வணிகம் செய்தி
பாமர மக்களுக்கும் புரியும்படியான, கலப்படமற்ற வணிகச் செய்திகளை இங்கே படிக்கவும்.
வயதானவர்களுக்கு உதவ இப்போது உபரின் புதிய திட்டம்!
உபர் நிறுவனம், வயதான பயனர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 'சீனியர் அக்கவுண்ட்ஸ்' என்ற புதிய வகையை அறிமுகப்படுத்தியுள்ளது.
விசாவின் தினசரி பரிவர்த்தனை அளவை UPI முந்தவுள்ளது
இந்தியாவின் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI), தினசரி பரிவர்த்தனை அளவின் அடிப்படையில், கட்டண நிறுவனமான விசாவை முந்திச் செல்லும் விளிம்பில் உள்ளது.
இந்தியாவின் சேவைத் துறை 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்வு
இந்தியாவின் சேவைகள் துறை செயல்பாடு குறிப்பிடத்தக்க உயர்வைக் கண்டுள்ளது, மே மாதத்தில் மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு 58.8 ஆக உயர்ந்துள்ளது.
இன்று முதல், எஃகு, அலுமினியம் மீதான இறக்குமதி வரிகளை 50% ஆக உயர்த்தும் அமெரிக்கா
அமெரிக்காவின் வர்த்தகத்தை விரிவுபடுத்தும் விதமாக, இறக்குமதி செய்யப்படும் எஃகு மற்றும் அலுமினியம் மீதான வரிகளை 50 சதவீதமாக உயர்த்தும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
போலி வேலைவாய்ப்புக்காக பணம் செலுத்தும் சீன இளைஞர்கள்; என்ன காரணம்?
சீனாவில், மில்லியன் கணக்கான இளைஞர்கள் "வேலை செய்வது போல பாசாங்கு" (pretend-to-work) செய்யும் அலுவலகங்களுக்கு திரண்டு வரும் ஒரு புதிய போக்கு உருவாகி வருகிறது.
ஈரான் மீதான தடைகளை மீறி வர்த்தகம் செய்ததாக அதானி குழுமத்தின் மீது அமெரிக்காவில் விசாரணை
திங்களன்று (ஜூன் 2) வெளியிடப்பட்ட வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (WSJ) அறிக்கையின்படி, ஈரான் மீதான தடைகளை மீறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அமெரிக்க நீதித்துறை (DOJ) அதானி குழுமத்தின் மீது விசாரணையைத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
வாரத் தொடக்கத்திலேயே ஷாக் கொடுத்த தங்கம் விலை; ஒரே நாளில் இரண்டாவது முறையாக உயர்வு
திங்கட்கிழமை (ஜூன் 2) தங்கத்தின் விலை இரண்டு முறை உயர்வைச் சந்தித்துள்ளது. இது ஆபரணங்கள் தொடர்பான சந்தையில் வாரத்தின் நிலையற்ற தொடக்கத்தைக் குறிக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல்
அதிகரிக்கும் செலவுகள் மற்றும் வரிச் சுமைகள் இருந்தபோதிலும், கடந்த பத்தாண்டுகளில் பறப்பதற்கான உண்மையான செலவு 40 சதவீதம் குறைந்துள்ளது என்று 42 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின் (IATA) ஆண்டு பொதுக் கூட்டத்தில் இயக்குநர் ஜெனரல் வில்லி வால்ஷ் கூறினார்.
இனி சேமிப்பு கணக்கில் மினிமம் பேலன்ஸ் தேவையில்லை; கனரா வங்கி வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்
வாடிக்கையாளர் வசதியை மேம்படுத்தும் நோக்கில், அரசுக்குச் சொந்தமான கனரா வங்கி ஜூன் 1, 2025 முதல் அதன் அனைத்து சேமிப்பு வங்கி (SB) கணக்குகளிலும் சராசரி மாதாந்திர இருப்பு (AMB) தேவையைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது.
ஜூன் மாதத் தொடக்கத்திலேயே ஷாக் கொடுத்த தங்க விலை; இன்றைய (ஜூன் 2) விலை நிலவரம்
மே மாதத்தில் விலை ஏற்ற இறக்கங்களைக் கண்ட பிறகு, திங்கட்கிழமை (ஜூன் 2) அன்று சென்னையில் தங்கத்தின் விலைகள் உயர்ந்தன.
