NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இஸ்ரேல்-பாலஸ்தீனப் போரால் இந்தியாவுக்கு என்ன பாதிப்புகள் ஏற்படும்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போரால் இந்தியாவுக்கு என்ன பாதிப்புகள் ஏற்படும்?
    சவுதி அரேபியா இஸ்ரேலுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறது.

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போரால் இந்தியாவுக்கு என்ன பாதிப்புகள் ஏற்படும்?

    எழுதியவர் Sindhuja SM
    Oct 09, 2023
    06:27 pm

    செய்தி முன்னோட்டம்

    இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனப் போராளிகளுக்கும் ஏற்பட்டிருக்கும் போரால், உலகமே இரண்டாக பிரிந்துள்ளது.

    அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலுக்கு வெளிப்படையாக உதவி செய்து வரும் நிலையில், ஈரான் உள்ளிட்ட அரபு நாடுகள் பாலஸ்தீனப் போராளிகளுக்கு துணை நிற்பதாக கூறப்படுகிறது.

    இப்படி உலகமே இரண்டாக பிரிந்துள்ள நிலையில், இந்தியா இராஜதந்திர ரீதியாக கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளது.

    மத்திய கிழக்கு நாடுகளுடன் இந்தியா தனது உறவை வலுவடைய செய்து கொண்டிருந்த நேரத்தில் இந்த போர் மூண்டுள்ளது.

    இஸ்ரேலில் போர் தொடங்கியதும் அது குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்த பிரதமர் மோடி, "பயங்கரவாத தாக்குதல்கள் பற்றிய செய்தியால் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். இந்த கடினமான நேரத்தில் நாங்கள் இஸ்ரேலுடன் ஒற்றுமையாக நிற்கிறோம்." என்று தெரிவித்திருந்தார்.

    தக்ஜஸ்

    இந்தியா-மத்திய கிழக்கு நாடுகள்-ஐரோப்பா வழித்தடம் பாதிக்கப்படக்கூடும்

    இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இதுவரை அதிகாரபூர்வ அறிக்கையை வெளியிடவில்லை.

    ஆனால், பிரதமர் மோடியின் ட்விட்டர் பதிவை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும், வெளியுறவு அமைச்சகமும் ரீட்வீட் செய்திருந்தனர்.

    அதனால், தொடர்ந்து இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா பேசுமா என்பது இன்னும் சரியாக தெரியவில்லை.

    ஒரு மாதத்திற்கு முன்பு நடந்த ஜி20 உச்சி மாநாட்டில், இந்தியா-மத்திய கிழக்கு நாடுகள்-ஐரோப்பா ஆகியவற்றை இணைக்கும் இணைப்பு வழித்தடத்தை இந்தியா தொடங்கி வைத்தது.

    அமெரிக்கா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகள் இதற்கு ஆதரவு தெரிவித்திருந்தன.

    வ்க்ஜ்ன்

    பாலஸ்தீனர்களுக்கு குரல் கொடுத்து வரும் சவுதி அரேபியா

    இந்நிலையில், அது நடந்து ஒரு மாதத்திற்குள் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர் தொடங்கியுள்ளது.

    இந்த இஸ்ரேல்-பாலஸ்தீனப் போரில், இந்தியாவும் அமெரிக்காவும் தெளிவாக இஸ்ரேலுக்கு சார்பாக குரல் கொடுத்து வருகின்றன.

    அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஆதரவாக தனது போர் வாகனங்களை இஸ்ரேல் நாட்டுக்கு அனுப்பியுள்ளது.

    ஆனால், சவுதி அரேபியா இஸ்ரேலுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறது.

    வன்முறையை உடனடியாக நிறுத்துமாறு அழைப்பு விடுத்துள்ள சவுதி அரேபியா, பாலஸ்தீனிய மக்களின் நியாயமான உரிமைகளை வழங்க மறுப்பதால் தான் இந்த போர் நடக்கிறது என்று இஸ்ரேலை எச்சரித்து வருகிறது.

    எனவே, இந்தியாவின் லட்சியத் திட்டமான "இந்தியா-மத்திய கிழக்கு நாடுகள்-ஐரோப்பா வழித்தடத்தை" இந்த போர் சிதைக்கக்கூடும்

    டக்ஜ்வ்க்

    மத்திய கிழக்கு நாடுகளுடனான உறவுகள் கடுமையாக பாதிக்கும்  

    சவுதி அரேபியா-இந்தியா உறவுகளுக்கு நரேந்திர மோடி அரசாங்கம் அதிகமாக உழைத்து வருகிறது.

    இந்த இரண்டு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை வலிமையாக்கும் மூலோபாய கூட்டாண்மை கவுன்சில்(SPC) ஒப்பந்தமும் சமீபத்தில் கையெழுத்திடப்பட்டன.

