NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / Explainer- ஹிந்தி மொழி பேசும் மாநிலங்களில், பாஜக ஏன் புது முகங்களை தேர்ந்தெடுத்தது?
    அடுத்த செய்திக் கட்டுரை
    Explainer- ஹிந்தி மொழி பேசும் மாநிலங்களில், பாஜக ஏன் புது முகங்களை தேர்ந்தெடுத்தது?
    நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பாஜக முதல்வர்களை தேர்ந்தெடுத்துள்ளது.

    Explainer- ஹிந்தி மொழி பேசும் மாநிலங்களில், பாஜக ஏன் புது முகங்களை தேர்ந்தெடுத்தது?

    எழுதியவர் Srinath r
    Dec 13, 2023
    11:58 am

    செய்தி முன்னோட்டம்

    ராஜஸ்தானில் முதல் முறை எம்எல்ஏவான பஜன்லால் சர்மாவை முதலமைச்சராகவும், சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசத்தின் முதல்வர்களாக விஷ்ணு தியோ சாய் மற்றும் மோகன் யாதவ் ஆகியோரை பாஜக அறிவித்தது பலருக்கு ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது.

    ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே, மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் என மூத்த அனுபவசாலிகள் இருந்தும், பாஜக புது முகங்களை தேர்ந்தெடுத்துள்ளது.

    இந்த மூன்று மாநிலங்களிலும் புது முகங்களை முதல்வர்களாக தேர்ந்தெடுத்திருப்பதற்கு பின்னால்,

    அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான வியூகமும், சாதிய அரசியலை சமநிலைப்படுத்தும் பாஜகவின் திட்டமும் அடங்கியுள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

    2nd card

    சத்தீஸ்கர்

    மாநிலத்தின் பழங்குடி பகுதிகளான சர்குஜா மற்றும் பஸ்தாரில் உள்ள 26 தொகுதிகளில், 22ல் வெற்றி பெற்றதற்கு பின்னர், பழங்குடியினரான சாய்யை முதல்வராக நியமித்ததில் ஆச்சரியம் இல்லை.

    இருப்பினும் இவரது நியமனம், பழங்குடியின வாக்காளர்களை அங்கீகரிப்பதை விட, 2024 தேர்தலுக்கான எல்லை தாண்டிய பிரச்சார மேடையை தயார்படுத்துவதாக பார்க்கப்படுகிறது.

    சத்தீஸ்கர் மாநிலத்தை சுற்றியுள்ள மத்திய பிரதேசம், ஜார்கண்ட் மற்றும் ஒரிசா மாநிலங்களில், முறையே 22%,26%, 23% பழங்குடிகள் உள்ளனர்.

    சத்தீஸ்கரில் சாய்யை முதலமைச்சராகத் தேர்ந்தெடுத்திருப்பது, 2024 தேர்தலுக்கு முன், இந்த மாநிலங்களில் பழங்குடியினருக்கு உகந்த முகமாக பாஜக தன்னைக் காட்டிக்கொள்ள அனுமதிக்கிறது.

    இந்த 4 மாநிலங்களிலும், 75 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன, அதில் 20 தொகுதிகள் பழங்குடிகளுக்கான தனித்தொகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

    3rd card

    மத்திய பிரதேசம்

    மத்திய பிரதேசத்திலும் பாஜக பழங்குடியினர் ஓட்டுக்களை கைப்பற்ற காய்களை நகர்த்தி வந்தது. அது தேர்தலிலும் பலனளித்த நிலையில், 47 தனித்தொகுதிகளில் 24 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது.

    இதற்கு கைமாறாக பழங்குடியினரான ஜகதீஷ் தேவ்தா துணை முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.

    மேலும் கடந்த 2003ம் ஆண்டு முதல் பாஜகவிற்கு ஆதரவளித்து வரும் பிராமண சமுதாயத்திற்கும், துணை முதலமைச்சர் பதவியை பாஜக வழங்கியுள்ளது.

    மோகன் யாதவை முதலமைச்சராக தேர்ந்தெடுப்பதன் மூலம், அண்டை மாநிலங்களான பீகார் மற்றும் உத்தர பிரதேசத்தில் உள்ள 120 நாடாளுமன்ற தொகுதிகளை பாஜக குறிவைத்துள்ளது.

    4th card

    மோகன் யாதவ் மூலம் 149 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு குறி வைக்கும் பாஜக

    பாஜக இவற்றில் வெல்லும் பட்சத்தில், பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பதை தடுக்க முடியாது.

    மத்திய பிரதேசத்தில் யாதவர்கள் மொத்த மக்கள் தொகையில் 6% மட்டுமே உள்ளனர்.

