NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'அயன்' படப்பாணியில் அரங்கேறிய தங்க கடத்தல் நாடகம்; ₹69 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    'அயன்' படப்பாணியில் அரங்கேறிய தங்க கடத்தல் நாடகம்; ₹69 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
    டெல்லி விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டா

    'அயன்' படப்பாணியில் அரங்கேறிய தங்க கடத்தல் நாடகம்; ₹69 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 17, 2024
    06:40 pm

    செய்தி முன்னோட்டம்

    நடிகர் சூர்யா நடிப்பில், மறைந்த இயக்குனர் KV ஆனந்த் இயக்கத்தில் வெளியான சூப்பர்ஹிட் திரைப்படம் 'அயன்'.

    வெளிநாடுகளிலிருந்து கடத்தி வரப்படும் தங்க கட்டிகளையும், சட்ட விரோதமான பொருட்களையும் பற்றிய படம் அது.

    இதில் தங்கம் உள்ளிட்ட சட்ட விரோதமான பொருட்களை கடத்தல்காரர்கள் வலுக்கட்டாயமாக, வயிறு நிறைய உண்பார்கள்.

    அவர்களால் விமானத்தில் அதன் பின்னர், தண்ணீரோ, உணவோ சாப்பிட முடியாது. சேர வேண்டிய இடத்திற்கு சென்ற பின்னர், அவர்கள் வயிற்றிலிருந்து அப்பொருட்கள் எடுக்கப்படும்.

    இதே பாணியில், தற்போது ஏர் இந்தியா விமான பயணி ஒருவர், ₹69 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை ஜேடாவிலிருந்து டெல்லிக்கு கடத்தி வந்தார்.

    ஆனால் விமான பணிப்பெண்ணின் சாமர்த்தியத்தால் அவர் டெல்லி விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டார்.

    கடத்தல்

    கடத்தல் நாடகம் அம்பலம்

    ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த நபர், ஐந்தரை மணி நேரப் பயணம் முழுவதும் தண்ணீர் உட்பட எவ்வித குளிர்பானங்களையும் தொடர்ந்து மறுத்து வந்தார்.

    இந்த அசாதாரண நடத்தை விமானப் பணிப்பெண்ணை விமானக் கேப்டனை எச்சரிக்கத் தூண்டியது.

    பின்னர் கேப்டன், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக்குத் தகவல் தெரிவித்தார்.

    டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியதும், பாதுகாப்பு நிறுவனங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அப்பயணி கண்காணிப்பில் வைக்கப்பட்டார்.

    விசாரணையில், ஜெட்டாவில் இருந்து தங்கம் கடத்தி வந்ததை ஒப்புக்கொண்டார்.

    பயணி தனது மலக்குடலில் தங்க பேஸ்டை மறைத்து வைத்திருந்ததை ஒப்புக்கொண்டார். பின்னர் அது நான்கு ஓவல் காப்ஸ்யூல்கள் வடிவில் பிரித்தெடுக்கப்பட்டது.

    அவரிடமிருந்து சுமார் 1,096.76 கிராம் தங்கம் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் பின்னர் உறுதி செய்தனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கடத்தல்
    டெல்லி
    ஏர் இந்தியா
    விமானம்

    சமீபத்திய

    அணுசக்தி துறையில் தனியார் நிறுவனங்களின் நுழைவை எளிதாக்க கொள்கைகளை மறுசீரமைக்க மத்திய அரசு ஆலோசனை  அணுசக்தி
    இந்தியா விநியோகத்தைக் குறைத்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் அணை கட்டுமானத்தை சீனா துரிதப்படுத்துகிறது பாகிஸ்தான்
    கவாசாகி எலிமினேட்டருக்கு போட்டியாக ரெபெல் 500 க்ரூஸரை இந்தியாவில் அறிமுகம் செய்தது ஹோண்டா ஹோண்டா
    வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது நடிகர் சூர்யா

    கடத்தல்

    கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தங்க கடத்தல் அதிகரிப்பு - IRS அதிகாரி அதிர்ச்சி தகவல் தமிழ்நாடு
    மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த அரிய வகை குரங்குகள் - திருப்பியனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை மலேசியா
    கேரள மாநிலம், கொச்சி விமான நிலையத்தில் ரூ.49.5 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் கேரளா
    குஜராத்தில் 5 ஆண்டுகளில் 41 ஆயிரம் பெண்கள் மாயம் - அதிர்ச்சி தகவல்  குஜராத்

    டெல்லி

    டெல்லி விமான நிலையத்திற்கு வேடிக்கைக்காக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவன் பிடிபட்டான்  காவல்துறை
    கடும் வெப்பம் மற்றும் தண்ணீர் பற்றாக்குறைக்கு மத்தியில் டெல்லியில் மின்சாரம் துண்டிப்பு உத்தரப்பிரதேசம்
    நீட் தேர்வை எதிர்த்து நாடு தழுவிய 2 நாள் வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது AISA நீட் தேர்வு
    வட இந்தியாவை வாட்டும் கடும் வெயில்: டெல்லியில் 5 பேரும், நொய்டாவில் 10 பேரும் பலி  இந்தியா

    ஏர் இந்தியா

    மும்பை மற்றும் டெல்லியிலிருந்து துபாய்க்கு கூடுதல் இடைநில்லா விமானங்கள்.. ஏர் இந்தியா அறிவிப்பு! விமான சேவைகள்
    ஏர் இந்தியா ஆட்சேர்ப்பு - 700-க்கும் மேற்பட்ட விண்ணப்பம் குவிந்துள்ளதாக மகிழ்ச்சி!  விமான சேவைகள்
    நடு வானில் கடுமையாக குலுங்கிய ஏர் இந்தியா விமானம்: பல பயணிகள் காயம்  இந்தியா
    இன்ஜின் கோளாறு: ரஷ்யாவுக்கு திருப்பிவிடப்பட்ட இந்திய விமானம்  இந்தியா

    விமானம்

    பிரான்சில் கடந்த 4 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்ட பயணிகள் விமானம் இன்று மும்பை வந்து சேர்ந்தது  மும்பை
    பீகார்: மேம்பாலத்தின் கீழ் சிக்கிய விமானத்தால் பெரும் போக்குவரத்து நெரிசல் பீகார்
    இண்டிகோ விமானத்தில் வழங்கப்பட்ட சாண்ட்விச்சில் புழு; பயணியிடம் மன்னிப்பு கோரிய விமான நிறுவனம் டெல்லி
    டோக்கியோவில் தீப்பிடித்து எரிந்த ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம்: என்ன நடந்தது? ஜப்பான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025