NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / தீவிரவாதியின் மனைவியை நாட்டின் அமைச்சராக நியமித்த பாகிஸ்தான் பிரதமர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தீவிரவாதியின் மனைவியை நாட்டின் அமைச்சராக நியமித்த பாகிஸ்தான் பிரதமர்
    தீவிரவாதியின் மனைவியை நாட்டின் அமைச்சராக நியமித்த பாகிஸ்தான் பிரதமர்

    தீவிரவாதியின் மனைவியை நாட்டின் அமைச்சராக நியமித்த பாகிஸ்தான் பிரதமர்

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 18, 2023
    12:45 pm

    செய்தி முன்னோட்டம்

    சிறையில் அடைக்கப்பட்டுள்ள காஷ்மீர் தீவிரவாதி யாசின் மாலிக்கின் மனைவி, முஷால் உசேன் மாலிக், பாகிஸ்தானில் காபந்து அரசில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதுதொடர்பாக பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியான அறிக்கையின்படி, முஷால் உசேன் மாலிக், மனித உரிமைகள் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறைக்கான அமைச்சராக செயல்பட உள்ளார்.

    முஷாலின் கணவரும், ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் (ஜேகேஎல்எஃப்) பயங்கரவாத இயக்கத்தின் தலைவருமான யாசின் மாலிக், பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்த வழக்கில் தண்டனை பெற்று, டெல்லி திகார் சிறையில் தற்போது ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.

    இருவரும் 2009-இல் இஸ்லாமாபாத்தில் திருமணம் செய்து கொண்டனர் மற்றும் இவர்களின் திருமண விழாவில் பாகிஸ்தானின் சில முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    pakistan interim govt cabinet

    பாகிஸ்தானின் காபந்து அரசு பொறுப்பேற்பு

    பாகிஸ்தான் பிரதமராக இருந்த ஷெபாஸ் ஷெரீப், நாட்டில் தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி ராஜினாமா செய்ததை அடுத்து, தேசிய சட்டமன்றம் கலைக்கப்பட்டது.

    இதையடுத்து, இடைக்கால பிரதமர், அன்வாருல் ஹக் காக்கர் தலைமையிலான காபந்து அரசு வியாழக்கிழமை (ஆகஸ்ட் 17) பதவியேற்றது.

    இந்த இடைக்கால அரசில் முன்னாள் வெளியுறவுத்துறை செயலர், ஜலீல் அப்பாஸ் ஜிலானி, வெளியுறவு அமைச்சராகவும், சர்பராஸ் புக்டி, உள்துறை அமைச்சராகவும், ஷம்ஷாத் அக்தர், நிதி அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளனர்.

    மேலும், ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல், அன்வர் அலி ஹைதர், பாதுகாப்பு அமைச்சராக செயல்பட உள்ள நிலையில், மொத்தம் 16 அமைச்சர்கள் மற்றும் 3 ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    வரும் டிசம்பருக்குள் தேர்தல் நடத்தப்பட்டு புதிய அரசு பொறுப்பேற்கும் வரை இவர்கள் பதவியில் இருப்பர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாகிஸ்தான்
    அமைச்சரவை
    பயங்கரவாதம்

    சமீபத்திய

    பஹல்காம் தாக்குதலுக்கு முன்பு பாகிஸ்தான் அதிகாரியை தொடர்பு கொண்டதாக ஒப்புக்கொண்ட 'ஸ்பை யூடியூபர்' ஜோதி மல்ஹோத்ரா  பஹல்காம்
    வெயிலில் அதிகம் செல்வதால் ஏற்படும் sunburn-ஐ இயற்கையாகவே சரி செய்ய உதவும் கற்றாழை! சரும பராமரிப்பு
    இப்போது நீங்கள் கூகிள் சர்ச்சிலேயே ஆடைகளை ட்ரை செய்து பார்க்கலாம் கூகிள் தேடல்
    தனது 65வது பிறந்தநாளில் 'முகரகம்' என்ற சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டார் மோகன்லால் மோகன்லால்

    பாகிஸ்தான்

    இம்ரான் கான் பிரச்சனை: தலைமை நீதிபதிக்கு எதிரான குழுவை அறிமுகப்படுத்துகிறது பாகிஸ்தான் அரசு இம்ரான் கான்
    எஸ்ஏஎப்எப் கால்பந்து கோப்பை 2023 : ஒரே குழுவில் இந்தியா-பாகிஸ்தான்! கால்பந்து
    பயங்கரவாத சதி அம்பலம்: 12,000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்!  இந்தியா
    32 வருடங்களாக திணறி கொண்டிருக்கும் பாகிஸ்தான்: மீண்டும் ராணுவ ஆட்சியில் சிக்கி கொள்ளுமா  உலக செய்திகள்

    அமைச்சரவை

    குட்கா தடை ரத்து: தமிழக அரசு மேல்முறையீடு சென்னை உயர் நீதிமன்றம்
    காவல்துறை அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்ட ஒடிசா அமைச்சர் நபா கிசோர் தாஸ் மாநிலங்கள்
    சட்டசபையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் நிறைவேற்றப்படும் - அமைச்சரவை கூட்டத்தில் முடிவு தமிழ்நாடு
    தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் நீக்கம் மு.க ஸ்டாலின்

    பயங்கரவாதம்

    நக்சல் எதிர்ப்பிலிருந்து தீவிரவாத எதிர்ப்புக்கு இடம் பெயரும் சிஆர்பிஎஃப் கோப்ரா படைப்பிரிவு ஜம்மு காஷ்மீர்
    சிரியாவில் நடந்த தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் கொலை; புதிய தலைவர் அறிவிப்பு ஐ.எஸ்.ஐ.எஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025