    அண்மையில், பிரதமர் மோடி சவுதி அரேபியாவுக்கு சென்றிருந்த போது அந்நாட்டின் உயரிய குடிமகன் விருது அவருக்கு வழங்கப்பட்டது.

    அது போக, ஜோர்டான், ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பாலஸ்தீனம், கத்தார் மற்றும் எகிப்து ஆகிய மத்திய கிழக்கு நாடுகளுக்கு பிரதமர் மோடி சமீபத்தில் பயணம் மேற்கொண்டது, மத்திய கிழக்கு நாடுகளுக்கு இந்தியா எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை காட்டுகிறது.

    தவ்க்

    மத்திய கிழக்கு நாடுகளை எதிர்க்குமா இந்தியா?

    முன்பு, மத்திய கிழக்கு நாடுகளுடனான இந்தியாவின் உறவு வெறும் வர்த்தக ரீதியாக மட்டும் தான் இருந்தது.

    ஆனால், தற்போது சீனாவை எதிர்த்து இந்தியா முன்னேற நினைப்பதால், மத்திய கிழக்கு நாடுகளுடனான இந்தியாவின் உறவுகள் மூலோபாய ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

    எனவே, தற்போதைய சூழ்நிலையில், ஏதாவது ஒரு தரப்பினருக்கு இந்தியா ஆதரவு தெரிவிப்பது என்பது பல மத்திய கிழக்கு நாடுகளுக்கு எதிராக நிற்பதற்கு சமம்.

    மேலும், அது இந்தியாவின் வர்த்தக உறவுகளையும் மூலோபாய உறவுகளையும் கடுமையாக பாதிக்கும்.

    இதே காரணத்திற்காக தான், ரஷ்ய-உக்ரைன் போரின் போது, இந்தியா எந்த ஒரு கருத்தும் சொல்லாமல் ஒதுங்கிவிட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இஸ்ரேல்
    பாலஸ்தீனம்
    இந்தியா

    சமீபத்திய

    தவறுதலாக எல்லை தாண்டிச் சென்ற BSF வீரரை மீதும் இந்தியாவிடம் ஒப்படைத்தது பாகிஸ்தான் இந்திய ராணுவம்
    பதிலடி நடவடிக்கையாக, இந்திய தூதரை 'நம்பிக்கையில்லாதவர்' என்று பாகிஸ்தான் அறிவிப்பு; நாட்டை விட்டு வெளியேற 24 மணி நேரம் கெடு பாகிஸ்தான்
    மைக்ரோசாப்ட் அதன் இரண்டாவது பணிநீக்கச் சுற்றில் 6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது மைக்ரோசாஃப்ட்
    உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்கிறார் - பதவியேற்கும் முதல் பௌத்தர் உச்ச நீதிமன்றம்

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    இஸ்ரேல் மீது பெரும் தாக்குதலை நடத்த ஹமாஸ் ஏன் அக்டோபர் 6ஐ தேர்வு செய்தது? இஸ்ரேல்
    காசா பகுதிக்கு செல்லும் மின்சாரம், உணவு, தண்ணீர் மற்றும் எரிபொருளை முடக்க இருக்கிறது இஸ்ரேல்  இஸ்ரேல்

    இஸ்ரேல்

    குழந்தைக்கு டிக்கெட் இல்லாததால் குழந்தையை விமான நிலையத்திலேயே விட்டு சென்ற பெற்றோர் உலகம்
    இஸ்ரேலில் புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு உலக செய்திகள்
    2,000 கிமீ தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணை சோதனை: ஈரான் அதிரடி உலகம்
    5,000 ராக்கெட்டுகளை ஏவிய காசா: போர் நிலையை அறிவித்தது இஸ்ரேல்  உலகம்

    பாலஸ்தீனம்

    இஸ்ரேல் வாழ் தமிழர்களுக்கு உதவி எண்கள் - தமிழக அரசு அறிவிப்பு  இஸ்ரேல்

    இந்தியா

    Sports Round Up : ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு ஹாட்ரிக் தங்கம்; மேலும் பல முக்கிய செய்திகள் ஆசிய விளையாட்டுப் போட்டி
    மும்பை குண்டுவெடிப்பில் தேடப்படும் குற்றவாளி ராணா நாடு கடத்தப்படுவதில் மேலும் தாமதம் அமெரிக்கா
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: அக்டோபர் 6 தங்கம் வெள்ளி விலை
    4வது முறையாக ரெப்போ ரேட்டில் மாற்றம் செய்யாத ரிசர்வ் வங்கி ரிசர்வ் வங்கி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025