NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்திய-கனட மோதலுக்கு காரணமான காலிஸ்தான் பயங்கரவாதி: யாரிந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார்? 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்திய-கனட மோதலுக்கு காரணமான காலிஸ்தான் பயங்கரவாதி: யாரிந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார்? 
    சுட்டு கொல்லப்பட்ட காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார்

    இந்திய-கனட மோதலுக்கு காரணமான காலிஸ்தான் பயங்கரவாதி: யாரிந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார்? 

    எழுதியவர் Sindhuja SM
    Sep 19, 2023
    11:05 am

    செய்தி முன்னோட்டம்

    கடந்த ஜூன் மாதம் பிரிட்டிஷ் கொலம்பியாவில், காலிஸ்தான் பயங்கரவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக இந்தியா மீது கனடா பெரும் குற்றச்சாட்டை வைத்துள்ளது.

    இதனால், ஏற்கனவே பதட்ட நிலையில் இருந்த இந்திய-கனடா உறவுகள் மேலும் மோசமாகியுள்ளன.

    இந்நிலையில், ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் யார் என்பதை தெரிந்துகொள்வோம்.

    ஜூன் 18 அன்று பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரேயில் உள்ள சீக்கிய கலாச்சார மையத்திற்கு வெளியே ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    தடை செய்யப்பட்ட இந்திய பிரிவினைவாதக் குழுவான சீக்கியர்களுக்கான நீதியுடன்(SFJ) தொடர்புடையவர் நிஜ்ஜார்.

    பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனுக்குப் பிறகு அந்த குழுவின் 'நம்பர் 2' என்ற இடத்தை பிடித்தவர் அவர் ஆவார்.

    சிக்னல்

    இந்தியாவில் பயங்கரவாத செல்களுக்கு பயிற்சி அளித்து வந்த நிஜ்ஜார் 

    பஞ்சாப் காவல்துறை ஆவணங்களின்படி, ஜலந்தரின் பார்சிங் புரா கிராமத்தைச் சேர்ந்த நிஜ்ஜார் 1996இல் கனடாவுக்கு குடிபெயர்ந்தார்.

    கனடாவில், அவர் ஒரு பிளம்பராக வேலை செய்யத் தொடங்கினார். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, காலிஸ்தான் சார்பு நடவடிக்கைகளில் அவர் ஈடுபட தொடங்கியதால், அவரது சொத்து மதிப்பு திடீரென உயர்ந்தது.

    ஜக்தார் சிங் தாரா தலைமையிலான பாபர் கல்சா இன்டர்நேஷனல் என்ற அமைப்பின் உறுப்பினராக இருந்ததன் மூலம் நிஜ்ஜாருக்கு பயங்கரவாதத்தின் மீது ஈடுபாடு வந்தது.

    பின்னர், அவர் தனது சொந்தக் குழுவான காலிஸ்தான் டைகர் ஃபோர்ஸை(KTF) நிறுவினார்.

    இந்தியாவில் காலிஸ்தான் பயங்கரவாத செல்களை அடையாளம் கண்டு, இணைத்து, பயிற்சி அளித்து, நிதியுதவி செய்து வந்த நிஜ்ஜார் மீது 10க்கும் மேற்பட்ட FIRகள் இந்தியாவில் போடப்பட்டுள்ளன.

    சாஜ்கள்

    ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் 

    2014ஆம் ஆண்டில், சுயமாக அறிவிக்கப்பட்ட ஆன்மீகத் தலைவரான பாபா பனியாராவை படுகொலை செய்ய நிஜ்ஜார் மூளையாக செயல்பட்டார்.

    2020இல் இந்தியா அவரை பயங்கரவாதியாக அறிவித்தது.

