NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / முடிவுக்கு வந்தது காஷ்மீர் பயங்கரவாத என்கவுண்டர்: கொல்லப்பட்டார் பயங்கரவாதி உசைர் கான்
    அடுத்த செய்திக் கட்டுரை
    முடிவுக்கு வந்தது காஷ்மீர் பயங்கரவாத என்கவுண்டர்: கொல்லப்பட்டார் பயங்கரவாதி உசைர் கான்
    7 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வந்த அனந்த்நாக் என்கவுண்டருக்கு ஒரு முடிவு கிடைத்துள்ளது

    முடிவுக்கு வந்தது காஷ்மீர் பயங்கரவாத என்கவுண்டர்: கொல்லப்பட்டார் பயங்கரவாதி உசைர் கான்

    எழுதியவர் Sindhuja SM
    Sep 19, 2023
    03:03 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக அதிக நாட்களாக நடந்து வந்த காஷ்மீர்-அனந்த்நாக் பயங்கரவாத என்கவுண்டர் முடிவுக்கு வந்தது.

    லஷ்கர்-இ-தொய்பா என்னும் பயங்கரவாத அமைப்பின் கமாண்டர் உசைர் கான் கொல்லப்பட்டதை அடுத்து, 7 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வந்த அனந்த்நாக் என்கவுண்டருக்கு ஒரு முடிவு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கொல்லப்பட்ட பயங்கரவாதியிடம் இருந்து மற்றொரு நபரின் உடலையும் ஆயுதம் ஒன்றையும் பாதுகாப்பு அதிகாரிகள் கைப்பற்றியதாக போலீஸ் ஏடிஜிபி விஜய் குமார் தெரிவித்துள்ளார்.

    "LeT கமாண்டர் உசைர் கானின் ஆயுதம் மீட்கப்பட்டதன் மூலம் அவர் கொல்லப்பட்டார். மேலும், மற்றொரு தீவிரவாதியின் உயிரற்ற உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அனந்த்நாக் என்கவுன்டர் முடிவுக்கு வந்துவிட்டது" என்று போலீஸ் ஏடிஜிபி விஜய் குமார் கூறியுள்ளார்.

    டவ்ஜ்க்க்

    பயங்கரவாதிகளை தகர்ககும் நடவடிக்கையில் 4 இந்திய வீரர்கள் பலி 

    கோகர்நாக் காடுல் வனப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை தகர்க்க ராணுவம் மற்றும் காவல்துறை இணைந்து ஒரு கூட்டு நடவடிக்கையை கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

    செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கிய துப்பாக்கிச் சண்டை 7 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வந்தது.

    இந்நிலையில், அப்பகுதியில் பதுங்கி இருந்த மிக முக்கிய பயங்கரவாதியான LeT கமாண்டர் உசைர் கான் தகர்க்கப்பட்டுள்ளார்.

    உசைர் அகமது கான்(28),அனந்த்நாக்கில் உள்ள நாகம் கோகர்நாக்கில் வசித்து வந்தவர் ஆவார். இவர் ஜூலை 26, 2022க்கு பிறகு தலைமறைவாகிவிட்டார்.

    சமீபத்தில், இவர் கோகர்நாக் காடுல் வனப்பகுதியில் பதுங்கியிருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து, ராணுவம் மற்றும் காவல்துறை இணைந்து ஒரு கூட்டு நடவடிக்கையை தொடங்கியது.

    இந்த என்கவுண்டர் நடவடிக்கையில், இதுவரை நான்கு இந்திய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜம்மு காஷ்மீர்
    பயங்கரவாதம்
    இந்திய ராணுவம்
    தீவிரவாதம்

    சமீபத்திய

    காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால், தடைகள் விதிக்கப்படும் என்று மிரட்டும் இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா காசா
    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்
    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா

    ஜம்மு காஷ்மீர்

    ஜம்மு காஷ்மீரின் முதல் பெண் வனவிலங்கு மீட்பாளர்  இந்தியா
    மோடியிடம் கோரிக்கை வைத்த சிறுமி - பள்ளியை சீரமைக்கும் அதிகாரிகள்  இந்தியா
    ஜம்மு-காஷ்மீரில் 14 மொபைல் மெசஞ்சர் ஆப்களுக்கு தடை  இந்தியா
    ஜி20 மாநாடு: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்புப் படைகளை அனுப்ப திட்டமிட்டிருக்கும் மத்திய அரசு  இந்தியா

    பயங்கரவாதம்

    நக்சல் எதிர்ப்பிலிருந்து தீவிரவாத எதிர்ப்புக்கு இடம் பெயரும் சிஆர்பிஎஃப் கோப்ரா படைப்பிரிவு ஜம்மு காஷ்மீர்
    சிரியாவில் நடந்த தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் கொலை; புதிய தலைவர் அறிவிப்பு ஐ.எஸ்.ஐ.எஸ்
    தீவிரவாதியின் மனைவியை நாட்டின் அமைச்சராக நியமித்த பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    தீவிரவாதத்தை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடன் கிரிக்கெட் இல்லை: அனுராக் தாக்கூர் பாகிஸ்தான்

    இந்திய ராணுவம்

    விபத்தில் ராணுவ வீரர்கள் 16 பேர் பலி! இந்தியா
    குடியரசு தினத்தில் 50 போர் விமானங்கள் பங்கேற்பு; பொதுமக்களுக்கு 32 ஆயிரம் டிக்கெட் விற்பனை; இந்தியா
    'ஏரோ இந்தியா 2023' சர்வதேச விமான கண்காட்சி - பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார் மோடி
    இந்திய ராணுவத்தில் விரைவில் AI - என்னென்ன பயன்கள்? செயற்கை நுண்ணறிவு

    தீவிரவாதம்

    இந்திய-கனட மோதலுக்கு காரணமான காலிஸ்தான் பயங்கரவாதி: யாரிந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார்?  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025