
தமிழகம்: ஆறு மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை - நீலகிரியின் நான்கு தாலுகாவில் பள்ளிக்கு விடுமுறை
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று, ஜூன் 16 கனமழை எச்சரிக்கையினை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
குறிப்பாக நீலகிரியில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டதால், மாவட்டத்தில் உள்ள நான்கு தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாற்றம் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என எச்சரித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றிலிருந்து ஜூன் 20 வரை மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#BREAKING | நீலகிரியில் 4 வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு!#SunNews | #Nilgiris | #SchoolsLeave pic.twitter.com/RA21NjUinJ
— Sun News (@sunnewstamil) June 16, 2025
நீலகிரி
நீலகிரிக்கு ஆரஞ்சு அலர்ட்
நீலகிரியில் இன்று கனமழை எதிர்பார்க்கப்படுவதால், மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (ஜூன் 16) ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா வெளியிட்டுள்ளார்.
கோவை மாவட்டத்தின் வால்பாறை தாலுகாவிலும் கனமழை காரணமாக, அந்த பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார்.
மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் தென் மாவட்ட கடலோர பகுதிகளில் இன்று மற்றும் நாளை மணிக்கு 35-45 கி.மீ. வேகத்தில், இடையே 55 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் எனவும், மீனவர்கள் கடலில் செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.