NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நாடு முழுவதும் கனமழை, வெள்ளம்: கேரளாவிற்கு ஆரஞ்சு எச்சரிக்கை
    அடுத்த செய்திக் கட்டுரை
    நாடு முழுவதும் கனமழை, வெள்ளம்: கேரளாவிற்கு ஆரஞ்சு எச்சரிக்கை
    கனமழை காரணமாக அகமதாபாத் விமான நிலையம் முழுவதும் தண்ணீரில் மூழ்கியுள்ளது.

    நாடு முழுவதும் கனமழை, வெள்ளம்: கேரளாவிற்கு ஆரஞ்சு எச்சரிக்கை

    எழுதியவர் Sindhuja SM
    Jul 24, 2023
    01:53 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், பல மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதனால், கேரளாவின் கண்ணூர், கோழிக்கோடு மற்றும் வயநாடு ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்திய வானிலை ஆய்வு மையம், கண்ணூர், கோழிக்கோடு, காசர்கோடு மற்றும் வயநாடுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், மலப்புரம், திருச்சூர், பாலக்காடு மற்றும் இடுக்கி ஆகிய 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த மாவட்டங்களுக்கு ஜூலை 27ம் தேதி வரை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மேலும், வரும் நாட்களில் வடக்கு கேரளாவில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    உய்

    குஜராத்தில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும்

    அதிகமாக பெய்த கனமழையால் குஜராத்தின் சின்ஹான் மற்றும் நெய் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

    நேற்று வெள்ளத்தால் தவித்து வந்த ஜுனாகத் மற்றும் சவுராஷ்டிரா பகுதிகளில் வெள்ள நீர் வடிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

    வானிலை ஆய்வு மையம் குஜராத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று குஜராத்தில் "கனமழை முதல் மிக கனமழை" பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும், அடுத்த 24 மணி நேரத்தில் துவாரகா, ராஜ்கோட், பாவ்நகர் மற்றும் வல்சாத் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    குஜராத்தில் சனிக்கிழமையன்று இரண்டு தேசிய நெடுஞ்சாலைகள், 10 மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் 300 கிராமப்புற சாலைகள் வெள்ளத்தால் முடக்கப்பட்டன.

    கனமழை காரணமாக அகமதாபாத் விமான நிலையம் முழுவதும் தண்ணீரில் மூழ்கியுள்ளது.

    சுய

    மகாராஷ்டிராவில் பெய்து வரும் கனமழையால் மும்பைக்கு மஞ்சள் எச்சரிக்கை

    குஜராத் வெள்ள நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முதல்வர் பூபேந்திர படேலிடம் தொலைபேசி மூலம் விசாரித்தார்.

    மகாராஷ்டிராவில், இடைவிடாத மழை பெய்து வருவதால், கடந்த 10 நாட்களில் குறைந்தது 19 பேர் உயிரிழநதுள்ளனர்.

    எனினும், மும்பைக்கு ஏற்கனவே விடுக்கப்பட்டிருந்த ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று மஞ்சள் எச்சரிக்கையாக குறைத்துள்ளது.

    தானே, பால்கர், சிந்துதுர்க், ரத்னகிரி மற்றும் ராய்காட் ஆகிய மாவட்டங்களின் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

    மும்பை-புனே விரைவுச் சாலையில், ராய்காட் மாவட்டத்தில் உள்ள அடோஷி கிராமத்திற்கு அருகே நேற்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் மும்பைக்கான போக்குவரத்து தடைப்பட்டது.

    நேற்று இரவு 10.30 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    சிஹ்வ்

    டெல்லியில் அபாய அளவை விட்டு குறையாத யமுனை நதியின் நீர்மட்டம் 

    டெல்லியில் உள்ள யமுனையின் நீர்மட்டம், அபாய குறியான 205.33 மீட்டரை மீண்டும் தாண்டியுள்ளது.

    இன்று காலை 7 மணிக்கு 206.56 மீட்டராக இருந்த யமுனை நதியின் நீர்மட்டம், காலை 8 மணி நிலவரப்படி, 206.54 மீட்டராக குறைந்தது.

