NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 16 ஆண்டுகளுக்கு பிறகு மே மாதத்தில் தென்மேற்கு பருவமழை; 8 நாட்கள் முன்கூட்டியே கேரளாவில் பருவமழை தொடங்கியது!
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    16 ஆண்டுகளுக்கு பிறகு மே மாதத்தில் தென்மேற்கு பருவமழை; 8 நாட்கள் முன்கூட்டியே கேரளாவில் பருவமழை தொடங்கியது!
    பொதுவாக ஜூன் 1ஆம் தேதி தொடங்கும் தென்மேற்கு பருவமழை

    16 ஆண்டுகளுக்கு பிறகு மே மாதத்தில் தென்மேற்கு பருவமழை; 8 நாட்கள் முன்கூட்டியே கேரளாவில் பருவமழை தொடங்கியது!

    எழுதியவர் Venkatalakshmi V
    May 24, 2025
    12:03 pm

    செய்தி முன்னோட்டம்

    கேரளாவில் பருவமழை துவங்கி விட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    பொதுவாக ஜூன் 1ஆம் தேதி தொடங்கும் தென்மேற்கு பருவமழை, இந்த ஆண்டு 8 நாட்கள் முன்னதாகவே தொடங்குவது கடந்த 16 ஆண்டுகளில் முதல்முறையாகும்.

    குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் முன்னேறி வரும் பருவமழை அமைப்பு ஆகியவற்றின் கலவையால், கடந்த இரண்டு நாட்களாக கேரளாவின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து IMD வெளியிட்ட X பதிவில், "கடந்த 2009 ஆம் ஆண்டு, மே 23, அன்று கேரளாவில் முன்கூட்டியே பருவமழை பெய்யத் தொடங்கிய பிறகு, இதுவே சீக்கிரமாக கேரளாவில் பருவமழை தொடங்கும் தேதியாகும்" எனத்தெரிவித்துள்ளது.

    விவரங்கள்

    கடந்த அண்டை விட முன்கூட்டியே வரும் பருவமழை

    1975ஆம் ஆண்டு தொடக்க தேதிகளைக் கருத்தில் கொண்டு, கேரளாவில் பருவமழை முன்னதாக தொடங்கியது 1990இல் தான்.

    இது வழக்கமான தொடக்க தேதிக்கு 13 நாட்கள் முன்னதாகும்.

    கடைசியாக 2009 மற்றும் 2001ஆம் ஆண்டுகளில் பருவமழை இவ்வளவு சீக்கிரமாக மாநிலத்தில் வந்தது. அப்போது அது மே 23 அன்று மாநிலத்தை அடைந்தது.

    மறுபுறம், தாமதமாகத் தொடங்கியதற்கான பதிவு 1972 ஆம் ஆண்டு ஆகும், அப்போது பருவமழை ஜூன் 18 ஆம் தேதி தாமதமாகத் தொடங்கியது.

    கடந்த 25 ஆண்டுகளில், மிகவும் தாமதமான வருகை 2016 ஆம் ஆண்டில் நிகழ்ந்தது, அப்போது ஜூன் 9 அன்று பருவமழை கேரளாவில் நுழைந்தது.

    வானிலை முன்னறிவிப்பு

    தென் மாநிலங்களுக்கு முன்னறிவிப்பு

    தென் மாநிலங்களில், கேரளா, கடலோர மற்றும் தெற்கு உட்புற கர்நாடகா, கொங்கண் மற்றும் கோவா ஆகிய இடங்களில் சனிக்கிழமை மிக அதிக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது.

    மே 29 வரை கேரளா மற்றும் கடலோர கர்நாடகாவில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது, மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும்.

    தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் ஆந்திராவிலும் அடுத்த ஐந்து நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பருவமழை
    கேரளா
    மழை
    வானிலை ஆய்வு மையம்

    சமீபத்திய

    16 ஆண்டுகளுக்கு பிறகு மே மாதத்தில் தென்மேற்கு பருவமழை; 8 நாட்கள் முன்கூட்டியே கேரளாவில் பருவமழை தொடங்கியது! பருவமழை
    எளிமையான KYC விதிகளை முன்மொழிந்துள்ள RBI: சிறு சிறு மாற்றங்களுக்கு எல்லாம் இனி ஆவணங்களை மீண்டும் சமர்ப்பிக்க வேண்டியதில்லை ரிசர்வ் வங்கி
    ஆப்பிள் நிறுவனத்திற்கு வரி அச்சுறுத்தல் விடுத்ததை அடுத்து, சாம்சங்கை குறிவைக்கும் டிரம்ப் சாம்சங்
    கூட்டுறவு சங்கத்தில் 50 சவரன் போலி நகைகள் அடமானம் வைத்து 18.67 லட்சம் ரூபாய் கடனாக பெற்றது அம்பலம்  சிவகங்கை

    பருவமழை

     மத்திய வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை ஆய்வு மையம்  வானிலை ஆய்வு மையம்
    அரபிக் கடல் பகுதியில் புதிய புயல் உருவாக வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்  வானிலை ஆய்வு மையம்
    தமிழ்நாட்டில் 10 வாரங்களில் 10 ஆயிரம் மழைக்கால மருத்துவ முகாம்கள் - தமிழக அரசு திட்டம்  மு.க ஸ்டாலின்
    வடகிழக்கு பருவமழை வழக்கத்தைவிட 43% குறைவாக பதிவு  வானிலை ஆய்வு மையம்

    கேரளா

    கேரளாவில் வேகமாக பரவும் நிபா வைரஸ்: 175 பேர் பாதிப்பு நிபா வைரஸ்
    இந்தியாவில் இரண்டாவது Mpox வழக்கு பதிவு; துபாயில் இருந்து திரும்பியவரிடம் பாதிப்பு உறுதி குரங்கம்மை
    மேலும் 2 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு; கேரளாவின் மலப்புரத்தில் அதிகரிக்கும் நோய்த்தொற்றுகள் நிபா வைரஸ்
    இந்தியாவின் முதல் ஆபத்தான கிளேட் 1 வகை குரங்கம்மை தொற்று கேரள நபருக்கு இருப்பது கண்டுபிடிப்பு குரங்கம்மை

    மழை

    வங்கக்கடலில் வளிமண்டல சுழற்சி உருவானது: 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு வானிலை அறிக்கை
    வங்கக்கடலில் சனிக்கிழமை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி; நவம்பர் 26 - 28 வரை தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் காற்றழுத்த தாழ்வு நிலை
    வலுப்பெறுகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி; தமிழகத்தில் நாளை நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் வானிலை எச்சரிக்கை
    வங்கக்கடலில் வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் தமிழகம்

    வானிலை ஆய்வு மையம்

    நான்கு தமிழக மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் கணிப்பு கனமழை
    தென் தமிழகத்தின் மூன்று மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு கனமழை
    சென்னை மற்றும் வட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் நாளையும் பனி மூட்டம்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல் சென்னை
    இந்த ஆண்டு பெங்களூரை அளவுக்கதிகமாக வெப்பம் தாக்கும்: வானிலை ஆய்வு மையம் வானிலை எச்சரிக்கை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025