NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானின் தொடர்பை இந்திய புலனாய்வாளர்கள் எப்படி கண்டுபிடித்தனர்? 
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானின் தொடர்பை இந்திய புலனாய்வாளர்கள் எப்படி கண்டுபிடித்தனர்? 
    தாக்குதல் நடந்த இடத்தில் இந்திய ராணுவம்

    பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானின் தொடர்பை இந்திய புலனாய்வாளர்கள் எப்படி கண்டுபிடித்தனர்? 

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 24, 2025
    12:00 pm

    செய்தி முன்னோட்டம்

    பஹல்காம் தாக்குதல் நடத்தியவர்களின் டிஜிட்டல் தடயங்களை முசாபராபாத், கராச்சியில் உள்ள ரகசிய இடங்களில் இந்திய உளவுத்துறை அமைப்புகள் கண்டுபிடித்துள்ளன.

    இதன் மூலம், தாக்குதல்களில் பாகிஸ்தானின் பங்கு இருப்பதும், 26/11 மும்பை தாக்குதலில் பயன்படுத்தப்பட்டதைப் போன்ற ஒரு ரிமோட் கண்ட்ரோல் அறை பயன்படுத்தப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

    இந்த விவரங்களை விசாரணையில் நேரடியாக ஈடுபட்டுள்ள உயர் அதிகாரிகள் தெரிவித்தனர் என ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவிக்கிறது.

    செவ்வாய்க்கிழமை நடந்த தாக்குதலில் குறைந்தது 26 இந்திய சுற்றுலாப் பயணிகள், அனைவரும் ஆண்கள், பெரும்பாலும் இந்துக்கள் குறிவைக்கப்பட்டனர்.

    முதற்கட்ட தடயவியல் பகுப்பாய்வு மற்றும் உயிர் பிழைத்தவர்களின் அறிக்கைகள்படி, தாக்குதலில் ஈடுபட்ட ஐந்து பயங்கரவாதிகளும் ஏகே துப்பாக்கிகள் மற்றும் அதிநவீன தகவல் தொடர்பு சாதனங்கள் உள்ளிட்ட தானியங்கி ஆயுதங்களுடன் இருந்தனர் என்பது தெரியவந்துள்ளது.

    கூற்று

    ISI கட்டுப்பாடு மையங்கள் மூலம் கண்கணிக்கப்படும் பாதுகாப்பு ரகசிய இடங்கள்

    "எங்கள் உளவுத்துறை இடைமறிப்புகள் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட செயல்பாட்டாளர்களுடன் நேரடி தொடர்பைக் குறிக்கின்றன. முசாபராபாத் மற்றும் கராச்சியில் உள்ள சில பாதுகாப்பு மையங்களில் டிஜிட்டல் தடயத்தை நாங்கள் கண்டறிந்துள்ளோம், இவை இந்தியாவில் லஷ்கர்-இ-தொய்பாவின் முந்தைய பெரிய தாக்குதல்களுக்கான முக்கிய மையங்களாக இருந்தன, அவை பாகிஸ்தான் இராணுவம் மற்றும் ஐஎஸ்ஐ கட்டுப்பாட்டு மையங்களிலிருந்து கண்காணிக்கப்படுகின்றன," என்று விசாரணை அதிகாரிகளில் ஒருவர் கூறியுள்ளார்.

    உள்ளீடுகளை மேற்கோள் காட்டி, கடந்த ஆண்டு டிசம்பர் மற்றும் இந்த ஆண்டு ஜனவரி மாதங்களில், பாகிஸ்தான் இராணுவமும், ஐஎஸ்ஐயும் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது அதிக எண்ணிக்கையில் பயங்கரவாதிகளை இந்தியாவிற்குள் ஊடுருவச் செய்வதை தீவிரமாக ஊக்குவிப்பதாக உளவு செய்தி உள்ளது என அந்த உளவு அதிகாரி கூறினார்.

    உதவி

    தீவிரவாதிகள் எல்லையை தாண்ட உதவும் உள்ளூர் நபர்கள்

    பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில், தேசிய புலனாய்வு அமைப்பு(NIA), ஜம்மு-காஷ்மீரில் பல இடங்களில், ஊடுருவிய பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுக்கு உதவிய நபர்களை தேடும் வகையில் விரிவான தேடல்களை மேற்கொண்டது.

    இந்தியாவிற்குள் நுழைந்த பிறகு, இந்த பயங்கரவாதிகள் உள்ளூர் நபர்களால் வழிநடத்தப்பட்டு, அவர்களுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் பணத்தையும் வெவ்வேறு இடங்களுக்கு வழங்கியதாக சந்தேகிக்கப்படுகிறது.

    மார்ச் மாதம் NIA ஒரு அறிக்கையில்,"பயங்கரவாதிகள் கதுவா, உதம்பூர், தோடா, கிஷ்த்வார், ரியாசி, ராஜோரி, பூஞ்ச் ​​மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கு ஆகிய உள் மாவட்டங்களுக்குள் நுழைந்ததாக நம்பப்படுகிறது" என்று கூறியது.

