NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்து கைது; ஏன்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னையில் தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்து கைது; ஏன்?
    தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்து கைது

    சென்னையில் தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்து கைது; ஏன்?

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 30, 2024
    06:02 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னையில் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்தை காவல்துறையினர் கைது செய்தனர்.

    சமீபத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து, த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் தான் கைப்பட எழுதியாக ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.

    அதனைத்தொடர்ந்து, விஜய் கவர்னர் ரவியிடம் பெண்கள் பாதுகாப்பு சம்மந்தமாக கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அளித்தார்.

    அப்போது அவருடன் புஸ்ஸி ஆனந்தும் உடன் இருந்தார்.

    அதன் தொடர்ச்சியாக அக்கட்சி நிர்வாகிகள், விஜயின் அறிக்கையின் நகல்களை பூக்கடை பகுதியில் உள்ள மகளிர் கல்லூரி வளாகம் அருகிலுள்ள மாணவிகள், பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய ஆரம்பித்தனர்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #JustNow | சென்னை தியாகராய நகரில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது

    தவெக தலைவர் விஜய் வெளியிட்ட கடிதத்தை துண்டு பிரசுராமாக அக்கட்சியினர் வழங்கி வந்ததை பார்வையிட புஸ்ஸி ஆனந்த் வந்துள்ளார்.

    அப்போது, முன் அனுமதி பெறாமல் கூட்டம் கூடியதற்காக புஸ்ஸி ஆனந்த் மற்றும் அவருடன்…

    — Sun News (@sunnewstamil) December 30, 2024

    கைது

    அனுமதி பெறாமல் கூட்டம் கூடியதற்கு கைது செய்யப்பட்ட தவெக நிர்வாகிகள்

    கட்சி நிர்வாகிகள் கூடியதை காவல்துறையினர் தடுத்ததாக கூறப்படுகிறது. எனினும் தவெக தொண்டர்கள் அந்த அறிவிப்புகளை தொடர்ந்து விநியோகித்தனர்.

    இதனால், அவர்களை கைது செய்த காவல்துறையினர், அவர்களை தியாகராயநகரில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

    தொடர்ந்து அங்கு வந்த புஸ்சி ஆனந்த், உள்ளே அடைக்கப்பட்ட அனைவரையும் விடுவிக்கும்படி போலீசாரிடம் கோரினார், ஆனால் அதற்கு காவல்துறையினர் மறுத்ததாக கூறப்படுகிறது.

    அதன் தொடர்ச்சியாக அனுமதி பெறாமல் கூட்டம் கூடியதற்கு, புஸ்சி ஆனந்த் மற்றும் அவருடன் இருந்த கட்சி உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    தமிழக வெற்றி கழகம்
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    சென்னை

    உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 28 ) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    பெங்கல் புயல் எதிரொலி: 8 முதல் 12 அடி உயரத்திற்கு எழும்பும் கடல் அலை; மெரினா கடற்கரைக்கு செல்ல தடை மெரினா கடற்கரை
    தொடர்ந்து வெளுத்து வாங்கும் மழை; பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த மாவட்டங்கள் லிஸ்ட் பள்ளிகளுக்கு விடுமுறை
    உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 30 ) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    தமிழக வெற்றி கழகம்

    விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டை மதுரையில் நடத்த திட்டம் விஜய்
    தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை செயலி இன்று மாலை அறிமுகம் நடிகர் விஜய்
    மீண்டும் மாணவர்களைச் சந்திக்கிறார் விஜய்; தவெக வெளியிட்ட அறிவிப்பு விஜய்
    10, 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை சந்திக்கிறார் விஜய்  விஜய்

    காவல்துறை

    வீடியோ: பெங்களூரில் ஒரு பெண்ணை மடியில் வைத்துக்கொண்டு பைக் ஓட்டிய வாலிபரை வலைவீசி பிடித்த காவல்துறை  பெங்களூர்
    இன்று மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை தவிர்க்க வேண்டிய சாலைகளை அறிவித்தது டெல்லி போக்குவரத்து காவல்துறை  டெல்லி
    போர்ஷே விபத்தில் 2 பேரை கொன்ற புனே சிறுவனின் தந்தை கைது  மகாராஷ்டிரா
    ஜார்ஜியாவில் கார் கவிழ்ந்ததால் 3 இந்திய-அமெரிக்க மாணவர்கள் பலி ஜார்ஜியா

    காவல்துறை

    2 பேரை கொன்ற போர்ஷே விபத்து: 4 நகரங்கள், புதிய சிம் கார்டு என தப்பிக்க முயன்ற தொழிலதிபர் தந்தை விபத்து
    டெல்லி மருத்துவமனை தீ விபத்து: குழந்தை பராமரிப்பு மைய உரிமையாளர் கைது டெல்லி
    புனே விபத்து: ரத்த மாதிரிகளை மாற்ற டாக்டருக்கு ரூ.3 லட்சம் லஞ்சம் விபத்து
    புனே கார் விபத்து: அமைச்சர், எம்எல்ஏ-விற்கு தொடர்பு என புனே மருத்துவமனை டீன் குற்றச்சாட்டு புனே
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025