NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பொங்கலை முன்னிட்டு அரசுப் பேருந்துகளில் 8.73 லட்சம் பேர் பயணம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பொங்கலை முன்னிட்டு அரசுப் பேருந்துகளில் 8.73 லட்சம் பேர் பயணம்
    அரசுப் பேருந்துகளில் 8.73 லட்சம் பேர் பயணம்

    பொங்கலை முன்னிட்டு அரசுப் பேருந்துகளில் 8.73 லட்சம் பேர் பயணம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 17, 2025
    07:05 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசுப் பேருந்துகளில் 8.73 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.

    இதனை தமிழக அரசு ஒரு செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ளது.

    இதில், 2025-பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொதுமக்கள் சிரமமின்றி தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்யும் வகையில், மேலும் பண்டிகை முடிந்த பின்னர் சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு திரும்பும் பயணிகள் வசதிக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    பேருந்துகள் 

    பொதுமக்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

    பொங்கல் திருநாளுக்கான சிறப்புப் பேருந்துகள் திட்டம், 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை 4 நாட்களில் சென்னையிலிருந்து தினசரி இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன், மொத்தமாக 7,498 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு, 8.73 லட்சம் பயணிகள் தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

    பொங்கல் முடிந்த பிறகு, 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை, 2,092 பேருந்துகளுடன் 5,290 சிறப்பு பேருந்துகள் மற்றும் பிற முக்கிய ஊர்களிலிருந்து 6,926 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதன்மூலம் மொத்தம் 22,676 பேருந்துகள் இயக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

    மேலும், வரும் நாட்களில், 28,022, 29,056 மற்றும் 42,917 பயணிகள் முன்பதிவு செய்து பயணிக்க இருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    2025-பொங்கல் திருநாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்புப் பேருந்துகள் இயக்கத்தின் மூலம் சென்னையிலிருந்து 8.73 இலட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
    - அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் திரு. R. மோகன் அவர்களின்… pic.twitter.com/nfMVvlkvXB

    — ArasuBus (@arasubus) January 17, 2025

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    பொங்கல் பண்டிகையை முடித்து, 19.01.2025 அன்று பொதுமக்கள் அதிக அளவில் பயணிக்க வாய்ப்பு உள்ளதால் அன்றைய தினத்தில் கூட்ட நெரிசலை தவிர்த்திடும் பொருட்டு, பொதுமக்கள் தங்களின் பயணத்தை முன்கூட்டியே 17.01.2025 மற்றும் 18.01.2025 ஆகிய தேதிகளில் திட்டமிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்… pic.twitter.com/Y8FpZqJ63i

    — ArasuBus (@arasubus) January 17, 2025
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பேருந்துகள்
    தமிழக அரசு
    தமிழ்நாடு
    தமிழ்நாடு செய்தி

    சமீபத்திய

    அனுஷ்கா ஷெட்டி- விக்ரம் பிரபுவின் 'காட்டி' ஜூலை 11 அன்று வெளியாகிறது திரைப்படம்
    அமெரிக்காவில் தற்காலிகமாக மின்சார வாகன உற்பத்தியை நிறுத்திய வால்வோ கார் நிறுவனம்; காரணம் என்ன? மின்சார வாகனம்
    நாங்களும் அனுப்புவோம் என இந்தியாவிற்கு போட்டியாக வெளிநாடுகளுக்கு பிரதிநிதிகளை அனுப்பிய பாகிஸ்தான் பாகிஸ்தான்
    முழு விளம்பர பிரச்சாரங்களை உருவாக்கும் மெட்டாவின் AI கருவி அடுத்த ஆண்டு வெளியாகிறது! மெட்டா

    பேருந்துகள்

    தனியார் பேருந்துகளில் அதிக கட்டண வசூல் விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு சென்னை உயர் நீதிமன்றம்
    சென்னையில் மீண்டும் வந்துவிட்டது ஹாப்-ஆன்; ஹாப்-ஆஃப் வசதி சென்னை
    ஐபிஎல் 2024: சிஎஸ்கே போட்டியை காண வருபவர்களுக்கு இலவச பேருந்து பயணம் ஐபிஎல்
    பாலியல் தொல்லைகளை தடுக்க தனியார் பள்ளி பேருந்துகளில் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு  பள்ளிகள்

    தமிழக அரசு

    முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு தமிழகம்
    கன்னியாகுமரியில் அமைந்துள்ள வள்ளுவர் சிலையின் வெள்ளி விழா கொண்டாட்டம்; தமிழக அரசு அறிவிப்பு கன்னியாகுமரி
    உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 15) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    2025-ஆம் ஆண்டு இத்தனை நாள் தான் லீவு; பொது விடுமுறை நாட்களை அறிவித்தது தமிழக அரசு விடுமுறை

    தமிழ்நாடு

    உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 4) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென்தமிழகத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்; தெற்கு ரயில்வே அறிவிப்பு பொங்கல்
    தமிழகத்தில் 2025ஆம் ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டையில் தொடங்கியது ஜல்லிக்கட்டு
    பொங்கல் பண்டிகைக்காக ஜனவரி 17 அன்று அரசு விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவு விடுமுறை

    தமிழ்நாடு செய்தி

    சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடித்து விபத்து; 6 பேர் பலி விருதுநகர்
    தமிழகத்தின் ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு; சிறப்பு அதிகாரிகளை நியமிக்க வாய்ப்பு தமிழ்நாடு
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 6) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    பானிபூரி விற்பனையாளர் ₹40 லட்சம் வருமானம் ஈட்டினாரா? வைரலான ஜிஎஸ்டி நோட்டீஸ் உண்மையானதல்ல ஜிஎஸ்டி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025