NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல்
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல்
    ஹபீஸ் சயீத், சாஜித் மிர் மற்றும் ஜாகியுர் ரஹ்மான் லக்வி ஆகியோரை இஸ்லாமாபாத் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தல்

    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல்

    எழுதியவர் Venkatalakshmi V
    May 20, 2025
    08:20 am

    செய்தி முன்னோட்டம்

    பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் "இடைநிறுத்தப்பட்டுள்ளது" என்றும் "முடிவடையவில்லை" என்றும் இஸ்ரேலுக்கான இந்திய தூதர் ஜே.பி. சிங் வலியுறுத்தியுள்ளார்.

    26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் முக்கிய குற்றவாளியான தஹாவ்வூர் ஹுசைன் ராணாவை அமெரிக்கா ஒப்படைத்தது போலவே, முக்கிய பயங்கரவாதிகளான ஹபீஸ் சயீத், சாஜித் மிர் மற்றும் ஜாகியுர் ரஹ்மான் லக்வி ஆகியோரையும் இஸ்லாமாபாத் ஒப்படைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

    திங்களன்று இஸ்ரேலிய தொலைக்காட்சி சேனலான i24-க்கு அளித்த பேட்டியில், சிங், ஆபரேஷன் சிந்தூர், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்பை குறிவைத்து நடத்தப்பட்டதாகவும், ஏப்ரல் 22-ம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இது தூண்டப்பட்டதாகவும் கூறினார்.

    போர் நிறுத்தம் 

    போர் நிறுத்தம் இடைநிறுத்தம் மட்டுமே என இந்திய தூதர் உறுதி

    போர் நிறுத்தம் நீடிக்குமா என்று கேட்டதற்கு, "ஆம், ஆபரேஷன் சிந்தூர் இடைநிறுத்தம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது" என மீண்டும் வலியுறுத்தினார்.

    "பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் தொடரும். நாங்கள் ஒரு புதிய இயல்பை அமைத்துள்ளோம், மேலும் புதிய இயல்பானது மூலம் ஒரு தாக்குதல் உத்தியைப் பின்பற்றுவோம். பயங்கரவாதிகள் எங்கிருந்தாலும், அந்த பயங்கரவாதிகளைக் கொல்ல வேண்டும், அவர்களின் உள்கட்டமைப்பை அழிக்க வேண்டும். எனவே அது இன்னும் முடிவடையவில்லை, ஆனால் நாம் பேசும்போது போர்நிறுத்தம் இன்னும் அப்படியே உள்ளது" என்று சிங் வலியுறுத்தினார்.

    சிந்து நதி நீர் ஒப்பந்தம்

    சித்து நதி நீர் ஒப்பந்தம் இடைநிறுத்தம் சரியே என வலியுறுத்தல்

    சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை (IWT) நிறுத்தி வைப்பது ஒரு "போர் நடவடிக்கை" என்ற பாகிஸ்தானின் கூற்றை நிராகரித்த சிங், ஒப்பந்தத்தின் கொள்கைகளான நல்லெண்ணம் மற்றும் நட்புறவை பாகிஸ்தான் ஒருபோதும் கடைப்பிடிக்கவில்லை என்று கூறினார்.

    "நாங்கள் தண்ணீரைப் பாய அனுமதித்தாலும், பாகிஸ்தான் பயங்கரவாதத்தை இந்தியாவுக்குள் பாய அனுமதித்தது," என்று அவர் கூறினார்.

    "நமது பிரதமர் தெளிவுபடுத்தியுள்ளார் - இரத்தமும் தண்ணீரும் ஒன்றாகப் பாய முடியாது." பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவளிப்பதால் இந்தியாவில் பொதுமக்கள் விரக்தியடைந்ததால் ஒப்பந்தம் கைவிடப்பட்டது என்று சிங் கூறினார்.

    பயங்கரவாதிகள்

    "பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடும் தீவிரவாதிகள்"

    பல வருட ஆதாரங்கள் மற்றும் சர்வதேச அழுத்தங்கள் இருந்தபோதிலும், இந்தியாவில் பெரிய தாக்குதல்களுக்குப் பொறுப்பான லக்வி, ஹபீஸ் சயீத் மற்றும் சஜித் மிர் போன்ற பயங்கரவாதிகள் தொடர்ந்து சுதந்திரமாக இருப்பதை சிங் எடுத்துரைத்தார்.

