NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வங்கக்கடலில் இன்று உருவாகிறது ஃபெங்கல் புயல்; 25 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை
    அடுத்த செய்திக் கட்டுரை
    வங்கக்கடலில் இன்று உருவாகிறது ஃபெங்கல் புயல்; 25 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை
    ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று புயலாக உருவெடுக்கும்

    வங்கக்கடலில் இன்று உருவாகிறது ஃபெங்கல் புயல்; 25 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 27, 2024
    08:51 am

    செய்தி முன்னோட்டம்

    தெற்கு வங்கக்கடல் மற்றும் கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று 'ஃபெங்கல்' புயலாக உருவெடுக்கும்.

    இதன் காரணமாக இன்று, நவம்பர் 27 தமிழ்நாட்டின் 25 மாவட்டங்களில் கனமழை தொடரும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

    சென்னையிலிருந்து 800 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகத்தை நோக்கி நகர்வதால், சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நான்கு நாட்களுக்கு மிக கனமழை பொழிய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    கனமழை எச்சரிக்கை

    15 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது

    ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதன் காரணமாக, கடலுார், மயிலாடுதுறை மாவட்டங்கள், புதுச்சேரியின் காரைக்காலில் ஒரு சில இடங்களில், இன்று, 20 செ.மீ.,க்கு மேல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    இதற்கான, 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது மேலும், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 15 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    அதேபோல, நீலகிரி, கோவை, கள்ளக்குறிச்சி, திருச்சி, தென்காசி, விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

    விடுமுறை

    பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

    கனமழை காரணமாக 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    கீழ்கண்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது: கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருச்சி, ராமநாதபுரம்.

    மேலும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்கால் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு, இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    புயல் எச்சரிக்கை
    வங்க கடல்
    காற்றழுத்த தாழ்வு நிலை
    கனமழை

    சமீபத்திய

    டர்புலன்ஸின் போது வான்வெளியைப் பயன்படுத்த இண்டிகோ விமானியின் கோரிக்கையை பாகிஸ்தான் நிராகரித்தது இண்டிகோ
    ஹார்வர்டின் இந்திய, வெளிநாட்டு மாணவர்கள் 3 நாட்களில் 6 நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் அங்கேயே தொடரலாம்! ஹார்வர்ட் பல்கலைக்கழகம்
    மஹிந்திரா BE 6 ரியர் வியூ கண்ணாடி விலை மட்டும் இவ்ளோவா? இதுக்கு ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்கே வாங்கிடலாமே! மஹிந்திரா
    உக்ரைன் ட்ரோன் தாக்குதலால் கனிமொழி தலைமையிலான குழு பயணித்த விமானத்தை மாஸ்கோவில் தரையிறக்க முடியாமல் அவதி கனிமொழி

    புயல் எச்சரிக்கை

    மிக்ஜாம் புயல்: வெதர்மேன் கூறுவது என்ன? வங்க கடல்
    புயல் எச்சரிக்கை கூண்டு என்றால் என்ன? எந்த அடிப்படையில் அது ஏற்றப்படுகிறது? வானிலை அறிக்கை
    தனியார் நிறுவனங்களுக்கு நாளை விடுமுறையா? மாலைக்குள் அறிவிப்பு வெளியாகும்  வங்க கடல்
    சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் கனமழை

    வங்க கடல்

    வங்க கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுநிலை; தமிழகத்தில் கனமழை பெய்யும் கனமழை
    வங்ககடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுநிலை; இரு தினங்களுக்கு தமிழகத்தில் கனமழை! காற்றழுத்த தாழ்வு நிலை
    ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 5 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது காற்றழுத்த தாழ்வு நிலை
    வங்கக்கடலில் உருவாக இருக்கும் 2 புயல்களை பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை  இந்தியா

    காற்றழுத்த தாழ்வு நிலை

    வங்கக்கடலில் நாளை மறுதினம் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி; தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை  கனமழை
    நாளை உருவாகிறது புதிய காற்றழுத்ததாழ்வுப் பகுதி: டிச.1 வரை தமிழகத்தில் மழை நீடிக்கும் மழை
    வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி; புயலாக வலுப்பெற வாய்ப்பு வானிலை ஆய்வு மையம்
    தமிழகத்தின் 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை தமிழ்நாடு

    கனமழை

    நேபாளத்தில் இரண்டு நாட்கள் இடைவிடாத கனமழை; 192 பேர் பலியான சோகம் நேபாளம்
    வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம்
    20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வானிலை அறிக்கை
    தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழக அரசு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025