NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / சிரியாவில் நடந்த தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் கொலை; புதிய தலைவர் அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    சிரியாவில் நடந்த தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் கொலை; புதிய தலைவர் அறிவிப்பு
    சிரியாவில் நடந்த தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் கொலை

    சிரியாவில் நடந்த தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் கொலை; புதிய தலைவர் அறிவிப்பு

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 04, 2023
    02:34 pm

    செய்தி முன்னோட்டம்

    சிரியாவின் வடமேற்கு பகுதியில் நடந்த ஒரு தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத குழுவின் தலைவர், அபு அல்-ஹுசைன் அல்-குராஷி வியாழக்கிழமை (ஆகஸ்ட் 3) கொல்லப்பட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

    இட்லிப் மாகாணத்தில் ஜிஹாத் குழுவான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாமுடன் நடந்த நேரடி மோதல்களுக்குப் பிறகு, தலைவர் அபு அல்-ஹுசைன் அல்-குராஷி கொல்லப்பட்டார் என்று ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் டெலிகிராம் சேனலில் அறிவித்துள்ளார்.

    எனினும், அவர் எப்போது கொல்லப்பட்டார் என்பது போன்ற கூடுதல் விபரங்கள் எதையும் வெளியிடவில்லை.

    இதற்கிடையே, ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் புதிய தலைவராக, அபி ஹஃப்சன் அல்-ஹாஷிமி அல்-குராஷி நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

    history of isis

    ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதிக்கம்

    அமெரிக்க படைகள், 2011இல் ஈராக்கிலிருந்து முழுமையாக வெளியேறியதும், அங்கு நிலவிய அரசியல் நிலையற்ற தன்மையும், தீவிரவாதிகள் வளர்வதற்கு சாதமாக அமைந்தன.

    குறிப்பிடத்தக்க வகையில் ஈராக் மற்றும் சிரியாவில் இருந்த சில தீவிரவாத குழுக்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற பெயரில் ஒருங்கிணைந்து செயல்பட்டு, 2014இல் ஈராக் மற்றும் சிரியாவில் மிகப்பெரிய அளவிலான நிலப்பரப்பை கட்டுப்பாட்டில் எடுத்து, தனியாக கலீபாவை அமைத்து ஆட்சி செய்தனர்.

    எனினும், அமெரிக்க உதவியுடன் ஈராக் 2017இல் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த பெரும்பாலான பகுதியை மீட்டெடுத்தது.

    பின்னர் அடுத்த இரண்டு ஆண்டுகளில் சிரியாவிலும் அந்த இயக்கம் கட்டுப்படுத்தப்பட்டது.

    இருந்தாலும், அந்த அமைப்பின் ஸ்லீப்பர் செல்கள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சிரியா
    பயங்கரவாதம்

    சமீபத்திய

    IRCTCயின் சூப்பர் செயலியான SwaRail அறிமுகம்; டிக்கெட் புக்கிங், கேட்டரிங் என அனைத்தும் ஒரே இடத்தில்! இந்திய ரயில்வே
    யூகோ வங்கியின் முன்னாள் தலைவரை அமலாக்கத்துறை கைது செய்தது அமலாக்கத்துறை
    தென்கிழக்கு ஆசியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்; எந்தெந்த நாடுகளில் அதிக பாதிப்பு கொரோனா
    ரூ.20 கோடி மதிப்புள்ள வைரம் மாயம்: போலி வைரம் நீதிமன்றத்தில் எப்படி வந்தது? போலீசார் தீவிர விசாரணை நீதிமன்ற காவல்

    சிரியா

    துருக்கி நிலநடுக்கம்: ஒரு இந்தியரை காணவில்லை; 10 பேர் துருக்கியில் சிக்கி உள்ளனர் துருக்கி
    துருக்கி-சிரியா நிலநடுக்கம்: 16 ஆயிரத்தைத் தாண்டிய உயிரிழப்புகள் உலக செய்திகள்
    துருக்கி பூகம்ப சேதங்களை காட்டும் செயற்கைக்கோள் படங்கள் துருக்கி
    துருக்கி நிலநடுக்கம் அப்டேட்ஸ்: ஆபரேஷன் தோஸ்த் என்றால் என்ன துருக்கி

    பயங்கரவாதம்

    நக்சல் எதிர்ப்பிலிருந்து தீவிரவாத எதிர்ப்புக்கு இடம் பெயரும் சிஆர்பிஎஃப் கோப்ரா படைப்பிரிவு ஜம்மு காஷ்மீர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025