
இங்கிலாந்தில் அதிக டெஸ்ட் சதங்கள் அடித்த ஆசிய வீரர் என்ற சாதனை படைத்தார் கே.எல்.ராகுல்
செய்தி முன்னோட்டம்
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் கே.எல்.ராகுல், இங்கிலாந்தில் அதிக டெஸ்ட் சதங்கள் அடித்த ஆசிய தொடக்க வீரர் என்ற பெருமையைப் பெற்று கிரிக்கெட் வரலாற்றில் இடம்பிடித்தார். லீட்ஸில் உள்ள ஹெடிங்கிலி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா vs இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்டின் நான்காவது நாளில், கே.எல்.ராகுல் அழுத்தத்தின் கீழ் சிறப்பாக விளையாடி, இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு அற்புதமான சதத்தை அடித்து, இந்தியாவை ஆரம்பகால சிக்கலில் இருந்து மீட்டெடுத்தார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக அவரது ஒன்பதாவது சதமாகும். இந்த இன்னிங்ஸ், இங்கிலாந்தில் ஒரு தொடக்க வீரராக ராகுலின் மூன்றாவது டெஸ்ட் சதத்தைக் குறிக்கிறது.
அதிக சதங்கள்
அதிக சதங்கள் அடித்த வீரர்கள்
இதற்கு முன்னர் சுனில் கவாஸ்கர், ராகுல் டிராவிட், விஜய் மெர்ச்சன்ட், ரவி சாஸ்திரி மற்றும் வங்கதேசத்தின் தமீம் இக்பால் போன்ற ஜாம்பவான்கள் தலா 2 சாதங்களுடன் சமனில் இருந்தனர். இந்நிலையில், தற்போது கே.எல்.ராகுல் தனது மூன்றாவது சதத்தின் மூலம், அவர்களை பின்னுக்குத் தள்ளி அதிக சதமடித்த ஆசிய தொடக்க வீரர் ஆனார். இதற்கிடையே, SENA நாடுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக 50+ ஸ்கோர்களைப் பெற்ற இந்திய தொடக்க வீரர்களில் வீரேந்தர் சேவாக் மற்றும் முரளி விஜய் ஆகியோருடன் ராகுல் இணைந்தார். 59 டெஸ்ட் போட்டிகளில், ராகுல் 3,350 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். சொந்த மண்ணில் ஒரே ஒரு சதம் மட்டுமே பெற்றிருந்தாலும், எஞ்சிய அனைத்து சதங்களையும் வெளிநாட்டில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.