NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பிரதமர் மோடியின் 11வது சுதந்திர தின உரை; ஒரே நாடு ஒரே தேர்தல் முதல் ஒலிம்பிக் வரை; முக்கிய அம்சங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிரதமர் மோடியின் 11வது சுதந்திர தின உரை; ஒரே நாடு ஒரே தேர்தல் முதல் ஒலிம்பிக் வரை; முக்கிய அம்சங்கள்
    பிரதமர் மோடி செங்கோட்டையில் உரை

    பிரதமர் மோடியின் 11வது சுதந்திர தின உரை; ஒரே நாடு ஒரே தேர்தல் முதல் ஒலிம்பிக் வரை; முக்கிய அம்சங்கள்

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 15, 2024
    05:08 pm

    செய்தி முன்னோட்டம்

    நாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி வியாழன் (ஆகஸ்ட் 15) அன்று, சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் கொடியேற்றினார்.

    தொடர்ந்து 11 வது முறையாக கொடியேற்றியதன் மூலம், அதிக முறை கொடியேற்றியவர்களில் மன்மோகன் சிங்கின் சாதனையை முறியடித்து, தற்போது நேரு மற்றும் இந்திராவுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் உள்ளார்.

    இந்த முறை மோடி 98 நிமிடங்கள் உரையாற்றினார். இது அவரது மிக நீண்ட சுதந்திர தின உரை மட்டுமல்லாது, இந்திய பிரதமர்களில் வேறு எவரது உரையையும் விட மிக நீளமானது.

    இதற்கிடையே, இந்தியாவின் 78வது சுதந்திர தின விழாவில் பேசிய மோடி, தற்போதைய வங்கதேச அரசியல் நெருக்கடி உட்பட பல உள்நாட்டு மற்றும் சர்வதேச பிரச்சனைகளை தொட்டு பேசினார்.

    முக்கிய அம்சங்கள்

    பங்களாதேஷில் சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து கவலை

    பங்களாதேஷில் உள்ள இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து தனது உரையில் கவலை தெரிவித்த பிரதமர் மோடி, அந்நாட்டின் நிலைமை விரைவில் மேம்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

    பங்களாதேஷின் வளர்ச்சிக்கு இந்தியா எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்று கூறிய மோடி, "ஒரு அண்டை நாடாக, வங்கதேசத்தில் என்ன நடந்தாலும் அது குறித்த கவலையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

    விரைவில் அங்கு நிலைமை இயல்பு நிலைக்கு வரும் என்று நம்புகிறேன். அங்குள்ள இந்துக்கள் மற்றும் சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பது 140 கோடி நாட்டு மக்களின் கவலையாகும்.

    இந்தியா எப்போதும் நமது அண்டை நாடுகள் செழிப்பு மற்றும் அமைதியின் பாதையில் நடக்க விரும்புகிறது. நாங்கள் அமைதிக்கு உறுதிபூண்டுள்ளோம்." என்றார்.

    பொது சிவில் சட்டம்

    பொது சிவில் சட்டம் காலத்தின் தேவை எனக் கூறிய பிரதமர் மோடி

    பிரதமர் நரேந்திர மோடி நாட்டில் ஒரே மாதிரியான சிவில் சட்டம் குறித்து தனது உரையில் பேசினார். தற்போதுள்ள வகுப்புவாத சட்டத்திற்கு பதிலாக மதச்சார்பற்ற சிவில் சட்டம் காலத்தின் தேவை என்று வலியுறுத்தினார்.

    மேலும், ஒரே நாடு ஒரே தேர்தல் வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார். இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் நாட்டின் ஏதேனும் ஒரு பகுதியில் தேர்தல் நடப்பதால் வளர்ச்சி வேகம் பாதிப்பதாக கூறிய அவர், இதற்காக ஒரே நாடு ஒரே தேர்தல் வேண்டும் எனக் கூறினார்.

    பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு வழங்கப்படும் தண்டனைகள் கடினமானதாக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

    மேலும், தனது அரசு பெண்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவில் சிறப்பு கவனம் கொடுப்பதையும் கோடிட்டுக் காட்டினார்.

    விவசாயம் 

    விவசாயத் துறையில் சீர்திருத்தம் செய்யவேண்டியதன் அவசியம்

    78வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது விவசாயத் துறையில் பெரிய சீர்திருத்தங்களுக்கு அழுத்தம் கொடுத்த மோடி, நாட்டில் விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை வலியுறுத்தினார்.

    இயற்கை விவசாயத்தைத் தேர்ந்தெடுத்ததற்காக விவசாயிகளைப் பாராட்டிய பிரதமர், விக்சித் பாரத் என்ற இலக்கை நோக்கிச் செல்லும் போது, ​​நாட்டின் விவசாயிகள் இந்தியாவை உலகின் இயற்கை உணவுக் கூடையாக மாற்ற முடியும் என்றும் கூறினார்.

    இன்றும் நடுத்தர வகுப்பைச் சேர்ந்த குழந்தைகள் மருத்துவக் கல்விக்காக வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர் என்று கவலை தெரிவித்த மோடி, 5 ஆண்டுகளில் மேலும் 75,000 மருத்துவ இடங்கள் உருவாக்கப்படும் என்றார்.

