LOADING...
துணை ஜனாதிபதி தேர்தல் இன்று: தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சி.பி. ராதாகிருஷ்ணன் vs இந்தியாவின் சுதர்ஷன் ரெட்டி களத்தில்
நாடாளுமன்றத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்

துணை ஜனாதிபதி தேர்தல் இன்று: தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சி.பி. ராதாகிருஷ்ணன் vs இந்தியாவின் சுதர்ஷன் ரெட்டி களத்தில்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 09, 2025
07:50 am

செய்தி முன்னோட்டம்

இன்று துணை ஜனாதிபதிக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் எதிர்க்கட்சியான இந்திய கூட்டணியின் வேட்பாளரான முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி பி. சுதர்ஷன் ரெட்டியை எதிர்த்து, ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் மூத்த பாஜக தலைவரும் முன்னாள் ஆளுநருமான சி.பி. ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். இந்தப் போட்டி, இரண்டு முக்கிய அரசியல் கூட்டணிகளுக்கு இடையேயான நேரடிப் போராகக் கருதப்படுகிறது. நாடாளுமன்ற வளாகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரகசிய வாக்கெடுப்பு மூலம் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்வார்கள். மாலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும், அன்றே மாலையில் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எண்ணிக்கை

வாக்குகள் எண்ணிக்கை

துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்பில் 781 எம்.பி.க்கள் பங்கேற்பார்கள்- ராஜ்யசபாவிலிருந்து 238, மக்களவையிலிருந்து 542; ஒரு மக்களவை மற்றும் ஆறு மாநிலங்களவை இடங்கள் தற்போது காலியாக உள்ளன. பெரும்பான்மைக்கு 391 இடங்கள் தேவை. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 425 எம்.பி.க்கள் உள்ளனர், மேலும் YSR காங்கிரஸ் கட்சியின்-11 எம்.பி.க்கள் ஆதரவும் உள்ளது. இதன் மூலம் அதன் எண்ணிக்கை 436-ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையில், எதிர்க்கட்சியான இந்திய கூட்டணிக்கு 324 எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். NDA கூட்டணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், கடந்த 2022ஆம் ஆண்டு ஜக்தீப் தன்கர், மார்கரெட் ஆல்வாவை 346 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்ததை விட இம்முறை வித்தியாசம் குறைவாக இருக்கும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

வேட்பாளர்கள்

VP வேட்பாளர்கள் பற்றி ஒரு பார்வை

தமிழ்நாட்டை சேர்ந்த பாஜக மூத்த தலைவரும் தற்போதைய மகாராஷ்டிராவின் ஆளுநருமான சி.பி. ராதாகிருஷ்ணன் (67) NDA வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். வாஜ்பாய் அரசாங்கத்தின் போது கோவையிலிருந்து இரண்டு முறை மக்களவை உறுப்பினராக இருந்த அவர், மாநிலங்களவைக்கு தலைமை தாங்குவதற்குத் தகுதியான அனுபவம் வாய்ந்த மற்றும் களங்கமற்ற தலைவராகக் காட்டப்படுகிறார். மறுபுறம், INDIA கூட்டணியின் வேட்பாளரும் தெலுங்கானாவை சேர்ந்த ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியுமான பி. சுதர்ஷன் ரெட்டி(79). மாநில ஆதரவுடன் நடத்தப்பட்ட சல்வா ஜூடும் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று அறிவித்தல் மற்றும் கருப்புப் பணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டல் உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புகளுக்கு பெயர் பெற்றவர் ரெட்டி, சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதிக்கான ஒரு வீரராக முன்வைக்கப்படுகிறார்.