NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கடந்த ஆண்டில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பதிவான மூன்று கொலைகள்- NCRB அறிக்கை
    அடுத்த செய்திக் கட்டுரை
    கடந்த ஆண்டில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பதிவான மூன்று கொலைகள்- NCRB அறிக்கை
    கடந்தாண்டு நாட்டில் 28,522 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன.

    கடந்த ஆண்டில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பதிவான மூன்று கொலைகள்- NCRB அறிக்கை

    எழுதியவர் Srinath r
    Dec 06, 2023
    01:29 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் கடந்த ஆண்டு பதிவான கொலைகளின் எண்ணிக்கை குறித்த தரவுகளை, தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது.

    அந்த அறிக்கையின் படி, 28,522 கொலைகள் நடைபெற்றுள்ளன. சராசரியாக நாள் ஒன்றுக்கு 78 கொலைகளும், ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 3 கொலைகளும் நடைபெறுவதாக குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.

    தேசிய குற்ற ஆவண காப்பகம் "இந்தியாவில் குற்றங்கள்-2022" என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், உத்தரப் பிரதேசத்தில் அதிகபட்சமாக 3,491 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன.

    பீகார் (2,930), மகாராஷ்டிரா (2,295), மத்தியப் பிரதேசம் (1,978), ராஜஸ்தான் (1,834), மற்றும் மேற்கு வங்கம் (1,696) முறையே அதிக கொலை வழக்குகள் பதிவான முதல் 5 மாநிலங்களாக உள்ளது.

    2nd card

    ஒன்பதே கொலை வழக்குகள் மற்றும் பதிவான சிக்கிம் மாநிலம்

    சிக்கிம் (9), நாகாலாந்து (21), மிசோரம் (31), கோவா (44), மணிப்பூர் (47) முறையே, குறைவான கொலை வழக்குகள் பதிவான மாநிலங்களாக உள்ளது.

    யூனியன் பிரதேசங்களை பொறுத்தவரையில், டெல்லியில் அதிகபட்சமாக 509 வழக்குகளும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 99 வழக்குகளும் பதிவாகியுள்ளது.

    கொலை செய்யப்பட்டவர்களில் 95.4 சதவீதம் பேர் வயது வந்தவர்கள். மேலும் கொலை செய்யப்பட்டவர்களில் 70% மேற்பட்டோர் ஆண்கள்.

    8,125 பெண்களும், 9 மூன்றாம் பாலினத்தவர்களும் கொலை செய்யப்பட்டதாக, கடந்த ஆண்டு வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

    3rd card

    கொலை செய்யப்படுவதற்கான நோக்கம் என்ன?

    இந்தியாவில் கொலைகள் நடைபெற மிக அதிக காரணமாக பிரச்சனைகள்/ சர்ச்சைகள் காரணம் என தேசிய குற்ற ஆவண காப்பகம் கூறுகிறது.

    கடந்தாண்டு மட்டும், 9,962 கொலைகள் இந்த நோக்கத்திற்காக நடைபெற்றதாக வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

    இந்த நோக்கத்தின் கீழ், மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 1,130 வழக்குகள் பதிவாகியுள்ளன, அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் 1,045 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

    சர்ச்சைகளுக்குப் பிறகு, 'தனிப்பட்ட பழிவாங்கல் அல்லது பகை' பட்டியலில் கடந்த ஆண்டு இதுபோன்ற 3,761 வழக்குகள் பதிவாகியுள்ளன.

    பீகார் (804), மத்தியப் பிரதேசம் (364), கர்நாடகா (353) ஆகிய மாநிலங்கள் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கொலை
    வழக்கு
    உத்தரப்பிரதேசம்
    இந்தியா

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    கொலை

    பல்லடம் கொலை சம்பவத்தில் உயிரிழந்தோர் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு கைது
    பட்டுக்கோட்டையில் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் தாய், சேய் இருவரும் பலி  குழந்தைகள்
    தேவகோட்டையில் காணாமல் போனதாக கூறப்பட்டவர் எலும்புக்கூடுகளாக மீட்பு  சிவகங்கை
    பெண் ஆசையால் பறிபோன ரவுடியின் உயிர், பரபரப்பு சம்பவம் - க்ரைம் ஸ்டோரி  காவல்துறை

    வழக்கு

    நடிகைகள் திரிஷா, குஷ்பூ மற்றும் நடிகர் சிரஞ்சீவி மீது மானநஷ்ட வழக்கு தொடர்வேன்: மன்சூர் அலிகான் மன்சூர் அலிகான்

    உத்தரப்பிரதேசம்

    தங்கையின் துண்டிக்கப்பட்ட தலையுடன் காவல்துறையில் சரணடைந்த அண்ணன்  கொலை
    ஞானவாபி மசூதியில் அகழ்வாராய்ச்சி பணிகளை தொடர அலகாபாத் உயர் நீதிமன்றம் அனுமதி  உயர்நீதிமன்றம்
    உ.பி.யில் கொடூரம்; சிறுவர்களை சிறுநீர் குடிக்க வைத்து ஆசனவாயில் மிளகாயை தேய்த்த கும்பல் இந்தியா
    அயோத்தி ராமர் கோவிலுக்காக உலகின் மிகப்பெரிய 400 கிலோ பூட்டை உருவாக்கிய தம்பதி  இந்தியா

    இந்தியா

    புதுச்சேரியில் உள்ள கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு  புதுச்சேரி
    நம் வாழ்வை மாற்றக்கூடிய சில ஆயுர்வேத பழக்கவழக்கங்கள் ஆயுர்வேதம்
    டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு: ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்  டெல்லி
    காதலியை கொன்று, அதை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக வைத்த நபரால் சென்னையில் பரபரப்பு  சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025