LOADING...
ஈரான் போர் ஏற்கனவே 'முடிந்துவிட்டது': டிரம்ப் அரசு திடீர் விளக்கம்! ஏன் இந்த திடீர் அறிவிப்பு?
டிரம்ப் நிர்வாகம் ஒரு புதிய மற்றும் வியக்கத்தக்க சட்ட வாதத்தை முன்வைத்துள்ளது

ஈரான் போர் ஏற்கனவே 'முடிந்துவிட்டது': டிரம்ப் அரசு திடீர் விளக்கம்! ஏன் இந்த திடீர் அறிவிப்பு?

எழுதியவர் Venkatalakshmi V
May 01, 2026
11:22 am

செய்தி முன்னோட்டம்

ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளுக்கான 60 நாள் சட்டப்பூர்வக் கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில், டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் ஒரு புதிய மற்றும் வியக்கத்தக்க சட்ட வாதத்தை முன்வைத்துள்ளது. ஏப்ரல் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தம் காரணமாக, ஈரானுடனான மோதல் ஏற்கனவே முடிவுக்கு வந்துவிட்டதாகவும், அதனால் 60 நாள் கெடுவிற்கான சட்டம் தங்களுக்குப் பொருந்தாது என்றும் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நாடாளுமன்றத்தின் அனுமதியை பெறாமல் ராணுவத்தைத் தொடர்ந்து பயன்படுத்த இந்த புதிய சட்ட விளக்கம் வழிவகை செய்கிறது.

போர்

"போர் முடிந்துவிட்டது": புதிய சட்ட விளக்கம்

1973-ஆம் ஆண்டு போர் அதிகாரத் தீர்மானத்தின் படி, அதிபர் நாடாளுமன்றத்தின் சிறப்பு அனுமதியின்றி 60 நாட்களுக்கு மேல் வெளிநாடுகளில் ராணுவ நடவடிக்கைகளை நீட்டிக்க முடியாது. "பிப்ரவரி 28-ஆம் தேதி தொடங்கிய நேரடி மோதல்கள் அனைத்தும் சட்டப்பூர்வமாக முடிவுக்கு வந்துவிட்டன" என்று டிரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 7-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த இரண்டு வாரப் போர் நிறுத்தத்திற்குப் பிறகு, அமெரிக்கப் படைகளும் ஈரானும் ஒருமுறை கூட நேரடித் தாக்குதலில் ஈடுபடவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சட்டத்திலுள்ள ஓட்டை

சட்டத்தை கடந்து செல்லும் டிரம்ப்

இந்த 60 நாள் கெடுவை நீட்டிக்க அதிபருக்கு மேலும் 30 நாட்கள் அவகாசம் கோர சட்டத்தில் இடமுண்டு. இருப்பினும், தற்போதைய சூழலில் டிரம்ப் நிர்வாகம் அந்த அவகாசத்தைக் கோரப்போவதில்லை என்று தெரிகிறது. போர் நிறுத்தம் அமலில் இருக்கும்போது, 60 நாள் காலக்கெடுவிற்கான கடிகாரம் தானாகவே நின்றுவிடும் என்று பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் நேற்று நாடாளுமன்றத்தில் வாதிட்டார். இந்த வாதத்தை திட்டவட்டமாக மறுத்துள்ள ஜனநாயகக் கட்சியினர், டிரம்ப் சட்டத்தை மீறிச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளனர். இருப்பினும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியரசுக் கட்சியினர் பெரும்பான்மையாக இருப்பதால் டிரம்பின் நடவடிக்கையைத் தடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement