துள்ளது.
ஈரான் போர் ஏற்கனவே 'முடிந்துவிட்டது': டிரம்ப் அரசு திடீர் விளக்கம்! ஏன் இந்த திடீர் அறிவிப்பு?
ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளுக்கான 60 நாள் சட்டப்பூர்வக் கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில், டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் ஒரு புதிய மற்றும் வியக்கத்தக்க சட்ட வாதத்தை முன்வைத்துள்ளது.
ஈரானுடன் நடப்பது போர் கணக்கில் வராது: அதிபர் டிரம்ப் பல்டி
சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைகள் குறித்துப் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இது ஒரு போர் அல்ல என்றும், ஈரானின் ராணுவக் கட்டமைப்பு முற்றிலும் சிதைக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இன்றுடன் கெடு முடிந்தது; அமெரிக்கா -ஈரான் போர் நிற்குமா? நாடாளுமன்ற அனுமதி இல்லாமல் போர் நீடிக்குமா?
ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கை தொடங்கி இன்றுடன் (மே 1, 2026) 60 நாட்கள் நிறைவடைகின்றன.
ஈரானை தாக்கத் தயாராகும் அமெரிக்கா? டிரம்பின் மேசையில் 3 போர்க்காலத் திட்டங்கள்
ஈரான் உடனான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மேசைக்கு மூன்று மிகமுக்கியமான ராணுவ தாக்குதல் திட்டங்கள் (Operational Options) கொண்டு செல்லப்பட்டுள்ளன.
காணாமல் போன 11 டன் யுரேனியம்! அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்குப் பிறகு ஈரானில் என்ன நடக்கிறது?
அமெரிக்காவின் ராணுவத் தாக்குதல்களுக்குப் பிறகு, ஈரானிடம் இருந்த சுமார் 11 டன் எடையுள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியம் தற்போது எங்கே இருக்கிறது என்பது குறித்த கவலைகள் சர்வதேச அளவில் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளன.
பாகிஸ்தானில் அடுத்தடுத்து கொல்லப்படும் தீவிரவாத தலைவர்கள்; மர்மமான முறையில் கொல்லப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது தளபதி
பாகிஸ்தானின் பஹவல்பூர் பகுதியில், தடை செய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது (JeM) பயங்கரவாத அமைப்பின் முக்கியத் தளபதியான மௌலானா சல்மான் அசார் புதன்கிழமை அன்று மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
'எங்கள் செலவு 800 மில்லியன் டாலரை எட்டியுள்ளது':ஈரான் போரினால் பாகிஸ்தான் பொருளாதாரத்தில் தாக்கம்
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நடைபெற்று வரும் மோதல், தனது நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாகப் பாதித்துள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார்.
'ஹார்முஸ் நீரிணை இனி என் பெயரில்!' அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ட்வீட்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்களுக்கு இடையே, உலகளாவிய கச்சா எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய வழித்தடமான 'ஹார்முஸ் நீரிணை' (Strait of Hormuz) என்பதைத் தனது பெயரில் 'டிரம்ப் நீரிணை' (Strait of Trump) என மாற்றியமைக்க வேண்டும் என்ற பதிவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார்.
ஈரானை நிலைகுலையச் செய்யும் அமெரிக்காவின் கடற்படை முற்றுகை: டிரம்பின் அடுத்த மூவ் என்ன?
ஈரான் உடனான பேச்சுவார்த்தையில் நீடிக்கும் முட்டுக்கட்டையை உடைக்க, அந்நாட்டின் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்த CENTCOM திட்டமிட்டுள்ளது.
60 நாட்களில் ரூ.2 லட்சம் கோடி காலி: ஈரான் போருக்காக அமெரிக்கா செலவழித்த மலைக்க வைக்கும் தொகை
ஈரான் உடனான போர் தொடங்கி 60 நாட்களை நெருங்கி வரும் நிலையில், அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் முதன்முறையாக போருக்கான செலவு விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
"கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் திருப்பிக் கொடுங்கள்!": மன்னர் சார்லஸிடம் கோரிக்கை வைக்கப்போவதாக நியூயார்க் மேயர் தெரிவித்தார்
பிரிட்டன் மன்னர் சார்லஸ் தற்போது அமெரிக்காவிற்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், நியூயார்க் நகர மேயர் ஜோஹ்ரான் மம்தானி அவரிடம் வரலாற்றுச் சிறப்புமிக்க கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு வலியுறுத்த போவதாக தெரிவித்துள்ளார்.
ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த இறுதி எச்சரிக்கை! முறிந்த பேச்சுவார்த்தை.. போர் தீவிரமாகுமா?
ஈரான் உடனான போர் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், "இனி என்னிடம் நல்லப்பிள்ளைத்தனத்தை எதிர்பார்க்க முடியாது" என்ற எச்சரிக்கையை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் புதுப்பித்துள்ளார்.
அக்டோபர் 7 தாக்குதல் சம்பவத்தைத் திட்டமிட உதவிய ஹமாஸ் உளவுத்துறை அதிகாரி கொல்லப்பட்டார்: இஸ்ரேல்
ஹமாஸின் மூத்த இராணுவ உளவுத்துறை அதிகாரியான இயாத் அகமது அப்துல் ரஹ்மான் ஷம்பாரி கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) அறிவித்துள்ளது.
கூகுள், மெட்டா, டிக்டாக்கிற்கு ஆஸ்திரேலியா அதிரடி செக்! செய்திகளுக்கு பணம் கொடுக்காவிட்டால் ஆபத்து
ஆஸ்திரேலிய அரசாங்கம் சர்வதேச தொழில்நுட்ப ஜாம்பவான்களான கூகுள், மெட்டா (ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்) மற்றும் டிக்டாக் ஆகியவற்றுக்கு எதிராக ஒரு அதிரடியான புதிய சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.
ஈரான் போர் குறித்து டிரம்ப் ஏமாற்றப்படுகிறாரா? துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் எழுப்பியுள்ள பகீர் சந்தேகம்
ஈரான் உடனான போர் எட்டாவது வாரமாக நீடித்து வரும் நிலையில், அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு போரின் உண்மையான நிலவரம் குறித்து முழுமையான தகவல்கள் சென்றடைகிறதா என்ற கேள்வியை துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் எழுப்பியுள்ளார்.
ஈரானின் வேலைவாய்ப்பு நெருக்கடி: போரினால் 20 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர்
ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையேயான தற்போதைய மோதல், நாட்டில் ஒரு பெரிய வேலைவாய்ப்பு நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.