NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / நிஜ்ஜார் கொலையில் கனடாவிடம் ஆதாரம் கேட்கும் ஜெய்சங்கர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    நிஜ்ஜார் கொலையில் கனடாவிடம் ஆதாரம் கேட்கும் ஜெய்சங்கர்
    நிஜார் கொலையில், விசாரணையை இந்தியா நிராகரிக்கவில்லை என ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

    நிஜ்ஜார் கொலையில் கனடாவிடம் ஆதாரம் கேட்கும் ஜெய்சங்கர்

    எழுதியவர் Srinath r
    Nov 16, 2023
    10:10 am

    செய்தி முன்னோட்டம்

    காலிஸ்தானி ஆதரவாளர் நிஜ்ஜார் கொலை வழக்கில், இந்தியாவிற்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்களை வழங்குமாறு, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கனடாவை கோரியுள்ளார்.

    நிஜ்ஜார் கொலை வழக்கில் விசாரணையை இந்தியா நிராகரிக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

    இங்கிலாந்துக்கு 5 நாள் சுற்றுப்பயணமாக சென்றுள்ள ஜெய்சங்கர், அங்கு 'ஹவ் எ மில்லியன் பீப்பிள் சீ தி வேர்ல்ட்' என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    "இதுபோன்ற குற்றச்சாட்டை முன்வைக்க உங்களுக்கு ஏதேனும் காரணம் இருந்தால், தயவு செய்து ஆதாரங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்"

    "ஏனென்றால் நாங்கள் விசாரணையை நிராகரிக்கவில்லை" என மூத்த பத்திரிகையாளர் லியோனல் பார்பர் கேட்ட கேள்விக்கு ஜெய்சங்கர் பதிலளித்தார்.

    2nd card

    நிஜ்ஜார் கொலை குறித்த ஆவணங்களை கனடா வழங்கவில்லை

    நிஜ்ஜார் கொலையில் இந்தியாவிற்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்களை, கனடா இன்னும் வழங்கவில்லை எனவும் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

    காலிஸ்தான் ஆதரவாளரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கடந்த ஜூன் மாதம் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    அவர் கொல்லப்பட்டதில் இந்தியாவிற்கு தொடர்பு இருப்பதற்கான நம்பத் தகுந்த ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக, கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசியது, இரு நாட்டு உறவுகளில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு விரிசலை ஏற்படுத்தியது.

    கனடாவின் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள இந்தியா, இதை, "அபத்தமானது" என கூறி இருந்தது.

    இந்த விவகாரம் பூதாகரமாகவே, இரு நாடுகளும் பரஸ்பரம் அவர்கள் தூதர்களை திரும்ப பெற்றுக்கொண்டனர்.

    3rd card

    கருத்து சுதந்திரம் பொறுப்புடன் வரவேண்டும்- ஜெய்சங்கர்

    கனடாவில் அதிகரித்து வரும் காலிஸ்தான் ஆதரவு இயக்கங்களின் செயல்பாடுகளை சுட்டிக்காட்டி, பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரம் பொறுப்புடன் வரவேண்டும், அரசியல் நோக்கங்களுக்காக அவை தவறாகப் பயன்படுத்தப்படுவதை பொறுத்துக்கொள்வது, மிகவும் தவறானது எனக் ஜெய்சங்கர் குற்றம் சாட்டினார்.

    இந்திய தூதர்கள் பொதுவெளியில் அச்சுறுத்தப்பட்டதற்கும், கனடாவில் இந்திய தூதரகங்கள் தாக்கப்பட்டது குறித்தும் கனடா அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததையும் ஜெய்சங்கர் சுட்டிக்காட்டினார்.

    மேலும் சீனா குறித்து பேசிய அவர், கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற மோதல் இரு நாட்டு உறவுகளை சீர்குலைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    இந்தியா
    வெளியுறவுத்துறை
    இங்கிலாந்து

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    காலிஸ்தான் ஆதரவாளர்கள்

    கனடாவில் இருக்கும் இந்திய தூதர்களுக்கு மிரட்டல்: இந்தியா கவலை இந்தியா
    அமெரிக்காவில் இருக்கும் இந்திய தூதரகத்திற்கு தீ வைத்த காலிஸ்தான் ஆதரவாளர்கள்  அமெரிக்கா
    காலிஸ்தான் பிரச்சனை: கனட நாட்டு தூதருக்கு சம்மன் அனுப்பியது மத்திய அரசு  கனடா
    கனடா: இந்திய தூதரகத்திற்கு வெளியே போராட்டம் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள் கைது  கனடா

    இந்தியா

    இந்தியாவில் கடந்த அக்டோபரில் உயர்ந்த வாகன உற்பத்தி மற்றும் விற்பனை  ஆட்டோமொபைல்
    உள்ளடக்கங்கள் மீது ஓடிடி தளங்களின் சுய மதிப்பீட்டை வேண்டும் மத்திய அரசின் புதிய 'ஒளிபரப்புச் சட்டம்' ஓடிடி
    ரூ.10 லட்சம் விலைக்குள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட செடான்கள் ஆட்டோமொபைல்
    இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 11ம் நாள் 'தேசிய கல்வி தினமா'கக் கொண்டாடப்படுவது ஏன்? கல்வி

    வெளியுறவுத்துறை

    சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க 'ஆபரேஷன் காவேரி' தொடங்கப்பட்டது  இந்தியா
    ஆபரேஷன் காவேரி: 3வது கட்டமாக, சூடானில் இருந்து 135 இந்தியர்கள் மீட்பு   இந்தியா
    SCO உச்சி மாநாடு: இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் சந்திக்க வாய்ப்பில்லை இந்தியா
    இந்தியாவுக்கும் சீனாவுக்கும் போட்டி இல்லாமல் இல்லை: வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா

    இங்கிலாந்து

    'தலைவா' என ரோஜர் பெடரரை குறிப்பிட்ட  விம்பிள்டன் குழு டென்னிஸ்
    உலகளவில் 21ம் நூற்றாண்டில் விடுதலை பெற்ற இளம் நாடுகள்  இந்தியா
    இந்த கைல பணம், அந்த கைல ஆபாச படம்: சர்ச்சையில் சிக்கியுள்ள பிபிசி நிறுவனம் உலகம்
    பிரிட்டன் அரச குடும்பத்தின் மானியத்தை 45% உயர்த்த அரசு முடிவு பிரிட்டன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025