NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது
    ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா இன்று தாக்கல்

    ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 17, 2024
    08:32 am

    செய்தி முன்னோட்டம்

    பாஜக தலைமையிலான மத்திய அரசு சர்ச்சைக்குரிய 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவை இன்று டிசம்பர் 17ஆம் தேதி, இன்று மக்களவையில் தாக்கல் செய்யும் என்று அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் செவ்வாய்க்கிழமை மக்களவையில் இரண்டு முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்ய உள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

    அரசியலமைப்பு (நூற்றி இருபத்தி ஒன்பதாவது திருத்தம்) மசோதா, 2024 மற்றும் யூனியன் பிரதேசங்கள் சட்டங்கள் (திருத்தம்) மசோதா என அதிகாரப்பூர்வமாக தலைப்பிடப்பட்ட ONOP மசோதா ஆகியவை இதில் அடங்கும்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #BREAKING | ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா இன்று தாக்கல் #SunNews | #ParliamentWinterSession | #OneNationOneElection pic.twitter.com/mixXbCsge3

    — Sun News (@sunnewstamil) December 17, 2024

    நடைமுறை

    மசோதா தாக்கல் செய்த பின்னர் என்ன நடைமுறை

    பாராளுமன்றத்தில் பாஜகவின் நீண்டகால தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, மேக்வால், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம், பரந்த ஆலோசனைக்காக நாடாளுமன்றத்தின் கூட்டுக் குழுவுக்கு அனுப்புமாறு கோருவார்.

    பல்வேறு அரசியல் கட்சிகளின் எம்.பி.க்களின் விகிதாசார பலத்தை பிரதிபலிக்கும் வகையில், விகிதாச்சார அடிப்படையில் கூட்டுக் குழு அமைக்கப்படும்.

    அக்கட்சியின் அதிகாரி ஒருவர் கூறுகையில், பா.ஜ., மிகப்பெரிய கட்சியாக இருப்பதால், குழுவின் தலைவர் பதவியையும், பல உறுப்பினர் பதவிகளையும் பெறும். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா செவ்வாய்க்கிழமை மாலைக்குள் குழுவின் அமைப்பை அறிவிப்பார்.

    எதிர்க்கட்சிகள்

    ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை எதிர்க்க எதிர்க்கட்சிகள் திட்டம் 

    ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி மற்றும் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல எதிர்க்கட்சித் தலைவர்கள் நாட்டில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் யோசனையை எதிர்த்தனர்.

    இந்த மசோதா "ஜனநாயக விரோதமானது" என்றும் "இந்தியாவின் ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்க வடிவமைக்கப்பட்ட சர்வாதிகார நடவடிக்கை" என்றும் கூறியுள்ளனர்.

    முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான கமிட்டியின் அறிக்கையின் பரிந்துரைகளை ஏற்று, 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவை இரண்டு கட்டங்களாக அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    முதல் கட்டமாக லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களும், இரண்டாம் கட்டமாக உள்ளாட்சி தேர்தல் (ஊராட்சி மற்றும் நகராட்சிகள்) 100 நாட்களுக்குள் பொதுத்தேர்தல் நடத்தப்படும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஒரே நாடு ஒரே தேர்தல்
    மக்களவை
    பாஜக
    மத்திய அரசு

    சமீபத்திய

    ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவின் வரலாற்றுச் சாதனைக்கு பிரதமர் மோடி பாராட்டு நீரஜ் சோப்ரா
    பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத் தன்மை; இந்தியாவின் நிலையை உலக நாடுகளுக்கு தெரிவிக்க குழுக்கள் அமைப்பு ஆபரேஷன் சிந்தூர்
    உலக உயர் இரத்த அழுத்தம் தினம் 2025: இளம் இந்தியர்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் சுகாதார நிபுணர்கள் சிறப்பு செய்தி
    கரூர் அருகே கோர விபத்து; சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதியலில் 4 பேர் பலி விபத்து

    ஒரே நாடு ஒரே தேர்தல்

    ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு எதிராக தமிழக முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் தமிழக முதல்வர்
    ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான அறிக்கை குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிப்பு திரௌபதி முர்மு
    'ஒரே நாடு ஒரே தேர்தல்': மோடி 3.0 வில் அமல்படுத்தப்படும் எனத்தகவல் நரேந்திர மோடி
    ஒரே நாடு ஒரே தேர்தல்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்; குளிர்கால கூட்டத்தொடரில் பில் நிறைவேற்றப்படும் மத்திய அரசு

    மக்களவை

    OPS vs OPS: ராமநாதபுரத்தில், ஓ.பன்னீர்செல்வம் என்ற ஒரே பெயரில் 6 பேர் வேட்புமனு தாக்கல் ஓ.பன்னீர் செல்வம்
    ஈரோடு தொகுதி மதிமுக MP கணேசமூர்த்தி மாரடைப்பால் காலமானார் ஈரோடு
    'மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தால், ராகுல் காந்தி பதவி விலக வேண்டும்': பிரசாந்த் கிஷோர்  தேர்தல்
    மக்களவை தேர்தல் 2024: மாலை 3 மணி வரை 50% மக்கள் வாக்குபதிவு  தேர்தல்

    பாஜக

    அமைச்சர் பதவி வேண்டாம் என நடிகர் சுரேஷ் கோபி திடீர் அறிவிப்பு இந்தியா
    அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப் போவதில்லை: நடிகர் சுரேஷ் கோபி விளக்கம்  கேரளா
    பாலியல் குற்றம்சாட்டப்பட்ட பாஜக தலைவர் அமித் மாளவியாவை பதவி நீக்க வேண்டும் என்று கோரியது காங்கிரஸ்  இந்தியா
    பிரதமர் மோடியின் அமைச்சரவையில் பதவியேற்றுள்ள இளைய மற்றும் மூத்த அமைச்சர்கள் யார் யார்? இந்தியா

    மத்திய அரசு

    அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் 8.9 சதவீதம் அதிகரிப்பு; மத்திய நிதியமைச்சகம் தகவல் ஜிஎஸ்டி
    நவம்பர் 25 முதல் டிசம்பர் 20 வரை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடக்கும் எனத் தகவல் நாடாளுமன்றம்
    குடியரசு தின அணிவகுப்பு: நெறிமுறைகள் மற்றும் கருப்பொருளை வெளியிட்ட மத்திய அரசு குடியரசு தினம்
    சார்பு மற்றும் தவறான புகார்கள் தொடர்பாக விக்கிபீடியாவிற்கு நோட்டீஸ் அனுப்பிய மத்திய அரசு வணிகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025