    2007ஆம் ஆண்டு பஞ்சாபின் லூதியானாவில் நடந்த குண்டுவெடிப்பு உட்பட பல வழக்குகளில் நிஜ்ஜார் தேடப்பட்டு வந்தார். இந்த குண்டுவெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் சுமார் 40 பேர் படுகாயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ராஷ்ட்ரிய சீக்கிய சங்கத் தலைவர் ருல்தா சிங் படுகொலையிலும் அவருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் இந்து பாதிரியார் கொல்லப்பட்ட வழக்கில் நிஜ்ஜாரை தேடி வந்த தேசிய புலனாய்வு அமைப்பு(என்ஐஏ), அவரை பிடித்து கொடுத்தால் ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என கடந்த ஜூலை மாதம் அறிவித்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    கனடா
    காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    உலகம்

    சமீபத்திய

    யூகோ வங்கியின் முன்னாள் தலைவரை அமலாக்கத்துறை கைது செய்தது அமலாக்கத்துறை
    தென்கிழக்கு ஆசியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்; எந்தெந்த நாடுகளில் அதிக பாதிப்பு கொரோனா
    ரூ.20 கோடி மதிப்புள்ள வைரம் மாயம்: போலி வைரம் நீதிமன்றத்தில் எப்படி வந்தது? போலீசார் தீவிர விசாரணை நீதிமன்ற காவல்
    பாகிஸ்தானுடன் கிரிக்கெட் கிடையாது; ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து விலக பிசிசிஐ முடிவு பிசிசிஐ

    இந்தியா

    விண்வெளியைத் தொடர்ந்து ஆழ்கடலை ஆய்வு செய்ய சமுத்திரயான் திட்டத்திற்கு தயாராகும் இந்தியா தொழில்நுட்பம்
    தேசத்துரோக சட்டம் நீக்கப்படுமா: அரசியல் சாசன அமர்வை கூட்டுகிறது உச்ச நீதிமன்றம்  உச்ச நீதிமன்றம்
    இந்தியாவில் மேலும் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு கொரோனா
    36 மணி நேரமாக இந்தியாவில் சிக்கி தவித்த கனேடிய பிரதமர் கனடாவுக்கு புறப்பட்டார்  கனடா

    கனடா

    கனடாவில் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்ட இந்து கோயில் - இந்திய தூதரகம் கண்டனம் உலக செய்திகள்
    10,000 உய்குர் அகதிகளுக்கு இடமளிக்க இருக்கும் கனடா உலகம்
    இந்து கோவில் தாக்குதல்: கனடா நாடாளுமன்ற உறுப்பினர் வருத்தம் இந்தியா
    'ஆன்டி இந்தியன்' எழுத்துக்களால் சிதைக்கப்பட்ட இந்து கோவில் உலக செய்திகள்

    காலிஸ்தான் ஆதரவாளர்கள்

    காலிஸ்தான் ஆதரவாளர்கள் பிரச்சனை: செய்தியாளர்களை சந்தித்த பஞ்சாப் ஐஜிபி இந்தியா
    மகாத்மா காந்தி சிலையை சிதைத்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் கனடா
    அமெரிக்காவில் காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு எதிராக இந்தியர்கள் நடத்திய அமைதி பேரணி இந்தியா
    பிபிசி பஞ்சாப் ட்விட்டர் கணக்கு முடக்கம்: இந்தியாவுக்கு எதிரான தகவல்களை பரப்பியதாக குற்றசாட்டு இந்தியா

    உலகம்

    உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ள அரிசி வகைகள் மற்றும் அதன் சிறப்பம்சங்கள் இந்தியா
    100 கிராம் பம்ப்கின் விதைகள் - மறைந்திருக்கும் நன்மைகள்  இந்தியா
    இந்தியாவைத் தொடர்ந்து சீனாவின் புதிய வரைபடத்திற்கு தென்கிழக்காசிய நாடுகளும் எதிர்ப்பு இந்தியா
    உலக தேங்காய் தினம் 2023 : தேங்காய் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் சிறப்பு செய்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025