NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / அடுத்த குறி ஹபீஸ் சயீத்தாக இருக்குமா? வெளிநாட்டில் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகளை கொல்வது யார்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    அடுத்த குறி ஹபீஸ் சயீத்தாக இருக்குமா? வெளிநாட்டில் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகளை கொல்வது யார்?
    பிரபலமான பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் தலைவர் தான் இந்த ஹபீஸ் சயீத்.

    அடுத்த குறி ஹபீஸ் சயீத்தாக இருக்குமா? வெளிநாட்டில் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகளை கொல்வது யார்?

    எழுதியவர் Sindhuja SM
    Oct 04, 2023
    05:37 pm

    செய்தி முன்னோட்டம்

    பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவை(LeT) சேர்ந்த மிகவும் தேடப்பட்டு வந்த பயங்கரவாத தலைவர்களில் ஒருவரான முப்தி கைசர் ஃபரூக், கடந்த சனிக்கிழமை கராச்சியில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்.

    அவர் தெரியாத நபர்களால் சுட்டு கொல்லப்பட்டதாக கூறப்பட்டது.

    முப்தி கைசர் ஃபரூக், லஷ்கர்-இ-தொய்பாவை நிறுவிய நபர்களுள் ஒருவர் ஆவார்.

    ஃபரூக், 26/11 மும்பை தீவிரவாத தாக்குதலின் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் நெருங்கிய கூட்டாளிகளுள் ஒருவர்.

    அவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி தாக்குதலின் போது முதுகில் குண்டு காயம் அடைந்த ஃபரூக், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    FDS

    தொடர்ந்து கொல்லப்படும் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகள் 

    சமீப காலமாக, இந்தியாவுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டும் பல பயங்கரவாதிகள் உலகளவில் கொல்லப்பட்டு வருகின்றனர். அதில் சில கொலைகள் பாகிஸ்தானிலும் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    அப்படி கொல்லப்பட்ட நபர் தான் முப்தி கைசர் ஃபரூக்.

    அவர் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் நெருங்கிய கூட்டாளி மட்டுமல்ல, இந்தியாவால் தீவிரமாக தேடப்பட்ட இன்னொரு பயங்கரவாதியும் ஆவார்.

    நீண்ட காலமாக ஹபீஸ் சயீதைப் போலவே, இந்தியா ஃபரூக்கையும் தேடி வந்தது.

    இருப்பினும், பாகிஸ்தானில் அவர் தங்கியிருந்ததால், இந்தியாவால் அவரை கைது செய்ய முடியவில்லை.

    இந்நிலையில், "தெரியாத நபர்களால்" அவர் சுட்டு கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

    ஜெய்ஷ்மி-இன் ஜியா-உர்-ரஹ்மான் உள்ளிட்ட பிற பயங்கரவாதிகளும் இதே போல் கொல்லப்பட்டனர்.

    க்ஜ்கவ்

    கனடாவில் கொல்லப்பட்ட காலிஸ்தான் பயங்கரவதியால் ஏற்பட்ட பிரச்சனை 

    கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் செயல்பட்டு வந்த இந்தியாவுக்கு எதிரான காலிஸ்தான் பயங்கரவதிகளும் இதே போல் அடுத்தடுத்து கொல்லப்பட்டனர்.

    ஆனால், அவர்கள் யாரால் கொல்லப்படுகிறார்கள் என்பது இப்போது வரை தெரியவில்லை.

    தற்போது சூடுபிடித்திருக்கும் இந்தியா-கனடா பிரச்சனைகளும் ஒரு பயங்கரவாதியின் கொலை தொடர்புடையது தான் என்பது நினைவுகூரத்தக்கது.

    கடந்த ஜூன் மாதம் கனடாவில் உயிரிழந்த காலிஸ்தான் பயங்கரவாதியை கொன்றதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக சமீபத்தில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சமீபத்தில் குற்றம் சாட்டினார்.

    அதை தொடர்ந்து, இந்திய அரசாங்கத்திற்கும் கனட அரசாங்கத்திற்கும் ராஜதந்திர மோதல்கள் நடந்து வருகிறது.

    டிவ்கஃஜா

    ஹபீஸ் சயீத்துக்கு அதிகரித்து வரும் சிரமங்கள் 

    இந்தியாவால் மிகவும் தேடப்படும் பயங்கரவாதி ஹபீஸ் சயீத் ஆவார்.

    பிரபலமான பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் தலைவர் தான் இந்த ஹபீஸ் சயீத்.

    சமீப காலமாக, இவர் அதிகமான சவால்களை எதிர்கொண்டு வருகிறார்.

