NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / எளிமையான KYC விதிகளை முன்மொழிந்துள்ள RBI: சிறு சிறு மாற்றங்களுக்கு எல்லாம் இனி ஆவணங்களை மீண்டும் சமர்ப்பிக்க வேண்டியதில்லை
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    எளிமையான KYC விதிகளை முன்மொழிந்துள்ள RBI: சிறு சிறு மாற்றங்களுக்கு எல்லாம் இனி ஆவணங்களை மீண்டும் சமர்ப்பிக்க வேண்டியதில்லை
    சிறு சிறு மாற்றங்களுக்கு எல்லாம் இனி KYC ஆவணங்களை மீண்டும் சமர்ப்பிக்க வேண்டியதில்லை

    எளிமையான KYC விதிகளை முன்மொழிந்துள்ள RBI: சிறு சிறு மாற்றங்களுக்கு எல்லாம் இனி ஆவணங்களை மீண்டும் சமர்ப்பிக்க வேண்டியதில்லை

    எழுதியவர் Venkatalakshmi V
    May 24, 2025
    11:33 am

    செய்தி முன்னோட்டம்

    புதிய வாடிக்கையாளர்களை இணைத்துக்கொள்வது மற்றும் அடையாள ஆவணங்களைப் புதுப்பிப்பது ஆகிய இரண்டையும் எளிதாக்கும் நோக்கில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அதன் KYC வழிகாட்டுதல்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை முன்மொழிந்துள்ளது.

    இந்த முயற்சி, வங்கிகள் மற்றும் NBFCகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்களுக்கான செயல்பாடுகளை நெறிப்படுத்த முயல்கிறது.

    இந்த புதிய மாற்றங்கள், வாடிக்கையாளர் வசதியை மையமாகக் கொண்டது.

    வழக்கமான KYC புதுப்பிப்புகளுக்கு, தனிநபர்கள் விரைவில் ஒரு எளிய செல்ப்-டிக்ளரேஷன் பயன்படுத்தி தங்கள் தகவல்கள் மாறவில்லை அல்லது அவர்களின் முகவரி விவரங்கள் மட்டுமே புதுப்பிக்கப்பட்டுள்ளன என்பதை தெரிவிக்க முடியும்.

    பதிவுசெய்யப்பட்ட மின்னஞ்சல், மொபைல் எண்கள், ATMகள் மற்றும் ஆன்லைன் வங்கி பயன்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு டிஜிட்டல் சேனல்கள் மூலம் இந்த அறிவிப்பைச் சமர்ப்பிக்கலாம்.

    ஆவணங்கள்

    சிறு மாற்றங்களுக்கு ஆவணங்கள் சமர்ப்பிக்க தேவையில்லை

    இந்த நடவடிக்கை, மீண்டும் மீண்டும் ஆவணங்களைச் சமர்ப்பிப்பதைக் குறைக்கும் பொருட்டு ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவுறுத்தலின் பேரில் எடுக்கப்பட்டுள்ளது.

    ஒரு வாடிக்கையாளர் ஒரு வங்கியிடம் ஆவணங்களை வழங்கிய பிறகு, மீண்டும் அதே ஆவணங்களை அவர்களிடம் கேட்கக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.

    "ஒரு வாடிக்கையாளர் ஒரு நிதி நிறுவனத்தில் ஆவணங்களைச் சமர்ப்பித்தவுடன், மீண்டும் அதே ஆவணங்களைப் பெற நாம் வலியுறுத்துவதில்லை என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்," என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் மார்ச் மாதம் கூறினார்.

    KYC 

    KYC புதுப்பிப்புகளுக்கான நெறிமுறைகள் மாற்றம்

    ரிசர்வ் வங்கி அவ்வப்போது KYC புதுப்பிப்புகளுக்கான வழிமுறைகளை மாற்றியமைக்கிறது.

    இது ஒரு வாடிக்கையாளர் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் எந்த கிளையிலோ அல்லது நிதி நிறுவனத்தின் அலுவலகத்திலோ அவற்றை புதுப்பிக்க அனுமதிக்கிறது.

    மேலும், ஆதார் OTP அடிப்படையிலான e-KYC மற்றும் வீடியோ அடிப்படையிலான வாடிக்கையாளர் அடையாள செயல்முறை (V-CIP) இப்போது இந்த புதுப்பிப்புகளுக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.

    இது அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது.

    ஒரு பொதுவான சிக்கலை நிவர்த்தி செய்யும் வகையில், புதிய விதிகள், நேரில் ஆன்போர்டிங்கிற்கு ஆதார் பயோமெட்ரிக் e-KYC ஐப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், அவர்களின் தற்போதைய முகவரி UIDAI தரவுத்தளத்தில் உள்ள முகவரியிலிருந்து வேறுபட்டால், சுய அறிவிப்பை வழங்க அனுமதிக்கும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரிசர்வ் வங்கி
    ஆர்பிஐ

    சமீபத்திய

    எளிமையான KYC விதிகளை முன்மொழிந்துள்ள RBI: சிறு சிறு மாற்றங்களுக்கு எல்லாம் இனி ஆவணங்களை மீண்டும் சமர்ப்பிக்க வேண்டியதில்லை ரிசர்வ் வங்கி
    ஆப்பிள் நிறுவனத்திற்கு வரி அச்சுறுத்தல் விடுத்ததை அடுத்து, சாம்சங்கை குறிவைக்கும் டிரம்ப் சாம்சங்
    கூட்டுறவு சங்கத்தில் 50 சவரன் போலி நகைகள் அடமானம் வைத்து 18.67 லட்சம் ரூபாய் கடனாக பெற்றது அம்பலம்  சிவகங்கை
    கர்நாடகாவில் அதிகரிக்கும் கோவிட்-19 தொற்று: ஒன்பது மாதக் குழந்தைக்கு கோவிட் -19 தொற்று  கோவிட் 19

    ரிசர்வ் வங்கி

    அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வாழ்நாளில் இல்லாத அளவிற்கு சரிந்தது பணவீக்கம்
    இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 652.869 பில்லியன் டாலராக குறைவு; ஆர்பிஐ தகவல் இந்தியா
    அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு இந்தியா
    இந்திய ரூபாயின் மதிப்பைப் பாதுகாக்க RBI செலவிட்ட தொகை இவ்வளவா? ஆர்பிஐ

    ஆர்பிஐ

    தொடர் சரிவிற்கு பிறகு இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு மீண்டும் அதிகரிப்பு; ஆர்பிஐ தகவல் இந்தியா
    ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக வருவாய்த்துறை செயலாளர் சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம்; யார் அவர்? ரிசர்வ் வங்கி
    ரிசர்வ் வங்கிக்கு ரஷ்ய மொழியில் வெடிகுண்டு மிரட்டல் ரிசர்வ் வங்கி
    எஃப்ஐஐ விற்பனை மற்றும் டாலர் உயர்வு காரணமாக வாரத்தின் இறுதிநாளில் பங்குச் சந்தைகள் வீழ்ச்சியுடன் தொடக்கம் பங்குச் சந்தை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025