இந்தியாவின் மே மாத ஜிஎஸ்டி வசூல் 16.4 சதவீதம் வளர்ச்சி; மத்திய நிதியமைச்சகம் தகவல்
ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) அன்று நிதி அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, இந்தியாவின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் மே 2025 இல் ரூ.2.01 லட்சம் கோடியாக உள்ளது.
வணிக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.24 குறைப்பு; பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) முதல் அமலுக்கு வரும் வகையில் 19 கிலோ வணிக எல்பிஜி சிலிண்டர்களின் விலையை ரூ.24 மற்றும் விமான டர்பைன் எரிபொருளை (ஏடிஎஃப்) கிலோலிட்டருக்கு ரூ.2,414.25 குறைத்துள்ளன.
ஈபிஎப்ஓ 3.0 முதல் செபி விதி மாற்றம் வரை; ஜூன் மாதம் அமலாகும் மாற்றங்கள்
2025 ஆம் ஆண்டில் மே மாதம் முடிவடைந்து ஞாயிற்றுக்கிழமை ஜூன் 1 தொடங்கும் நிலையில், ஜூன் 1 முதல் உங்கள் நிதியைப் பாதிக்கக்கூடிய பல மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றன.
2024-25 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 6.5 சதவீதம் வளர்ச்சி
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) மற்றும் தேசிய புள்ளிவிவர அலுவலகம் (என்எஸ்ஓ) செய்த கணிப்புகளுடன் ஒத்துப்போகும் வகையில், 2024-25 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை (ஜிடிபி) 6.5% ஆக பதிவு செய்தது.
சாதனா பிராட்காஸ்ட் பங்கு மோசடியில் தொடர்புடைய பாலிவுட் நடிகர் உள்ளிட்ட 59 பேருக்கு தடை விதித்தது செபி
பாலிவுட் நடிகர் அர்ஷத் வார்சி, அவரது மனைவி மரியா கோரெட்டி மற்றும் 57 பேர் ஒன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரையிலான காலத்திற்கு பத்திரச் சந்தையில் பங்கேற்க இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) தடை விதித்துள்ளது.
நகைக் கடன் புதிய விதிகளை தளர்த்துமாறு ஆர்பிஐக்கு மத்திய நிதியமைச்சகம் அறிவுரை
மத்திய நிதி அமைச்சகம், அதன் முன்மொழியப்பட்ட தங்கக் கடன் வழிகாட்டுதல்கள் சிறிய கடன் வாங்குபவர்களை, குறிப்பாக ₹2 லட்சம் வரை கடன் பெறுபவர்களை மோசமாக பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்யுமாறு இந்திய ரிசர்வ் வங்கியை (ஆர்பிஐ) வலியுறுத்தியுள்ளது.
மீண்டும் விலை உயர்வை சந்தித்த தங்கம்; இன்றைய (மே 30) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
கடந்த இரண்டு நாட்களாக சரிவைக் கண்ட பிறகு, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை (மே 30) அன்று குறிப்பிடத்தக்க உயர்வைக் கண்டது.
சீனாவிற்கு செமி-கண்டக்டர் மென்பொருளை விற்பனை செய்யக்கூடாது என அமெரிக்க நிறுவனங்களுக்கு உத்தரவிட்ட டிரம்ப்
செமி-கண்டக்டர் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் மென்பொருள் வடிவமைப்புகளை சீனாவிற்கு வழங்குவதை நிறுத்துமாறு அமெரிக்க அரசாங்கம் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
வங்கி சார்ந்த மோசடிகள் 2025 நிதியாண்டில் 3 மடங்கு உயர்ந்துள்ளதாக ஆர்பிஐ தகவல்
2024-25 நிதியாண்டில் வங்கித் துறை முழுவதும் மோசடிகளின் மதிப்பு மூன்று மடங்கு உயர்வை சந்தித்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தெரிவித்துள்ளது.
