NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / போர் நிறுத்தத்திற்கு இடையே பாகிஸ்தான் மீது ராஜதந்திர தாக்குதலை தீவிரப்படுத்தும் இந்தியா
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    போர் நிறுத்தத்திற்கு இடையே பாகிஸ்தான் மீது ராஜதந்திர தாக்குதலை தீவிரப்படுத்தும் இந்தியா
    ஒரு சர்வதேச தொடர்புத் திட்டத்தை மேற்கொள்ள உள்ள அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் குழு

    போர் நிறுத்தத்திற்கு இடையே பாகிஸ்தான் மீது ராஜதந்திர தாக்குதலை தீவிரப்படுத்தும் இந்தியா

    எழுதியவர் Venkatalakshmi V
    May 16, 2025
    01:27 pm

    செய்தி முன்னோட்டம்

    பாகிஸ்தானுக்கு எதிராக ராஜதந்திர தாக்குதலை தீவிரப்படுத்தும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளது.

    எல்லைகளில் போர் இடைநிறுத்தத்திற்கு இடையே, அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் குழு, சமீபத்திய மோதல்கள் மற்றும் இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து வெளிநாட்டு அரசாங்கங்களுக்கு விளக்கமளிக்கும் ஒரு சர்வதேச தொடர்புத் திட்டத்தை மேற்கொள்ள உள்ளதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

    மே 22-க்குப் பிறகு தொடங்கும் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு ஒருங்கிணைத்து வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எம்.பி.க்களுக்கு ஏற்கனவே அழைப்புகள் அனுப்பப்பட்டுள்ளன எனவும் கூறப்படுகிறது.

    விவரங்கள்

    அனைத்து கட்சியினர் அடங்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு

    ஒவ்வொரு குழுவிலும் 5-6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அவர்கள் அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், தென்னாப்பிரிக்கா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்குச் செல்வார்கள்.

    இந்த பிரதிநிதிகளை வழிநடத்த மூத்த எம்.பி.க்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், இந்தப் பொறுப்பு முதன்மையாக NDA நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    ஏப்ரல் 22 அன்று பாகிஸ்தானை தளமாகக் கொண்ட போராளிகளால் பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவும் பாகிஸ்தானும் சமீபத்தில் அதிகரித்த இராணுவ மோதலில் சிக்கிக்கொண்டன.

    இதற்கு பதிலடியாக, இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற திட்டத்தின் கீழ், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து பதிலடித் தாக்குதலை நடத்தியது.

    ஆதரவு

    மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர் கட்சிகள் ஆதரவு

    மே 10 அன்று, உயர் இராணுவ அதிகாரிகளுக்கு இடையேயான கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, பதட்டங்களைத் தணிக்க அண்டை நாடுகள் ஒரு உடன்பாட்டை எட்டின.

    ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து, பாதுகாப்பு நிலைமை மற்றும் எதிர்கால வழி குறித்து அரசியல் தலைவர்களுக்கு விளக்க அரசாங்கம் சம்பீத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டியது.

    கூட்டத்தின் போது, ​​பாகிஸ்தானின் தாக்குதலைக் கையாள்வதில் அரசாங்கத்திற்கு எதிர்க்கட்சிகள் தனது ஆதரவைத் தெரிவித்தது.

    இஸ்லாமாபாத்திற்கு எதிரான நடவடிக்கைகளை புது தில்லி தீவிரப்படுத்தியதால், சர்வதேச ஆதரவைப் பெறுவதற்காக அரசாங்கம் பல நாடுகளின் உயர் அதிகாரிகள் மற்றும் வெளியுறவு அமைச்சர்களுடன் ஈடுபட்டது.

