NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / "இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதிகளுக்கு கனடாவில் என்ன வேலை"?- ட்ரூடோவிற்கு அமித்ஷா கேள்வி
    அடுத்த செய்திக் கட்டுரை

    "இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதிகளுக்கு கனடாவில் என்ன வேலை"?- ட்ரூடோவிற்கு அமித்ஷா கேள்வி

    எழுதியவர் Srinath r
    Dec 15, 2023
    10:23 am

    செய்தி முன்னோட்டம்

    காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலையில், இந்தியாவின் நிலையை மீண்டும் தெளிவுபடுத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அவரது கொலையில் இந்திய அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

    நிஜ்ஜார் கொலையில் இந்தியாவிற்கு தொடர்புள்ளதாக பகிரங்கமாக குற்றச்சாட்டுகளை முன்வைக்க அவர் எடுத்த முடிவு,

    இதேபோன்ற செயலை, மீண்டும் செய்வதிலிருந்து இந்தியாவை தடுக்கும் நோக்கத்தில் எடுக்கப்பட்டது என, ஜஸ்டின் ட்ரூடோ புதன்கிழமை தெரிவித்தார்.

    இதற்கு பதிலளிக்கும் வகையில், அமித்ஷா பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    2nd card

    "நிஜ்ஜார் கொலையில் இந்தியாவிற்கு தொடர்பு இல்லை"

    ஜூன் 18ஆம் தேதி காலிஸ்தான் பிரிவினைவாதியும், இந்தியாவால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட தேடப்படும் நபரான நிஜ்ஜார், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    நிஜ்ஜார் கொல்லப்பட்டதற்கு இந்தியாவிற்கு தொடர்பு இருப்பதற்கான நம்பத் தகுந்த ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக, ட்ரூடோ அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசியது, இருநாட்டு உறவுகளிடையே விரிசலை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், ஆஜ் தக் செய்தி தொலைக்காட்சியின் மாநாட்டில் பேசிய அமித்ஷா, "இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதிகளுக்கு கனடாவில் என்ன வேலை?" என கேள்வி எழுப்பினார்.

    "இந்தக் குற்றச்சாட்டுகளை நாங்கள் முழுமையாக மறுத்துள்ளோம். இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதிகள் கனடாவில் என்ன செய்கிறார்கள் என்பதையும் அவர்கள் (கனடிய அரசாங்கம்) பதிலளிக்க வேண்டும்" என்று அமித்ஷா கூறினார்.

    3rd card

    நிஜ்ஜார் கொலை குறித்து கனேடிய பிரதமர் என்ன பேசினார்?

    புதனன்று, தி கனடியன் பிரஸ் செய்தி நிறுவனத்துடனான நேர்காணலில், எப்படியும் இறுதியில் ஊடகங்கள் மூலம் தகவல் கசியும் என்று தான் எதிர்பார்த்ததால், ட்ரூடோ செப்டம்பர் 18 அன்று இந்த தகவல்களை வெளியிட முடிவு செய்ததாகக் கூறினார் இந்தியா மீதான குற்றச்சாட்டுகளை நாடாளுமன்றத்தில் வெளியிட்டது, கனேடியர்கள் பாதுகாப்பை கூடுதலாக உறுதிப்படுத்துவதற்காக என தெரிவித்தார்.

    "கனடா தனக்குத் தெரிந்தது விஷயங்கள் இறுதியில் வெளிவரும் என்றும், G20 உச்சிமாநாட்டிற்கு கருத்தில் கொண்டு, விவகாரங்களை ராஜாங்க ரீதியில் வைக்க முயற்சித்ததாகவும்" பேசினார்.

    கடந்த வாரம் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், கனடா நிஜ்ஜார் கொலையில் குறிப்பிட்ட ஆதாரங்களை வழங்கவில்லை என நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமித்ஷா
    கனடா
    இந்தியா
    காலிஸ்தான் ஆதரவாளர்கள்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    அமித்ஷா

    மணிப்பூர் வன்முறை: 140 ஆயுதங்கள் மாநில நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது  மணிப்பூர்
    ஜூன் 8 ஆம் தேதி தமிழகத்திற்கு வருகை தருகிறார் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம்
    போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மல்யுத்த வீரர்கள் தங்கள் ரயில்வே பணிக்கு திரும்பினர்  மல்யுத்த வீரர்கள்
    காஷ்மீரில் கட்டப்பட்ட ஏழுமலையான் கோயில் - அமித்ஷா திறந்து வைத்தார்  ஜம்மு காஷ்மீர்

    கனடா

    இந்திய அரசுடன் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தது கனடா  இந்தியா
    உன்னுடன் கைகுலுக்க மாட்டேன்- கன்னட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை திட்டிய நபர் ஜஸ்டின் ட்ரூடோ
    கனடா-இந்தியா இடையே பதற்றத்தை தணிக்க பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் வலியுறுத்தல் பிரிட்டன்
    கனட-இந்திய பிரச்சனை: சட்டத்தை நிலைநிறுத்துவதன் முக்கியத்துவம் குறித்து பேசி இருக்கும் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா

    இந்தியா

    UPI பணப் பரிவர்த்தனை வரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்திய ரிசர்வ் வங்கி ரிசர்வ் வங்கி
    இந்தியாவில் வெளியானது சோனியின் VR2 ஹெட்செட் சோனி
    இந்தியாவில் ISIS பயங்கரவாத நெட்ஒர்க்: மகாராஷ்டிரா, கர்நாடகாவில் பெரும் சோதனையை நடத்தி வரும் பயங்கரவாத எதிர்ப்பு குழு மகாராஷ்டிரா
    காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து  காங்கிரஸ்

    காலிஸ்தான் ஆதரவாளர்கள்

    கனடாவில் மேலும் ஒரு காலிஸ்தான் தீவிரவாதி சுட்டுக்கொலை கனடா
    சுகா துனேகே கொலை: கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் பொறுப்பேற்பு  கொலை
    இந்தியா கனடாவுடன் இணைந்து செயல்பட வேண்டும் - அழைப்பு விடுக்கும் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா
    கனடாவில் வாழும் இந்துக்களுக்கு மிரட்டல் விடுத்த காலிஸ்தான் பயங்கரவாதியின் சொத்துக்கள் பறிமுதல்  பஞ்சாப்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025