NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / நான்கு நாட்கள் போர் நிறுத்தத்தை நீட்டிக்க முயற்சிப்பதாக ஹமாஸ் தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    நான்கு நாட்கள் போர் நிறுத்தத்தை நீட்டிக்க முயற்சிப்பதாக ஹமாஸ் தகவல்
    ஹமாஸ் பிடித்து வைத்திருந்த நான்கு வயது இஸ்ரேல்-அமெரிக்க பணயக் கைதி அவிகைல் இடன், தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

    நான்கு நாட்கள் போர் நிறுத்தத்தை நீட்டிக்க முயற்சிப்பதாக ஹமாஸ் தகவல்

    எழுதியவர் Srinath r
    Nov 27, 2023
    12:43 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த 7 வாரங்களாக நடைபெற்று வந்த, இஸ்ரேல்- ஹமாஸ் போரில், ஒப்பந்தத்தின்படி நான்கு நாள் போர் நிறுத்தம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தொடங்கியது. இதனை, நீட்டிக்க முயற்சிப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

    "மனிதாபிமான போர்நிறுத்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படி விடுவிக்கப்பட்ட பணயக்கைதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தீவிர முயற்சியின் மூலம், நான்கு நாட்களுக்கு பிறகு போர் நிறுத்தத்தை நீட்டிக்க முயற்சிக்கிறோம்" என ஹமாஸ் தெரிவித்துள்ளது.

    இது குறித்து பிபிசி இடம் பேசிய மூத்த பாலஸ்தீன அதிகாரி, ஹமாஸ், போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்பவர்களிடம், போர் நிறுத்தத்தை மேலும் இரண்டிலிருந்து நான்கு நாட்கள் அதிகரிக்கவும், அந்த நீட்டிப்பின் மூலம், 20 முதல் 40 இஸ்ரேல் பணய கைதிகள் விடுவிக்கப்படலாம் எனவும் தெரிவித்தார்.

    2nd card

    பணயக் கைதிகளை ஹமாஸ் கண்டறிய வேண்டும்- கத்தார் 

    போர் நிறுத்தத்திற்கு மத்தியஸம் செய்து வரும் கத்தார் பிரதமர், காசாவில் மற்ற அமைப்புகளால் பிடித்து வைக்கப்பட்டுள்ள டஜனுக்கும் மேற்பட்ட பணயக் கைதிகளை கண்டறிந்தால் மட்டுமே, போர் நிறுத்தம் நீட்டிக்கப்படும் வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.

    கடந்த அக்டோபர் 7ஆம் தேதி பிடித்துச் செல்லப்பட்ட பெரும்பான்மையான பணயக் கைதிகள், ஹமாஸ் வசம் இருந்தாலும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்கள் பாலஸ்தீன இஸ்லாமிய ஜிகாத் அமைப்பினர், உள்ளிட்ட பிற அமைப்பினரிடம் உள்ளனர்.

    கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 40 பேரை, ஹமாஸ் அமைப்பை தவிர மற்றவர்கள் பிடித்து வைத்துள்ளதாக தெரிவித்தார்.

    மேலும் இவர்களில், எத்தனை நபர்களை ஹமாஸ் அமைப்பால் கண்டறிய முடியும் என்பது தெரியவில்லை எனவும் கூறினார்.

    3rd card

    இதுவரை எத்தனை பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்?

    நான்கு நாள் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி, அனைத்து குழந்தைகள், பெண்கள் உட்பட 50 பணயக் கைதிகளை ஹமாஸ் அமைப்பும், அதற்கு பதிலாக, இஸ்ரேல் சிறைகளில் உள்ள 150 பாலஸ்தீன கைதிகளையும் விடுவிக்க ஒப்புக்கொள்ளப்பட்டது.

    மூன்றாவது நாள் போர் நிறுத்தத்தில் தற்போது வரை, 39 இஸ்ரேலிய குடிமக்கள், 13 பேர் கொண்ட மூன்று குழுக்களாக ஹமாஸால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

    39 பேர் கொண்ட மூன்று குழுக்களாக, 117 பாலஸ்தீன கைதிகள் இஸ்ரேல் சிறைகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும், ஹமாஸ் பிடித்து வைத்திருந்த தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 13 நபர்கள், இஸ்ரேல்-ரஷ்யா குடியுரிமை பெற்ற ஒருவர் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இஸ்ரேல்
    ஹமாஸ்
    காசா

    சமீபத்திய

    தமிழ்நாட்டில் SSLC பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விகிதம் 93.80% தமிழ்நாடு
    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்
    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    நவம்பர் 30 வரை இஸ்ரேலுக்கு செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் ரத்து  இந்தியா
    பாலஸ்தீன 'ஹமாஸ்' அமைப்பை இந்தியா ஏன் தடை செய்யவில்லை? ஹமாஸ்
    இஸ்ரேலின் தாக்குதலை முடிவுக்குக் கொண்டுவர இந்தியா முன்வர வேண்டும்: ஈரான் வேண்டுகோள்  ஈரான்
    ஒரு மாதத்தை தொட்ட இஸ்ரேல் ஹமாஸ் மோதல்- இதுவரை நடந்தது என்ன? இஸ்ரேல்

    இஸ்ரேல்

    காசா மக்களுக்கு "உண்மையான எதிர்காலம்" வழங்குவதாக இஸ்ரேல் பிரதமர் உறுதி காசா
    காசாவை நிரந்தரமாக ஆக்கிரமிப்பதற்கு எதிராக இஸ்ரேலை எச்சரித்த அமெரிக்கா இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    காசாவில் தாக்குதலை தீவிரப்படுத்திய இஸ்ரேல்-ஆயிரக்கணக்கான மக்கள் தெற்கு நோக்கி வெளியேறினர் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
     காசாவில் கடும் போருக்கு மத்தியில் திறக்கப்பட்ட புதிய பள்ளி காசா

    ஹமாஸ்

    இஸ்ரேலி பெண்கள் மற்றும் குழந்தைகளை கொன்றதாக ஒப்புக்கொண்ட ஹமாஸ் வீரர் இஸ்ரேல்
    அக்டோபர் 7 தாக்குதல் போல மற்றொரு தாக்குதலை நடத்தவும், இஸ்ரேலை அழிக்கவும் ஹமாஸ் சபதம் இஸ்ரேல்
    காசா நகரை சுற்றி வளைத்த இஸ்ரேல் படைகள், பைகளில் அனுப்பப்படுவார்கள் என ஹமாஸ் எச்சரிக்கை இஸ்ரேல்
    ரஷ்யாவின் வாக்னர் குழு ஹெஸ்புல்லாவுக்கு அதிநவீன ஏவுகணைகளை அனுப்புகிறது- அமெரிக்கா இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    காசா

    காசா மருத்துவமனை குண்டுவெடிப்பு குறித்து பிரதமர் மோடி கண்டனம் மருத்துவமனை
    இஸ்ரேலை அடைந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்; இஸ்ரேல் பிரதமருடன் இணைந்து கூட்டறிக்கை இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    'மனிதாபிமான அடிப்படையில் காசாவுக்கு தொடர்ந்து உதவுவோம்' - ஐநா.,வில் இந்தியா அறிவிப்பு இந்தியா
    இஸ்ரேல் தாக்குதலில் கிட்டத்தட்ட 50 பணயக்கைதிகள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அறிக்கை இஸ்ரேல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025