Page Loader
இந்திய-கனட மோதலுக்கு காரணமான காலிஸ்தான் பயங்கரவாதி: யாரிந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார்? 
சுட்டு கொல்லப்பட்ட காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார்

இந்திய-கனட மோதலுக்கு காரணமான காலிஸ்தான் பயங்கரவாதி: யாரிந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார்? 

எழுதியவர் Sindhuja SM
Sep 19, 2023
11:05 am

செய்தி முன்னோட்டம்

கடந்த ஜூன் மாதம் பிரிட்டிஷ் கொலம்பியாவில், காலிஸ்தான் பயங்கரவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக இந்தியா மீது கனடா பெரும் குற்றச்சாட்டை வைத்துள்ளது. இதனால், ஏற்கனவே பதட்ட நிலையில் இருந்த இந்திய-கனடா உறவுகள் மேலும் மோசமாகியுள்ளன. இந்நிலையில், ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் யார் என்பதை தெரிந்துகொள்வோம். ஜூன் 18 அன்று பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரேயில் உள்ள சீக்கிய கலாச்சார மையத்திற்கு வெளியே ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டார். தடை செய்யப்பட்ட இந்திய பிரிவினைவாதக் குழுவான சீக்கியர்களுக்கான நீதியுடன்(SFJ) தொடர்புடையவர் நிஜ்ஜார். பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனுக்குப் பிறகு அந்த குழுவின் 'நம்பர் 2' என்ற இடத்தை பிடித்தவர் அவர் ஆவார்.

சிக்னல்

இந்தியாவில் பயங்கரவாத செல்களுக்கு பயிற்சி அளித்து வந்த நிஜ்ஜார் 

பஞ்சாப் காவல்துறை ஆவணங்களின்படி, ஜலந்தரின் பார்சிங் புரா கிராமத்தைச் சேர்ந்த நிஜ்ஜார் 1996இல் கனடாவுக்கு குடிபெயர்ந்தார். கனடாவில், அவர் ஒரு பிளம்பராக வேலை செய்யத் தொடங்கினார். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, காலிஸ்தான் சார்பு நடவடிக்கைகளில் அவர் ஈடுபட தொடங்கியதால், அவரது சொத்து மதிப்பு திடீரென உயர்ந்தது. ஜக்தார் சிங் தாரா தலைமையிலான பாபர் கல்சா இன்டர்நேஷனல் என்ற அமைப்பின் உறுப்பினராக இருந்ததன் மூலம் நிஜ்ஜாருக்கு பயங்கரவாதத்தின் மீது ஈடுபாடு வந்தது. பின்னர், அவர் தனது சொந்தக் குழுவான காலிஸ்தான் டைகர் ஃபோர்ஸை(KTF) நிறுவினார். இந்தியாவில் காலிஸ்தான் பயங்கரவாத செல்களை அடையாளம் கண்டு, இணைத்து, பயிற்சி அளித்து, நிதியுதவி செய்து வந்த நிஜ்ஜார் மீது 10க்கும் மேற்பட்ட FIRகள் இந்தியாவில் போடப்பட்டுள்ளன.

சாஜ்கள்

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் 

2014ஆம் ஆண்டில், சுயமாக அறிவிக்கப்பட்ட ஆன்மீகத் தலைவரான பாபா பனியாராவை படுகொலை செய்ய நிஜ்ஜார் மூளையாக செயல்பட்டார். 2020இல் இந்தியா அவரை பயங்கரவாதியாக அறிவித்தது. 2007ஆம் ஆண்டு பஞ்சாபின் லூதியானாவில் நடந்த குண்டுவெடிப்பு உட்பட பல வழக்குகளில் நிஜ்ஜார் தேடப்பட்டு வந்தார். இந்த குண்டுவெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் சுமார் 40 பேர் படுகாயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ராஷ்ட்ரிய சீக்கிய சங்கத் தலைவர் ருல்தா சிங் படுகொலையிலும் அவருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் இந்து பாதிரியார் கொல்லப்பட்ட வழக்கில் நிஜ்ஜாரை தேடி வந்த தேசிய புலனாய்வு அமைப்பு(என்ஐஏ), அவரை பிடித்து கொடுத்தால் ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என கடந்த ஜூலை மாதம் அறிவித்தது.