
யாருக்குதான் பிரச்சினை இல்ல? குபேரா பட விழாவில் ஓபனாக பேசிய நடிகர் தனுஷ்
செய்தி முன்னோட்டம்
தனுஷ், நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் இயக்குனர் சேகர் கம்முலா இயக்கிய பான் இந்தியா திரைப்படமான குபேரா படத்தின் ப்ரீ-ரிலீஸ் ஈவன்ட் ஹைதராபாத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) நடைபெற்றது.
ஜூன் 20 ஆம் தேதி திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியாகவுள்ள நிலையில், இந்த நிகழ்வு ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது.
பிரபல திரைப்பட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் பேசிய நடிகர் தனுஷ், தெலுங்கு சினிமாவின் பவர் ஸ்டார் என போற்றப்படுபவரும், ஆந்திராவின் தற்போதைய துணை முதல்வருமான பவன் கல்யாணுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக தெரிவித்தார்.
நிதி
நிதி நெருக்கடி
இந்த நிகழ்வில் நிதி நெருக்கடிகள் குறித்து வெளிப்படையாகப் பேசிய நடிகர் தனுஷ், "எல்லா நிலைகளிலும் சிக்கல்கள் உள்ளன.
நீங்கள் ₹150 சம்பாதிக்கும்போது, செலவுகள் ₹200 ஆக உயர்கின்றன. ₹1 கோடி இருந்தாலும், ₹2 கோடி மதிப்புள்ள பிரச்சினைகளை எதிர்கொள்கிறீர்கள்." என்றார்.
அனைத்து சவால்களையும் மீறி, தாயின் அன்பை மட்டுமே நாம் உண்மையிலேயே இலவசமாகப் பெறுகிறோம் என்று அவர் வலியுறுத்தினார்.
இதற்கிடையே, நிகழ்வில் ராஷ்மிகா மந்தனா பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தார்.
குறிப்பாக நடிகர் விஜய் தேவரகொண்டாவின் பெயர் குறிப்பிடப்பட்டபோது, அவர் வெட்கப்பட்டது கூட்டத்தினரிடமிருந்து பலத்த ஆரவாரத்தைப் பெற்றது.
குபேரா படத்தின் டிரெய்லரும் இந்த விழாவில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.