    இன்று மதியம் 2 மணிக்கு மேல் இந்த நீர்மட்டம் 206.42 மீட்டராக குறையும் என்று மத்திய நீர் ஆணையம் கணித்துள்ளது. அப்படி குறைந்தாலும் யமுனையின் நீர்மட்டம் அபாய குறிக்கு மேல் தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    யமுனை ஆற்றின் கிளை நதியான ஹிண்டன் ஆற்றின் கரையில் அமைந்துள்ள காசியாபாத்தின் கர்ஹேரா குக்கிராமத்தில் இருந்து 50க்கும் மேற்பட்டோர் நேற்று வெளியேற்றப்பட்டனர். ஹிண்டன் ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்ததால் அந்த கிராமம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

    விகிவ்

    உத்தரகாண்ட், உத்தர பிரதேசம், ஒடிசா, காஷ்மீர் ஆகிய மாநிலங்களிலும் கனமழை 

    உத்தரகாண்ட் மாநிலத்தின் 13 மாவட்டங்களுக்கு வியாழக்கிழமை வரை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கடந்த சனிக்கிழமை முதல் இன்று வரை உத்தரகாண்டில் கனமழை காரணமாக 28 பேர் உயிரிழந்துள்ளனர்.

    உத்தரபிரதேசத்தில் வியாழக்கிழமை வரை மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    உத்தரபிரதேசத்தில் இதுவரை கனமழை காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளனர், 300 க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

    வங்காள விரிகுடாவில் இன்று புயல் உருவாகியுள்ள நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் ஒடிசாவின் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    காஷ்மீர் பள்ளத்தாக்கில் பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில், அப்பகுதியின் காய்கறி வயல்களும், பழத்தோட்டங்களும், சாலைகளும் சேதமடைந்தன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வானிலை அறிக்கை
    வானிலை ஆய்வு மையம்
    மகாராஷ்டிரா
    இந்தியா

    சமீபத்திய

    இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் ராஜதந்திர MPக்கள் குழுவில் யார் எங்கு செல்கிறார்கள்; நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தும்! இந்தியா
    கார்த்திக் சுப்புராஜ்- சூர்யாவின் 'ரெட்ரோ' இந்த தேதியில் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது நடிகர் சூர்யா
    மெக்சிகன் கடற்படைக் கப்பல் நியூயார்க்கின் பிரபல புரூக்ளின் பாலத்தில் மோதி விபத்து நியூயார்க்
    "நாங்களும் அனுப்புவோம்": இந்தியாவைத் தொடர்ந்து, பாகிஸ்தானும் மற்ற நாடுகளுக்கு எம்.பி.க்களை அனுப்பவுள்ளதாம்! பாகிஸ்தான்

    வானிலை அறிக்கை

    11 தமிழக மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு
    'பிப்பர்ஜாய்' புயல் அடுத்த 48 மணி நேரத்திற்குள் தீவிரமடையும்: வானிலை ஆய்வு மையம் இந்தியா
    கேரளாவில் பருவமழை தொடங்கியது: தமிழகத்திலும் மழை பெய்ய வாய்ப்பு  தமிழ்நாடு
    'பிப்பர்ஜாய்' புயல் அடுத்த 36 மணி நேரத்தில் மேலும் தீவிரமடையும் இந்தியா

    வானிலை ஆய்வு மையம்

    பிபர்ஜாய் புயல் கரையை கடப்பதில் தாமதம்: வானிலை அப்டேட் இந்தியா
    தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை  தமிழ்நாடு
    பிபர்ஜாய் புயல்: 940 கிராமங்களில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது  இந்தியா
    கனமழை பெய்ய வாய்ப்பிருக்கும் தமிழக மாவட்டங்களின் பட்டியல் தமிழ்நாடு

    மகாராஷ்டிரா

    IIT பாம்பேயில் மாணவர் உயிரிழப்பு: சாதிய பாகுபாடுகளால் தற்கொலை செய்து கொண்டாரா இந்தியா
    மகாராஷ்டிராவில் 512 கிலோ வெங்காயம் வெறும் ரூ.2 - விவசாயி அதிர்ச்சி இந்தியா
    உலகின் முதல் மூங்கில் விபத்து தடுப்பு மஹாராஷ்டிராவில் நிறுவப்பட்டுள்ளது: நிதின் கட்கரி நிதின் கட்காரி
    5ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ஆபாச வீடியோக்களைக் காட்டிய ஆசிரியர் கைது இந்தியா

    இந்தியா

    எஸ்.ஜெய்சங்கர் உட்பட 11 மாநிலங்களவை எம்பிக்கள் போட்டியின்றி தேர்வு  மாநிலங்களவை
    இன்றைய கொரோனா நிலவரம்: இந்தியாவில் 43 புதிய பாதிப்புகள் கொரோனா
    தங்கள் ஊழியர்களின் வருடாந்திர ஊதிய உயர்வைத் தள்ளி வைத்திருக்கும் WIPRO மற்றும் HCL வணிகம்
    உலகளவில் எந்தெந்த நாடுகளில் பயன்படுத்தப்படவிருக்கிறது UPI? யுபிஐ
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025