    ஏற்கனவே பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா, விசாக்களை ரத்து செய்தல், நில எல்லைகள் மற்றும் வான்வெளியை மூடுதல் என தொடர்ச்சியான ராஜதந்திர நடவடிக்கைகளை அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    இந்திய ராணுவம்
    பாகிஸ்தான்
    பாகிஸ்தான் ராணுவம்

    சமீபத்திய

    போர் நிறுத்தத்திற்கு இடையே பாகிஸ்தான் மீது ராஜதந்திர தாக்குதலை தீவிரப்படுத்தும் இந்தியா இந்தியா
    இந்தியா கூட்டணி வேஸ்ட்; 2029லும் பாஜகவே ஆட்சி அமைக்கும் சூழல் இருப்பதாக ப.சிதம்பரம் பேச்சு சிதம்பரம்
    தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன? தங்கம் வெள்ளி விலை
    பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்; கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல் பள்ளிகள்

    இந்தியா

    'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலில் தனது போர் விமானங்களுக்கு சேதம் ஏற்பட்டதாக ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் ஆபரேஷன் சிந்தூர்
    இந்திய பத்திரிகையாளர்களை குறிவைக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்புகள்; மத்திய பாதுகாப்புத் துறை அலெர்ட் உளவுத்துறை
    எஸ் 500 வான் பாதுகாப்பு அமைப்பை இந்தியாவுடன் கூட்டாக தயாரிக்க ரஷ்யா முன்மொழிவு என தகவல் ரஷ்யா
    இது போருக்கான சகாப்தம் அல்ல.. ஆனால்.. பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள் பிரதமர் மோடி

    இந்திய ராணுவம்

    இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக மசூதிகளில் சிறப்பு பிரார்த்தனைகள்; கர்நாடக அரசு அறிவிப்பு கர்நாடகா
    இந்தியாவின் மேம்பட்ட பாதுகாப்பு அரண்: பாகிஸ்தானின் தாக்குதலை இந்தியா எவ்வாறு முறியடித்தது? இந்தியா
    நேற்றிரவு, இந்தியாவில் உள்ள 24 நகரங்களை குறிவைத்து 500 பாகிஸ்தான் ஆளில்லா விமானங்கள் தாக்குதல் எனத்தகவல் இந்தியா
    இந்தியா-பாகிஸ்தான் பதட்டத்திற்கு ராணுவ தலைவர் அழைக்கவிருக்கும் பொதுமக்களோடு கலந்திருக்கும் பிராந்திய இராணுவம் யார்? இந்தியா

    பாகிஸ்தான்

    இந்திய ராணுவ DGMOக்கு போன் போட்டு போர் நிறுத்தம் கோரிய பாகிஸ்தான் DGMO; வெளியுறவு செயலாளர் தகவல் இந்தியா
    தீவிரவாதத்தை எதிர்கொள்வதில் எந்த சமரசமும் கிடையாது; போர் நிறுத்தத்திற்குப் பின் இந்தியா உறுதி எஸ்.ஜெய்சங்கர்
    தாக்குதல் மட்டும்தான் நிறுத்தம்; போர் நிறுத்தத்திற்கு பிறகு இந்திய அரசு சொன்னது என்ன? இந்தியா
    மீண்டும் அத்துமீறிய பாகிஸ்தான்; பல இடங்களில் போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல்; இந்திய பாதுகாப்புப் படைகள் பதிலடி பாகிஸ்தான் ராணுவம்

    பாகிஸ்தான் ராணுவம்

    பாக்., ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து ஜம்முவில் இருட்டடிப்பு; பஞ்சாப் மாவட்டத்திலும் இருட்டடிப்பு  ஜம்மு காஷ்மீர்
    ஜம்முவை நோக்கி வந்த பாகிஸ்தானின் F-16 போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய இந்தியா ஜம்மு காஷ்மீர்
    3 இந்திய ராணுவ தளங்கள் மீது பாகிஸ்தான் ஏவுகணை-ட்ரோன் தாக்குதல் இந்திய ராணுவம்
    ஜம்முவின் அக்னூரில் பாகிஸ்தானின் F-16 விமானியை சிறைபிடித்த இந்திய ராணுவம் பாகிஸ்தான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025