NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / போப் ஆண்டவர் மறைவை ஒட்டி, இன்றும் நாளையும் துக்கம் அனுசரிக்கப்படும்: தமிழக அரசு
    அடுத்த செய்திக் கட்டுரை
    போப் ஆண்டவர் மறைவை ஒட்டி, இன்றும் நாளையும் துக்கம் அனுசரிக்கப்படும்: தமிழக அரசு
    போப் பிரான்சிஸ் நேற்று காலை வாடிகனில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்தார்

    போப் ஆண்டவர் மறைவை ஒட்டி, இன்றும் நாளையும் துக்கம் அனுசரிக்கப்படும்: தமிழக அரசு

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 22, 2025
    09:27 am

    செய்தி முன்னோட்டம்

    போப் பிரான்சிஸ் மரணத்தைத் தொடர்ந்து, இன்று மற்றும் நாளை தமிழ்நாட்டில் துக்கம் அனுசரிக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் (வயது 88) நேற்று காலை வாடிகனில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்தார்.

    இரட்டை நிமோனியாவால் ஏற்பட்ட சுவாசத் தொந்தரவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், சில நாட்களுக்கு முன்னர் தான் வீடு திரும்பியிருந்தார்.

    எனினும் நேற்று காலை ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தார்.

    அவரது உடல் தற்போது வாடிகனில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #JustNow | போப் பிரான்சிஸ் மறைவை ஒட்டி, இன்றும் நாளையும் துக்கம் அனுசரிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு.#SunNews | #RIPPopeFrancis | #PopeFrancis | #TNGovt https://t.co/xsrAm8Efn6 pic.twitter.com/FayHXswmrx

    — Sun News (@sunnewstamil) April 22, 2025

    இறுதி சடங்கு 

    போப் பிரான்சிஸின் கல்லறை மரியா மேஜியர் பசிலிக்காவில் வைக்கப்படும்

    செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்கா இல்லாமல், ரோம் நகரில் உள்ள சான்டா மரியா மேஜியர் பசிலிக்காவில் தன் கல்லறையை அமைக்க விரும்பியதாக கூறப்படுகிறது.

    இதனால், 100 ஆண்டுகளுக்கு பிறகு வாடிகனுக்கு வெளியே அடக்கம் செய்யப்படவுள்ள முதல் போப்பாக இவர் வரலாற்றில் இடம்பெருகிறார்.

    இந்நிலையில், போப்பின் மறைவைக் கவனத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு இன்று மற்றும் நாளை மாநிலம் முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளது.

    மரியாதையின் அடிப்படையில், இரண்டு நாட்களும் எந்தவொரு கொண்டாட்டங்களும் நடத்தக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதேபோல், மத்திய அரசும் மூன்று நாட்கள் தேசிய துக்கத்தை அனுசரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

    இந்நாளில் தேசிய கொடி அரைக் கம்பத்தில் ஏற்றப்படும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    போப் பிரான்சிஸ்
    தமிழ்நாடு
    தமிழக அரசு

    சமீபத்திய

    ஐபிஎல் 2025 மீண்டும் தொடங்கினாலும் மிட்செல் ஸ்டார்க் வரமாட்டார் என இதர தகவல்; ஆஸ்திரேலிய வீரர்களும் தவிர்க்க வாய்ப்பு ஐபிஎல் 2025
    சிரஞ்சீவியுடன் நடிக்கும் படத்திற்கு நயன்தாராவின் சம்பளம் இவ்வளவா? நயன்தாரா
    போர் நிறுத்தத்திற்குப் பிறகு, வாரத்தின் முதல்நாளில் வளர்ச்சியுடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தைகள் பங்குச் சந்தை
    எல்லை மற்றும் கடலோர கண்காணிப்புக்காக எந்நேரமும் இயங்கும் 10 செயற்கைக்கோள்கள்; இஸ்ரோ தலைவர் வெளியிட்ட தகவல் இஸ்ரோ

    போப் பிரான்சிஸ்

    அமெரிக்க தேர்தலில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்? போப் பிரான்சிஸ் அட்வைஸ் கமலா ஹாரிஸ்
    கத்தோலிக்க தலைவர் போப் பிரான்சிஸுக்கு ஜனாதிபதிக்கான சுதந்திர பதக்கம் வழங்கி ஜோ பைடன் கௌரவிப்பு ஜோ பைடன்
    கடுமையான சுவாசக் கோளாறால் உயிருக்கு ஆபத்தான நிலையில் போப் பிரான்சிஸ்; மருத்துவர்கள் தீவிர சிகிச்சை உலக செய்திகள்
    போப் ஆண்டவர் உடல்நலன் பாதிப்பு; அடுத்த போப் யாராக இருக்கக்கூடும்? வாடிகன்

    தமிழ்நாடு

    தவெக பொதுக்குழு கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றம்; தமிழக அரசு மீது விஜய் கடும் விளாசல் தவெக
    அமித்ஷா பேசியது அவரது சொந்த கருத்தாம்; சொல்கிறார் அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி அதிமுக
    தெலுங்கு, கன்னட உடன்பிறப்புகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உகாதி திருநாள் வாழ்த்து மு.க.ஸ்டாலின்
    சென்னை நோக்கி வந்த விமானத்தின் டயர் செயலிழந்ததால் அவசர தரையிறக்கம் விமானம்

    தமிழக அரசு

    பொங்கலை முன்னிட்டு அரசுப் பேருந்துகளில் 8.73 லட்சம் பேர் பயணம் பேருந்துகள்
    பாலியல் வழக்குகளுக்கு தண்டனையை கடுமையாகும் தமிழ்நாடு அரசின் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் ஆர்.என்.ரவி
    பேருந்து கட்டண உயர்வு குறித்து நான்கு மாதங்களில் முடிவு; தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பேருந்துகள்
    வேங்கை வயல் சம்பவத்தில் அவதூறு பரப்ப வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தல் வேங்கை வயல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025