    செப்டம்பர் 26 முதல், ஹபீஸ் சயீத்தின் மகன் கமாலுதீன் சயீத்தை காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

    அவர் எங்கிருக்கிறார் என்பது குறித்த உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

    செப்டம்பர் 26ஆம் தேதி, பெஷாவரில் இருந்து காரில் கமாலுதீன் சயீத், சில நபர்களால் கடத்தப்பட்டதாகவும், அதன் பிறகு அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.

    பாகிஸ்தானின் புலனாய்வு அமைப்பான ஐஎஸ்ஐ இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகிறது.

    ஆனால் கடத்தல்காரர்களின் அடையாளம் இதுவரை கண்டறியப்படவில்லை.

    டொய்வ்க்க்லன்

    ஹபீஸ் சயீத்தின் சகோதரருக்கு கடும் பாதுகாப்பு 

    லஷ்கர்-இ-தொய்பா உறுப்பினர்களின் மீதான தொடர்ச்சியான மற்றும் அதிகரித்து வரும் தாக்குதல்களால், ஐஎஸ்ஐ, கமாலுதீன் சயீதை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றியுள்ளதாகவும், அவர் கடத்தப்பட்ட செய்தி தவறானது என்றும் சில பாகிஸ்தான் ஊடகங்கள் கூறி வருகின்றன.

    இதற்கிடையில், ஹபீஸ் சயீத்தின் சகோதரர் தல்ஹாவுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

    தல்ஹா, லஷ்கர்-இ-தொய்பாவின் நிதிகளை நிர்வகிக்கும் பொறுப்பு வகித்து கொண்டே பல ஆண்டுகளாக பயங்கரவாதிகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.

    கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், தல்ஹா சயீத்தை, பயங்கரவாதியாக இந்திய அரசு அறிவித்தது. மேலும், அவரை உலகளாவிய பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டும் என்று இந்தியா வாதிட்டு வருகிறது. ஆனால், சீனா இதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாகிஸ்தான்
    பயங்கரவாதம்
    இந்தியா
    உலகம்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    பாகிஸ்தான்

    ஆசிய சாம்பியன்ஷிப் இந்தியா-பாகிஸ்தான் ஹாக்கி போட்டியினை காணச்செல்லும் முதல்வர்  மு.க ஸ்டாலின்
    பாகிஸ்தான் பிரதமரின் கோரிக்கையின் பேரில் அந்நாட்டு நாடளுமன்றம் இரவோடு இரவாகக் கலைப்பு நாடாளுமன்றம்
    பாகிஸ்தானின் இடைக்கால பிரதமராக செனட்டர் அன்வர்-உல்-ஹக் காக்கர் தேர்வு பிரதமர்
    பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் சீனர்கள் மீது துப்பாக்கி சூடு  சீனா

    பயங்கரவாதம்

    நக்சல் எதிர்ப்பிலிருந்து தீவிரவாத எதிர்ப்புக்கு இடம் பெயரும் சிஆர்பிஎஃப் கோப்ரா படைப்பிரிவு ஜம்மு காஷ்மீர்
    சிரியாவில் நடந்த தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் கொலை; புதிய தலைவர் அறிவிப்பு ஐ.எஸ்.ஐ.எஸ்
    தீவிரவாதியின் மனைவியை நாட்டின் அமைச்சராக நியமித்த பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    தீவிரவாதத்தை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடன் கிரிக்கெட் இல்லை: அனுராக் தாக்கூர் பிசிசிஐ

    இந்தியா

    மகாத்மா காந்திக்கு குடியரசு தலைவர் முர்மு மற்றும் பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி  பிரதமர் மோடி
    ஜம்மு காஷ்மீரின் அடுத்த துணைநிலை ஆளுநர் ஆகிறாரா குலாம் நபி ஆசாத்?  ஜம்மு காஷ்மீர்
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: அக்டோபர் 2 தங்கம் வெள்ளி விலை
    சக இந்திய வீராங்கணை நந்தினி அகசராவுக்கு எதிராக போராடும் இந்திய தடகள வீராங்கணை ஸ்வப்னா பர்மன் ஆசிய விளையாட்டுப் போட்டி

    உலகம்

    பிரேசிலின் அமேசான் பகுதியில் விமான விபத்து: 14 பேர் பலி  பிரேசில்
    இரண்டாவது மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்றார் கூகுள் துணை நிறுவனர் செர்கே பிரின் கூகுள்
    பாகிஸ்தானின் 29வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் காசி ஃபேஸ் ஈஷா  பாகிஸ்தான்
    அவசரநிலையை அறிவித்த அமெரிக்க விமானம் மாயமானதால் பரபரப்பு  அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025