NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு: ஜூன் 4 வரை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகத்தில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு: ஜூன் 4 வரை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல்
    தமிழகத்தில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு: ஜூன் 4 வரை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

    எழுதியவர் Venkatalakshmi V
    May 30, 2025
    08:43 am

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று முதல் ஜூன் 4 வரை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று மாற்றம் அடைந்ததால், தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நேற்று நீலகிரி, கோவை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், தேனி மாவட்டத்தில் சில இடங்களிலும் மழை பதிவானது.

    அவலாஞ்சியில் 19 செ.மீ., சின்னக்கல்லாரில் 12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

    நாளை முதல் ஜூன் 4 வரை, தமிழகத்தில் சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்யும் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

    நீலகிரி

    நீலகிரியில் உள்ள சுற்றுலா தலங்கள் மூடல் 

    முன்னதாக கடந்த 2 நாட்களாக நீலகிரி மாவட்டத்தின் ஊட்டி, கூடலூர், பந்தலூர் மற்றும் குந்தா பகுதிகளில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை தொடர்ந்து கொட்டித் தீர்க்கிறது.

    இதன் விளைவாக, பல இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்துள்ளன. மண் சரிவு ஏற்பட்டு முக்கிய சாலைகளில் போக்குவரத்து முடங்கி உள்ளது.

    மழை மற்றும் காற்றால் மின் விநியோகம் மற்றும் குடிநீர் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.

    விபத்துகள் ஏற்படாமல் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்கிய சுற்றுலா தலங்கள்—தொட்டபெட்டா, அவலாஞ்சி, டால்பின் நோஸ், பைக்காரா நீர்வீழ்ச்சி, அரசு தாவரவியல் பூங்கா மற்றும் ரோஜா பூங்கா—தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் இன்றும், நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மழை
    தமிழகம்
    தமிழ்நாடு
    தமிழ்நாடு செய்தி

    சமீபத்திய

    தமிழகத்தில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு: ஜூன் 4 வரை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் மழை
    தமிழகத்தில் தினசரி 15 பேருக்கு கொரோனா பாதிப்பு: பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தல் தமிழ்நாடு
    அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பரஸ்பர வரிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்! அமெரிக்கா
    ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 2025: 36 ஆண்டுகளுக்குப் பிறகு தடை தாண்டும் ஓட்டத்தில் இந்தியாவிற்கு தங்கம் ஆசிய சாம்பியன்ஷிப்

    மழை

    வங்கக்கடலில் சனிக்கிழமை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி; நவம்பர் 26 - 28 வரை தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் காற்றழுத்த தாழ்வு நிலை
    வலுப்பெறுகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி; தமிழகத்தில் நாளை நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் வானிலை எச்சரிக்கை
    வங்கக்கடலில் வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் தமிழகம்
    மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்; தமிழ்நாட்டில் கனமழைக்கு எச்சரிக்கை விடுத்தது வானிலை ஆய்வு மையம் வானிலை ஆய்வு மையம்

    தமிழகம்

    அகவிலைப்படி 2 சதவீதம் உயர்வு உள்ளிட்ட 9 முக்கிய அறிவிப்புகள்: முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாடு
    தமிழகத்தில் பைப் லைன் வழியே எரிவாயு இணைப்பு: 1.50 லட்சம் வீடுகள் பதிவு தமிழ்நாடு
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    திருநெல்வேலி இருட்டுக்கடையில் புதிய டுவிஸ்ட்; நிறுவனத்தை உரிமை கோரும் மூன்றாவது நபர்; பின்னணி என்ன? திருநெல்வேலி

    தமிழ்நாடு

    மக்களே உஷார்....தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் மே 4 முதல் மே 28 வரை இருக்குமாம்! தமிழ்நாடு செய்தி
    தமிழகத்தில் 8 ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை மழை
    தமிழக மாணவர்களே அலெர்ட்; பொறியியல் படிப்பிற்கு மே 7 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் பொறியியல்
    ஐந்து எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடைமை; வாரிசுகளுக்கு பரிசு வழங்கி கௌரவித்த முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாடு செய்தி

    தமிழ்நாடு செய்தி

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விடுபட்டவர்கள் விண்ணப்பிக்க, ஜூன் மாதம் சிறப்பு முகாம்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் அமைச்சர்
    மாதம் ₹200க்கு அதிவேக பிராட்பேண்ட் இன்டர்நெட்; தமிழக அரசு அதிரடி அறிவிப்பு இன்டர்நெட்
    12 ஆண்டுகளுக்குப் பிறகு வன்னியர் சங்க மாநாடு; கடுமையான நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி தமிழகம்
    எம்-சாண்ட், பி-சாண்ட் மற்றும் ஜல்லி ஆகியவற்றின் விலையை ₹1,000 குறைத்தது தமிழக அரசு தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025