    காஷ்மீரில் உளவுத்துறையை கையாளும் ஒரு மூத்த அதிகாரி, "தற்போது, ​​பள்ளத்தாக்கில் 55 முதல் 60 வரை உயர் பயிற்சி பெற்ற வெளிநாட்டு பயங்கரவாதிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது" என்றார்.

    செயலி

    மலையேற்றத்திற்கு உதவும் செயலியை பயன்படுத்தும் ISI 

    புலனாய்வு அதிகாரியின் கூற்றுப்படி, பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ, அதன் ஆஃப்லைன் பதிப்பில் ஆல்பைன் குவெஸ்ட் செயலியை பயங்கரவாதிகளுக்கு வழங்கியுள்ளது; இது ஒரு வழிசெலுத்தல் செயலியாகும்.

    இது பெரும்பாலும் தொழில்முறை மலையேற்றக்காரர்களால் பயன்படுத்தப்படுகிறது.

    "இந்திய பாதுகாப்புப் படை முகாம்கள், போலீஸ் கான்வாய் இயக்கம் மற்றும் தடுப்புகள் பற்றிய விவரங்களை ஊடுருவிய பயங்கரவாதிகளுக்கு ஐஎஸ்ஐ இந்த செயலியுடன் வழங்கியதாக தகவல் உள்ளது," என்று அவர் கூறினார்.

    பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் சர்வர்களைக் கொண்ட மறைகுறியாக்கப்பட்ட ரேடியோ தொடர்பு சாதனங்களையும் பயன்படுத்துகின்றனர்.

    பயங்கரவாதிகள் பள்ளத்தாக்கின் நடுப்பகுதிப் பகுதிகளில் தங்கியுள்ளனர், குறைந்த உயரங்களைத் தவிர்த்து வருகின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    புலனாய்வு
    உளவுத்துறை
    பாகிஸ்தான்
    இந்தியா

    சமீபத்திய

    இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா விண்வெளி பயணம் திடீர் ஒத்திவைப்பு; என்ன காரணம்? சுபன்ஷு சுக்லா
    கடலூர் சாயப் பட்டறையில் ரசாயன பாய்லர் வெடித்து விபத்து; 19 பேருக்கு காயம் கடலூர்
    நீரஜ் சோப்ராவுக்கு பிராந்திய ராணுவத்தில் கெளரவ லெப்டினன்ட் கர்னல் பதவி வழங்கி கௌரவிப்பு நீரஜ் சோப்ரா
    சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்ததை மறுபரிசீலனை செய்யுமாறு இந்தியாவிற்கு பாகிஸ்தான் கடிதம்  சிந்து நதி நீர் ஒப்பந்தம்

    புலனாய்வு

    சென்னையிலுள்ள பிரபல நகைக்கடையில் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை சோதனை சென்னை
    சென்னை விமான நிலையத்தில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்  சென்னை
    ராமஜெயம் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்ட நபர் திடீர் கொலை - அதிர்ச்சியில் திருச்சி  திருச்சி
    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - சிபிஐ விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு  தூத்துக்குடி

    உளவுத்துறை

    கேரளா குண்டுவெடிப்பு சம்பவம் - தமிழக பாதுகாப்பினை உறுதி செய்ய வலியுறுத்தும் உளவுத்துறை கேரளா
    விமானத்தை தகர்க்கப் போவதாக காலிஸ்தான் பயங்கரவாதி மிரட்டல் விடுத்ததை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது: உளவுத்துறை  காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    உக்ரைன் உளவுத்துறை தலைவரின் மனைவிக்கு விஷம் வைத்து கொல்ல திட்டம்? உக்ரைன்
    தாவூத் இப்ராஹிம் உடல்நலனை பற்றி சோட்டா ஷகீல் வெளியிட்ட தகவல் தாவூத் இப்ராஹிம்

    பாகிஸ்தான்

    SCO உச்சிமாநாட்டில் பாகிஸ்தானிடம் தக் லைஃப் காட்டிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜம்மு காஷ்மீரில், டாக்டர் மற்றும் 6 பொதுமக்களை கொன்றதற்கு பொறுப்பேற்று கொண்ட தீவிரவாத அமைப்பு ஜம்மு காஷ்மீர்
    பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் குண்டுவெடிப்பு; 20 பேர் பலியான பரிதாபம் குண்டுவெடிப்பு
    சாம்பியன்ஸ் டிராபி, துபாயில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி: முழுமையான அட்டவணை சாம்பியன்ஸ் டிராபி

    இந்தியா

    என்ஐஏ கஸ்டடியில் குர்ஆன் உள்ளிட்ட மூன்று விஷயங்களை கேட்டு பெற்ற தஹாவூர் ராணா தஹாவூர் ராணா
    இனி ட்ரோனை வைத்து எந்த நாடும் வாலாட்ட முடியாது; புதிய லேசர் ஆயுதத்தை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா டிஆர்டிஓ
    உலகின் மூன்றாவது பெரிய ஓடிடி தளம்; 200 மில்லியன் சந்தாதாரர்களைத் தாண்டி ஜியோஹாட்ஸ்டார் சாதனை ஜியோஹாட்ஸ்டார்
    பரோலில் தப்பித்த கொலைக் குற்றவாளியை 20 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்தது டெல்லி காவல்துறை கைது
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025