    இருப்பினும், அவர்கள் பீகாரில் (14 சதவீதத்திற்கு மேல்) பெரிய ஓபிசி குழுவாக உள்ளனர் மற்றும் உத்திரபிரதேசத்தில் மொத்த மக்கள் தொகையில் 10% உள்ள யாதவர்களை குறிவைத்தே, பாஜக யாதவரை மத்திய பிரதேசத்தில் முதல்வர் ஆக்கியுள்ளது.

    இம்மூன்று மாநிலங்களும், 149 நாடாளுமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் இது உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ் மற்றும் பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ் ஆகியோரை சமாளிக்க உதவும்.

    5th card

    ராஜஸ்தான்

    ராஜஸ்தான் மாநிலத்தில் முதல் முறை எம்எல்ஏவான ஷர்மாவை, முதல்வராக பாஜக தேர்ந்தெடுப்பது, அவரின் ஆர்எஸ்எஸ் அமைப்புடனான தொடர்புக்காக எனக் கூறப்படுகிறது.

    மாநிலத்தில் இரண்டு முறை முதலமைச்சராக இருந்த வசுந்தரா ராஜே, பாஜகவிற்கு முதல் தேர்வாக இருந்திருக்கும்.

    ஆனால், ஆட்சிக்கு எதிரான அதிருப்திக்கு பெயர் போன ராஜஸ்தான் மாநிலம், எதிர்கால தேர்தலில் தங்களுக்கு கைகொடுக்காமல் போகலாம் என்பதை பாஜக சிந்தித்துள்ளது.

    மேலும், பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை முதல்வர் ஆக்குவதன் மூலம், ராஜஸ்தான் உடன் எல்லையை பகிர்ந்து கொண்ட உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள 10% பிராமணர்கள் வாக்கை அறுவடை செய்ய பாஜக திட்டமிடுகிறது.

    அண்டை மாநிலங்களாக மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் உள்ள, 5% பிராமணர்கள் வாக்குகளையும் கைப்பற்ற பாஜகவிற்கு இது உதவலாம்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாஜக
    தேர்தல்
    ராஜஸ்தான்
    உத்தரப்பிரதேசம்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    பாஜக

    நடிகை கௌதமி அளித்த புகார் - அழகப்பன் உட்பட 6 பேரை பிடிக்க 3 தனிப்படைகள்  தமிழ் சினிமா
    இந்தியா கூட்டணியில் தொய்வா? பீகார் முதல்வருடன் உரையாடிய மல்லிகார்ஜுன கார்கே  மல்லிகார்ஜுன் கார்கே
    2024 மக்களவை தேர்தலில் போட்டியிட விரும்பும் கங்கனா ரனாவத்? கங்கனா ரனாவத்
    மீண்டும் ஒரு உத்தர பிரதேச நகரத்தின் பெயர் மாற்றம்: 'ஹரிகார்' ஆகிறது 'அலிகார்' உத்தரப்பிரதேசம்

    தேர்தல்

    தெலங்கானா பெண்களுக்கு மாதம் ரூ.4,000: தேர்தல் வாக்குறுதியை அறிவித்தார் ராகுல் காந்தி  ராகுல் காந்தி
    சத்தீஸ்கரில் தேர்தல் வாக்கெடுப்புக்கு மத்தியில் மாவோயிஸ்ட் குண்டுவெடிப்பு சத்தீஸ்கர்
    நான்காவது முறையாக முதலமைச்சர் ஆவாரா ஜோரம்தங்கா? மிசோரத்தில் இன்று தேர்தல் வாக்குப்பதிவு  மிசோரம்
    'தொகுதி பங்கீட்டால் INDIA கூட்டணி கட்சிகளுக்குள் சலனம்': உமர் அப்துல்லா கவலை  எதிர்க்கட்சிகள்

    ராஜஸ்தான்

    கோவையில் துப்பாக்கி குண்டுகளுடன் சிக்கிய ராஜஸ்தான் நபர் கைது  கோவை
    ஒரே நாளில் 2 நீட் மாணவர்கள் தற்கொலை: ராஜஸ்தானின் கோட்டாவில் என்ன நடக்கிறது? தற்கொலை
    ராஜஸ்தானில் பெண்ணை நிர்வாணப்படுத்தி இழுத்து சென்ற கணவர் கைது - அதிர்ச்சி சம்பவம் காவல்துறை
    நெடுஞ்சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதிய லாரி: 11 பேர் பலி  விபத்து

    உத்தரப்பிரதேசம்

    யோகி ஆதித்யநாத்தை அடுத்து அகிலேஷ் யாதவ்வை சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த்  ரஜினிகாந்த்
    அயோத்தி அனுமார் கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம் ரஜினிகாந்த்
    அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக தேதி அறிவிப்பு இந்தியா
    இஸ்லாமிய சிறுவனை  அறையும்படி பிற மாணவர்களுக்கு உத்தரவிட்ட ஆசிரியை: வகுப்பறையில் கொடூரம்  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025