Page Loader
இன்று தமிழகத்தின் 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 
தமிழகத்தின் 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

இன்று தமிழகத்தின் 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 

எழுதியவர் Venkatalakshmi V
Dec 03, 2024
09:04 am

செய்தி முன்னோட்டம்

கரையை கடந்த 'ஃபெஞ்சல்' புயல் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ள நிலையில், மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து IMD வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "வங்கக்கடலில் உருவான 'பெஞ்சல்' புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, வடமாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் நிலவியது. தற்போது, இந்த அமைப்பு தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடலுக்கு நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தமிழகத்தின் பல பகுதிகளில், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்த மழை டிசம்பர் 8 வரை நீடிக்கக்கூடும்".

மழை நிலவரம்

தமிழகத்தில் புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட வடமாவட்டங்கள்

வானிலை ஆய்வு மையத்தின் தகவல் படி, "தமிழகத்தின் வடமாவட்ட பகுதிகள் மற்றும் கடலோர மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 50 செ.மீ. மழை பதிவாகியுள்ளது". "அடுத்தபடியாக விழுப்புரம் மாவட்டம் கெடார் 42, சூரப்பட்டு 38, விழுப்புரம் 35, தர்மபுரி அரூர் 33, விழுப்புரம் முண்டியம்பாக்கம், கோலியனூர், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருப்பாலபந்தல் 32, மடம்பூண்டியில் 31 செ.மீ. மழை பதிவாகியுள்ளது" மதுரை, திண்டுக்கல், தேனி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திருச்சி, பெரம்பலூர், திருப்பத்தூர் ஆகிய 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.