ஆர்பிஐ தங்க கடன் புதிய விதிகள் கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்துமா? அமைச்சர் பெரியகருப்பன் விளக்கம்
தங்க நகை கடன்கள் தொடர்பான இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) சமீபத்திய உத்தரவு, கடன் வாங்குபவர்கள் வட்டியை மட்டும் செலுத்தாமல், ஆண்டுதோறும் அசல் மற்றும் வட்டி இரண்டையும் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாக சர்ச்சை வெடித்துள்ளது.
'தலைமை மகிழ்ச்சி அதிகாரி'யாக ஒரு நாயை நியமித்த ஹைதராபாத் ஸ்டார்ட் அப் நிறுவனம்
ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட ஸ்டார்ட்-அப் நிறுவனமான ஹார்வெஸ்டிங் ரோபாட்டிக்ஸ், டென்வர் என்ற கோல்டன் ரெட்ரீவர் நாயை அதன் தலைமை மகிழ்ச்சி அதிகாரியாக (Chief Happiness Officer- CHO) நியமித்துள்ளது.
தொடர்ந்து இரண்டாவது நாளாக குறைந்த தங்க விலை; இன்றைய (மே 29) விலை நிலவரம்
சென்னையில் வியாழக்கிழமை (மே 29) தங்க விலை சரிவை சந்தித்தது நகை வாங்குபவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது.
டொனால்ட் டிரம்பின் இறக்குமதி வரிகளை தடை செய்து அமெரிக்க வர்த்தக நீதிமன்றம் உத்தரவு
டிரம்ப் நிர்வாகம் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு புதிய வரிகளை விதிப்பதை அமெரிக்க கூட்டாட்சி வர்த்தக நீதிமன்றம் தடுத்து நிறுத்தியுள்ளது.
அமெரிக்காவுக்கான ஐபோன் ஏற்றுமதில் சீனாவை விஞ்சியது இந்தியா; ஏப்ரல் மாத ஏற்றுமதி 76% அதிகரிப்பு
சந்தை ஆராய்ச்சி நிறுவனமான ஓம்டியாவின் சமீபத்திய அறிக்கையின்படி, அமெரிக்காவிற்கு ஐபோன் ஏற்றுமதியில் இந்தியா அதிகாரப்பூர்வமாக சீனாவை முந்தியுள்ளது.
ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து முன்னாள் செபி தலைவர் மாதபி பூரி புச்சை விடுவித்தது லோக்பால்
அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஷார்ட் செல்லிங் நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கையுடன் தொடர்புடைய ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து முன்னாள் செபி தலைவர் மாதபி பூரி புச்சை குற்றமற்றவர் என லோக்பால் விடுவித்துள்ளது.
நகை வாங்குபவர்களுக்கு நிம்மதி; இன்றைய (மே 28) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
தொடர்ந்து ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வரும் தங்க விலை புதன்கிழமை (மே 28) குறிப்பிடத்தக்க சரிவைக் கண்டது, இது நகைப் பிரியர்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது.
பல ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ந்து இரண்டு காலாண்டுகளாக நிகர லாபத்தை பதிவு செய்தது பிஎஸ்என்எல்
குறிப்பிடத்தக்க திருப்பமாக, பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) பல ஆண்டுகளில் முதல் முறையாக தொடர்ச்சியாக இரண்டாவது காலாண்டு லாபத்தை ஈட்டியுள்ளது.
ஊழலால் பணிநீக்கம் செய்யப்பட்டும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது; மத்திய அரசு அதிரடி
ஒரு பெரிய கொள்கை மாற்றமாக, மத்திய அரசு மத்திய சிவில் சர்வீசஸ் (ஓய்வூதியம்) விதிகள், 2021 ஐ திருத்தியுள்ளது.
வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை ஆறு வாரங்கள் நீட்டித்து மத்திய அரசு உத்தரவு
மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) 2025-26 மதிப்பீட்டு ஆண்டிற்கான (2024-25 நிதியாண்டு) வருமான வரி அறிக்கைகளை (ITRs) தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை அதிகாரப்பூர்வமாக நீட்டித்துள்ளது.
சரிவுக்கு பிறகு மீண்டும் உயர்ந்த தங்க விலை; இன்றைய விலை நிலவரம் (மே 27) என்ன?
கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கங்களைக் கண்ட பிறகு, சென்னையில் தங்க விலை செவ்வாய்க்கிழமை (மே 27) அன்று குறிப்பிடத்தக்க உயர்வைக் கண்டுள்ளது.
இந்திய வங்கிகள் விரைவில் அண்டை நாடுகளுக்கு கடன்களை வழங்கக்கூடும்
உள்நாட்டு வங்கிகள், வெளிநாட்டு கடன் வாங்குபவர்களுக்கு இந்திய ரூபாயை (INR) கடன் வழங்க அனுமதிக்க, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மத்திய அரசாங்கத்தின் ஒப்புதலைக் கோரியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 50% வரிகளை ஜூலை 9 வரை ஒத்திவைப்பதாக டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜூன் 1 முதல் ஜூலை 9, 2025 வரை ஐரோப்பிய ஒன்றியப் பொருட்களுக்கு 50% வரி விதிப்பதைத் தாமதப்படுத்தியுள்ளார்.
நகைப் பிரியர்களுக்கு சர்பிரைஸ்.. இன்றைய (மே 26) தங்கம் விலை எவ்ளோ தெரியுமா?
பல வாரங்களாக தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் தங்க விலை, ஒப்பீட்டளவில் நிலையான உலகளாவிய பொருளாதார சூழல் மற்றும் புதிய புவிசார் அரசியல் பதட்டங்கள் இல்லாததால் வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை (மே 26) குறிப்பிடத்தக்க சரிவைக் கண்டுள்ளது.
ஜப்பானை முந்தி உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக மாறியது இந்தியா; நிதி ஆயோக் சிஇஓ தகவல்
இந்தியா அதிகாரப்பூர்வமாக ஜப்பானை முந்தி உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக மாறியுள்ளது என்று நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) பி.வி.ஆர் சுப்ரமணியம் சனிக்கிழமை (மே 24) அறிவித்தார்.
டிரம்பின் வரி அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்கள் அமெரிக்காவில் மலிவாக இருக்கும்
இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐபோன்களுக்கு 25% வரி விதிக்கப்பட்டாலும், மொத்த உற்பத்திச் செலவு, அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டால் ஏற்படும் விலையை விட மிகக் குறைவாகவே இருக்கும்.
எளிமையான KYC விதிகளை முன்மொழிந்துள்ள RBI: சிறு சிறு மாற்றங்களுக்கு எல்லாம் இனி ஆவணங்களை மீண்டும் சமர்ப்பிக்க வேண்டியதில்லை
புதிய வாடிக்கையாளர்களை இணைத்துக்கொள்வது மற்றும் அடையாள ஆவணங்களைப் புதுப்பிப்பது ஆகிய இரண்டையும் எளிதாக்கும் நோக்கில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அதன் KYC வழிகாட்டுதல்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை முன்மொழிந்துள்ளது.
ஆப்பிள் நிறுவனத்திற்கு வரி அச்சுறுத்தல் விடுத்ததை அடுத்து, சாம்சங்கை குறிவைக்கும் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நேற்று ஆப்பிள் நிறுவனத்திற்கு வரி கட்டண அச்சுறுத்தலை விடுத்திருந்தார்.
ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஜூன் 1 முதல் 50% வரி விதிப்பு; அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
ஜூன் 1, 2025 முதல் அமலுக்கு வரும் வகையில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து (EU) இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 50% வரியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்துள்ளார்.
2025 நிதியாண்டில் மத்திய அரசுக்கு ₹2.69 லட்சம் கோடி ஈவுத்தொகை அறிவித்தது ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை (மே 23) 2024-25 நிதியாண்டில் மத்திய அரசுக்கு ₹2.69 லட்சம் கோடி உபரி பரிமாற்றத்தை அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் தான் ஐபோன்களை உற்பத்தி செய்ய வேண்டும், இல்லையென்றால் வரி விதிக்கப்படும் என டிரம்ப் அச்சுறுத்தல்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்கிற்கு, நாட்டில் விற்கப்படும் ஐபோன்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட வேண்டும் என்று கடுமையான செய்தியை அனுப்பியுள்ளார்.