Page Loader
சிந்து நதி நீர் தரவில்லையென்றால் இந்தியாவோடு போர் செய்யுமாம் பாகிஸ்தான்; சொல்கிறார் பிலவால் பூட்டோ
சிந்து நதி நீர் தரவில்லையென்றால் இந்தியாவோடு போர் செய்வோம் என பிலவால் பூட்டோ பேச்சு

சிந்து நதி நீர் தரவில்லையென்றால் இந்தியாவோடு போர் செய்யுமாம் பாகிஸ்தான்; சொல்கிறார் பிலவால் பூட்டோ

எழுதியவர் Sekar Chinnappan
Jun 23, 2025
07:04 pm

செய்தி முன்னோட்டம்

பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு அமைச்சரும், ராணுவ சர்வாதிகாரி ஜுல்பிகர் அலி பூட்டோ குடும்ப வாரிசுமான பிலாவல் பூட்டோ-சர்தாரி, இந்தியாவிற்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். அதாவது சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் (IWT) கீழ் பாகிஸ்தானுக்கு உரிய தண்ணீரை தர மறுத்தால் போர் ஏற்படும் என்று கூறினார். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து 1960 இல் போடப்பட்ட சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்ததைத் தொடர்ந்து அடிக்கடி இதைக் கூறி வரும் பிலவால் பூட்டோ, தற்போது மீண்டும் கூறியுள்ளார். எனினும், இந்த ஒப்பந்தம் மீண்டும் அமல்படுத்தப்படாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சமீபத்தில் அறிவித்தார்.

பாகிஸ்தான் 

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய பிலவால் பூட்டோ 

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய பிலாவல், நீர் விநியோகத்தை நிறுத்தி வைக்கும் இந்தியாவின் நடவடிக்கையை நிராகரித்தார். மேலும் இந்த ஒப்பந்தம் சர்வதேச சட்டத்தின் கீழ் சட்டப்பூர்வமாக பிணைக்கப்பட்டுள்ளது என்று கூறினார். சிந்து நதிப் படுகையின் ஆறு ஆறுகளிலிருந்தும் நீர் விநியோகத்தை சட்டவிரோதமாக துண்டிக்க இந்தியா முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார். மேலும் "இந்தியாவுக்கு இரண்டு வழிகள் உள்ளன: தண்ணீரை நியாயமாகப் பகிர்ந்து கொள்ளுங்கள் அல்லது ஆறு நதிகளிலிருந்தும் எங்களுக்கான தண்ணீரை நாங்களே பெறுவோம்." என்று அறிவித்தார். இந்த ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது ஐநா சாசனத்தை மீறுவதாகக் கூறி, இந்தியாவின் அணுகுமுறையை சட்டவிரோதமானது மற்றும் அரசியல் நோக்கம் கொண்டது என்று பிலவால் பூட்டோ கூறினார்.

பயங்கரவாதம்

பயங்கரவாதத்தை இந்தியா ஆயுதமாக்குவதாக குற்றச்சாட்டு

இந்தியா பயங்கரவாதத்தை ஆயுதமாக்குகிறது என்றும், நிதி நடவடிக்கை பணிக்குழுவில் (FATF) பாகிஸ்தானை சிக்கவைக்க ராஜதந்திர அழுத்தத்தைப் பயன்படுத்துகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார். பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவரான பிலாவல், பயங்கரவாத எதிர்ப்பு நிதியுதவியில் முன்னேற்றம் இருந்தபோதிலும், பாகிஸ்தானை FATF சாம்பல் பட்டியலில் சேர்க்க இந்தியா சர்வதேச அளவில் வற்புறுத்தியதாகக் கூறினார். காஷ்மீர் பிரச்சினையை உலகளவில் பாகிஸ்தான் வெற்றிகரமாக எழுப்பியதாகவும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மத்தியஸ்தத்திற்கான ஆதரவைக் குறிப்பிட்டதாகவும் அவர் கூறினார்.