NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஜம்மு காஷ்மீரின் முதல் பெண் வனவிலங்கு மீட்பாளர் 
    ஜம்மு காஷ்மீரின் முதல் பெண் வனவிலங்கு மீட்பாளர் 
    இந்தியா

    ஜம்மு காஷ்மீரின் முதல் பெண் வனவிலங்கு மீட்பாளர் 

    எழுதியவர் Sindhuja SM
    April 15, 2023 | 02:00 pm 1 நிமிட வாசிப்பு
    ஜம்மு காஷ்மீரின் முதல் பெண் வனவிலங்கு மீட்பாளர் 
    ஆலியா 17 ஆண்டுகளுக்கும் மேலாக காட்டு விலங்குகளை மீட்டு அவற்றுக்கு மறுவாழ்வு அளித்து வருகிறார்.

    ஜம்மு காஷ்மீர் பார்ப்பதற்கு ஒரு சொர்க பூமி போல தெரிந்தாலும், காட்டு விலங்குகளால் அதிக மனிதர்கள் ஜம்மு காஷ்மீரில் பாதிக்கப்படுகின்றனர். கடந்த சில ஆண்டுகளில் இந்த சூழல் இன்னும் மோசமடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், ஜம்மு காஷ்மீரில் இருக்கும் ஒரே ஒரு 'பெண்' வனவிலங்கு மீட்பாளரான ஆலியா மிர்-க்கு வேலை பழு அதிகமாகி இருக்கிறது. ஆலியா 17 ஆண்டுகளுக்கும் மேலாக காட்டு விலங்குகளை மீட்டு அவற்றுக்கு மறுவாழ்வு அளித்து வருகிறார். ஜம்மு காஷ்மீரின் முதல் பெண் வனவிலங்கு மீட்பாளர் என்பதை தவிர, ஆலியா வனவிலங்கு SOS ஜம்மு மற்றும் காஷ்மீரின் திட்டத் தலைவராகவும் பணியாற்றி வருகிறார். பாம்புகள், கரடிகள் மற்றும் பறவைகள் முதல் சிறுத்தைகள் வரை அனைத்து வனவிலங்குகளையும் மீட்பதில் ஆலியா வல்லவர்.

    ஆண்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்தும் துறை 

    ஆலியாவின் இந்த முயற்சி காஷ்மீர் பள்ளத்தாக்கில் அவரை மிகவும் பிரபலமாக்கியுள்ளது. ஆலியாவுக்கு ஜம்மு காஷ்மீர் வனவிலங்கு பாதுகாப்பு விருதும் வழங்கப்பட்டுள்ளது. ஜம்மு மற்றும் காஷ்மீர் கூட்டுக் காடுகள், இந்த ஆண்டு மார்ச் மாதம் நடத்திய உலக வனவள தினக் கொண்டாட்டத்தில் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹாவால் ஆலியா கௌரவிக்கப்பட்டார். ஜம்மு காஷ்மீர் பிராந்தியத்தில் இத்தகைய கௌரவத்தைப் பெற்ற முதல் பெண்மணி என்ற பெருமையையும் ஆலியாவுக்கு கிடைத்துள்ளது. ஆலியா இந்த தொழிலிலை ஆரம்பித்த போது, ​​​​ஆண்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்தியதால், நிறைய சவால்களை எதிர்கொண்டதாக தெரிவித்திருக்கிறார். தான் ஒரு அணியை வழிநடத்துவதாக மக்கள் முதலில் நம்பவில்லை என்றும், தன்னை வீட்டிற்குச் செல்லும்படி மக்கள் தூற்றினர் என்றும் அவர் கூறி இருக்கிறார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா
    ஜம்மு காஷ்மீர்

    இந்தியா

    இந்தியாவில் திறக்கப்படும் ஆப்பிள் ஸ்டோர் - மாத வாடகை 42 லட்சமா? ஆப்பிள் நிறுவனம்
    8 ஆண்டுகளாக கணவரை 'அண்ணா' என அழைத்த பெண் - வைரல் வீடியோ  ட்ரெண்டிங் வீடியோ
    டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன்  டெல்லி
     டெல்லி மின் மானியம் இன்றுடன் முடிவடைகிறது: கோப்பில் கையெழுத்திடாததால் சர்ச்சை  டெல்லி

    ஜம்மு காஷ்மீர்

    காஷ்மீருக்கு செல்லும் முதல் ரயில் பாதை டிசம்பரில் திறக்கப்படும்: ரயில்வே அமைச்சர் இந்தியா
    கடும் பனி மற்றும் குளிரில் ரோந்து சென்ற BSF வீரர்: இணையவாசிகள் பாராட்டு இந்தியா
    ஜம்மு காஷ்மீர் - புனித குர்ஆனை 4 மாதங்களில் தனது கையால் எழுதி முடித்த கல்லூரி மாணவி வைரல் செய்தி
    ஸ்ரீ நகரில் பிரதமர் அலுவலக உயரதிகாரி என கூறி இ இசட் பாதுகாப்போடு வந்தவர் கைது பிரதமர் மோடி
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023