    "நாங்கள் ஆவணங்களையும் தொழில்நுட்ப உள்ளீடுகளையும் வழங்கியுள்ளோம். அமெரிக்கா ஆதாரங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளது. ஆனாலும், இந்த நபர்கள் சுதந்திரமாக சுற்றித் திரிகிறார்கள்," "அமெரிக்கா ராணாவை ஒப்படைக்க முடியும் போது, ​​பாகிஸ்தானால் ஏன் இந்த பயங்கரவாதிகளை ஒப்படைக்க முடியாது?" என்று அவர் கூறினார்.

    பஹல்காம் தாக்குதலை விசாரிக்க பாகிஸ்தானின் முன்மொழிவை இந்தியா திசைதிருப்பியது என்ற குற்றசாட்டை சிங் நிராகரித்தார். அதோடு, மேலும் மும்பை, பதான்கோட் மற்றும் புல்வாமா தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு என்ன ஆனது என்று கேட்டார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    தீவிரவாதிகள்
    தீவிரவாதம்
    பாகிஸ்தான்

    சமீபத்திய

    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா
    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்

    இந்தியா

    இந்தியா-மியான்மர் எல்லையில் பதற்றம்: 10 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை மணிப்பூர்
    ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தான் கண்ணில் மண்ணை தூவி பயங்கரவாத தளங்களை இந்தியா எவ்வாறு தாக்கியது? ஆபரேஷன் சிந்தூர்
    மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க காலக்கெடு நிர்ணயித்தது சரியா? உச்சநீதிமன்றத்திடம் 14 கேள்விகளை எழுப்பியுள்ள ஜனாதிபதி திரௌபதி முர்மு திரௌபதி முர்மு
    துருக்கி, அஜர்பைஜான் நாடுகளை புறக்கணிக்கும் இந்திய சுற்றுலாவாசிகள்; ரத்து செய்பவர்களின் எண்ணிக்கை 250% அதிகரித்துள்ளது சுற்றுலா

    தீவிரவாதிகள்

    பாகிஸ்தான் ஆதரவு பிரிவினைவாத கட்சியான தெஹ்ரீக்-இ-ஹுரியத்துக்கு மத்திய அரசு தடை அமித்ஷா
    பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதலில் இருவர் பலி பாகிஸ்தான்
    ஜம்மு காஷ்மீரில், பக்தர்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்; பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து ஜம்மு காஷ்மீர்
    ஜம்மு காஷ்மீர் பஸ் தாக்குதலை விசாரிக்க களமிறங்கிய NIA; தாக்குதல் நடத்தியவர்களைத் தேடும் பணி தீவிரம் ஜம்மு காஷ்மீர்

    தீவிரவாதம்

    மாஸ்கோ பயங்கரவாத தாக்குதல்: குற்றத்தை ஒப்புக்கொண்ட மூன்று தீவிரவாதிகள் ரஷ்யா
    பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுங்கள்: இந்தியா-பாக்.,அரசாங்கங்களுக்கு அமெரிக்கா வேண்டுகோள் இந்தியா
    ஜம்முவின் தோடாவில் ராணுவ முகாம் மீது தாக்குதல்; 3 நாட்களில் மூன்றாவது பயங்கரவாத தாக்குதல் ஜம்மு காஷ்மீர்
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் முழு அளவையும் பயன்படுத்துங்கள்: பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீர்

    பாகிஸ்தான்

    அணு ஆயுதத்தை காட்டி இனி மிரட்ட முடியாது; பாகிஸ்தான் வெள்ளைக்கொடி காட்டியதன் பின்னணி இதுதானா? இந்தியா
    'அய்யயோ, நாங்க எந்த ஆயுதமும் பாகிஸ்தானுக்கு கொடுக்கல'; சீனா விளக்கம் சீனா
    இந்திய பத்திரிகையாளர்களை குறிவைக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்புகள்; மத்திய பாதுகாப்புத் துறை அலெர்ட் உளவுத்துறை
    'துப்பாக்கிச் சூடு மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கை இருக்காது': பாக்., உடனான பேச்சுவார்த்தையில் முடிவு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025