    ஒலிம்பிக் போட்டி

    2036இல் ஒலிம்பிக் போட்டியை நடத்த திட்டம்

    பெரிய அளவிலான உலகளாவிய விளையாட்டு நிகழ்வுகளை நடத்தும் திறன் இந்தியாவுக்கு உள்ளது என்று கூறிய மோடி, 2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்த அனைத்து முயற்சிகளையும் செய்து வருவதாகக் கூறினார்.

    சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐஓசி) அதன் தேர்தலை நடத்திய பிறகு அடுத்த ஆண்டுதான் 2036 ஒலிம்பிக் போட்டியை நடத்தும் நாட்டை முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பல உலகளாவிய நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய விரும்புவதாகவும், அவர்களை ஈர்க்க மாநில அரசுகள் தங்களுக்குள் போட்டியிட வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.

    மூன்றாவது முறையாக தான் சந்தித்த பெரும்பாலான தொழிலதிபர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய விரும்புவதாக மோடி கூறினார்.

    விமர்சனம்

    எதிர்க்கட்சிகள் மீது விமர்சனத்தை முன்வைத்த பிரதமர் மோடி

    தனது உரையில் எதிர்க்கட்சிகளை மறைமுகமாகத் தாக்கி பேசிய பிரதமர் மோடி, நாடு ஒருங்கிணைக்கப்பட்ட தீர்மானத்துடன் முன்னோக்கிச் செல்லும் போது, ​​சிலரால் முன்னேற்றத்தை சகித்துக் கொள்ள முடியவில்லை என்றார்.

    ஊழலுக்கு ஆதரவளிக்கும் கலாச்சாரம் மற்றும் கரையான் கலாசாரத்தை சாடிய நரேந்திர மோடி, சிலர் அதை மகிமைப்படுத்துகிறார்கள் என்றாலும், அவர்களுக்கு எதிராக தான் விடாமுயற்சியுடன் செயல்படுவேன் என்றும் கூறினார்.

    ஊழல் மற்றும் அதன் மகிமைப்படுத்துதல் குறித்து கவலை தெரிவித்த மோடி, இது சமூகத்தின் முக்கிய பிரச்சினை என்று விவரித்தார்.

    "இந்தப் போருக்கு நான் விலை கொடுக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும், எனது கௌரவம் ஆபத்தில் இருக்கலாம், ஆனால் தனிப்பட்ட கௌரவத்தை விட தேசிய நலன்கள் முக்கியம்." என்று அவர் கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிரதமர் மோடி
    சுதந்திர தினம்
    இந்தியா

    சமீபத்திய

    வடகிழக்கு மாநிலங்களில் அதிகளவு முதலீடு செய்யபோவதாக அம்பானி, அதானி அறிவிப்பு ரிலையன்ஸ்
    மனைவி பிரிந்ததால் விரக்தி; கர்நாடகாவில் திருமணம் செய்து வைத்த தரகரை கொலை செய்த கணவர் கர்நாடகா
    ராகுல் காந்தியின் டெல்லி பல்கலைக்கழக வருகை சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது- என்ன காரணம்? ராகுல் காந்தி
    அடிக்கடி அலாரத்தை ஸ்னூஸ் செய்துவிட்டு தூங்குபவரா நீங்கள்? இனி அப்படி செய்யாதீங்க தூக்கம்

    பிரதமர் மோடி

    மக்களவை இடைக்கால சபாநாயகராக பதவியேற்றார் பாஜகவின் பர்த்ருஹரி மஹ்தாப்  இந்தியா
    'நாட்டை நடத்த ஒருமித்த கருத்து முக்கியம்': நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு முன்னதாக பிரதமர் மோடி பேச்சு  இந்தியா
    நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார் பிரதமர் மோடி  மக்களவை
    நாடாளுமன்றத்தில் கைகுலுக்கி தோழமையை வெளிப்படுத்திய மோடி, ராகுல் காந்தி; வைரலாகும் வீடியோ நாடாளுமன்றம்

    சுதந்திர தினம்

    சுதந்திர தினம் : வெள்ளையரை எதிர்த்து போராடிய முதல் தமிழ் பெண் ஆட்சியாளர் வேலு நாச்சியார் சிவகங்கை
    வெள்ளையர்களின் கொட்டத்தை அடக்கிய பெண் போராளி: யாரிந்த குயிலி? சிவகங்கை
    தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக திருச்சி தேர்வு திருச்சி
    சுதந்திர தினம்: செங்கோட்டையில் 10,000 போலீசார் பாதுகாப்பு  டெல்லி

    இந்தியா

    இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் 2017-18 ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு வழக்கு முடித்து வைப்பு இன்ஃபோசிஸ்
    வங்கதேசத்தில் மீண்டும் ஏற்பட்ட வன்முறையில் 21 பேர் பலி; இந்தியர்களுக்கு எச்சரிக்கை பங்களாதேஷ்
    மகாராஷ்டிராவில் செல்ஃபி எடுக்கப் போய் பள்ளத்தில் விழுந்த இளம் பெண் போராடி மீட்பு மகாராஷ்டிரா
    வக்ஃப் வாரிய சட்டத் திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்; வரம்பற்ற அதிகாரத்திற்கு கட்டுப்பாடு மத்திய அரசு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025