NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கனமழை எச்சரிக்கை எதிரொலி- தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
    அடுத்த செய்திக் கட்டுரை
    கனமழை எச்சரிக்கை எதிரொலி- தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
    கடந்த வாரம் வரை தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 17% குறைவாக பெய்துள்ளது.

    கனமழை எச்சரிக்கை எதிரொலி- தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

    எழுதியவர் Srinath r
    Nov 14, 2023
    09:29 am

    செய்தி முன்னோட்டம்

    கனமழை எச்சரிக்கையால் தமிழ்நாட்டில் நாகை, அரியலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வகோட்டை, கரம்பக்குடி தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழையால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

    மழை தொடர்ந்து தீவிரமாக பெய்து வருவதால், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து கல்வி அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் கடலோர மாவட்டங்களில் மறு அறிவிப்பு வரும் வரை, மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    2nd card

    இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலை

    தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக்க கூடும் எனவும்,

    அது மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து, வரும் 16ஆம் தேதி மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதன் காரணமாகவும், தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியாலும், தமிழகத்தில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    3rd card

    தமிழ்நாட்டில் நான்கு மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை

    விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் கடலூர் மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் இன்று மிக கன மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

    மேலும், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மாவட்ட ஆட்சியர்
    வானிலை எச்சரிக்கை
    கல்லூரி மாணவர்கள்
    கல்லூரி

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    மாவட்ட ஆட்சியர்

    ஒடிசா ரயில் விபத்து: உடல்கள் வைக்கப்பட்டிருந்த பள்ளி இடிக்கப்பட்டது இந்தியா
    நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதல் இந்தியா

    வானிலை எச்சரிக்கை

    பிப்பர்ஜாய் புயல், பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கான மழை எச்சரிக்கை இந்தியா
    தீவிரமடைந்த 'பிபர்ஜாய்' புயல்: குஜராத், மும்பைக்கு கடும் எச்சரிக்கை  இந்தியா
    பிபர்ஜாய் புயல்: பிரதமர் மோடி தலைமையில் அவசர கூட்டம்  இந்தியா
    பிப்பர்ஜாய் புயல், பருவமழை: தமிழகத்திற்கான மழை எச்சரிக்கை தமிழ்நாடு

    கல்லூரி மாணவர்கள்

    மதுரை யாதவா கல்லூரியில் கல்வி உதவித்தொகை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு மதுரை
    பாலியல் புகாரால் சர்ச்சைக்குள்ளான சென்னை கலாஷேத்ரா கல்லூரி இன்று மீண்டும் திறப்பு சென்னை
    தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பிற்காக 66 லட்சம் பேர் காத்திருப்பு  தமிழ்நாடு
    சென்னை கல்லூரி மாணவர்களுக்கு மாதாந்திர பாஸ் அறிமுகம் - சென்னை மெட்ரோ  சென்னை

    கல்லூரி

    தேசிய அளவில் மீண்டும் முதலிடத்தை பிடித்த IIT மெட்ராஸ் இந்தியா
    கல்லூரிகளில் சேர்ந்து செப்.30க்குள் விலகும் மாணவர்களுக்கு முழு கட்டணத்தையும் திருப்பி தர வேண்டும்: UGC யுஜிசி
    கோவை கிருஷ்ணா கல்லூரியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 5 பேர் பலி;3 பேர் மீது வழக்கு  கோவை
    கனமழை காரணமாக நீலகிரி, வால்பாறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை நீலகிரி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025