
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜூலை 2ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
செய்தி முன்னோட்டம்
தென்மேற்கு பருவமழையின் தாக்கம் தீவிரமாக இருப்பதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (ஜூன் 27) முதல் ஜூலை 2ஆம் தேதி வரை மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பருவமழை காரணமாக தொடர் மழை பெய்து வருவதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 18 செ.மீ. மழையும், கோவை சோலையாரில் 17செ.மீ., வால்பாறையில் 13செ.மீ., சின்னக்கல்லாரில் 12செ.மீ., மேலும் மேல்பவானி மற்றும் பார்சன் பள்ளத்தாக்கு பகுதிகளில் தலா 9 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தென்காசி, திருநெல்வேலி, திருப்பூர், கன்னியாகுமரி மற்றும் தேனி மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி
வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதன் அண்மையில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி மேற்கு மற்றும் வடமேற்குத் திசையில் நகர்வதால், ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோர பகுதிகள் மீது இது நகரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலை காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் மழை பெய்யும் என்றும், ஓரிரு இடங்களில் மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை ஏற்படக்கூடும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#Watch | தென்காசி குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு.. 4வது நாளாக குளிக்கத் தடை!#SunNews | #Tenkasi | #Courtallam pic.twitter.com/xvq13usyh5
— Sun News (@sunnewstamil) June 27, 2025