
ரஷ்யா போர் தொடுத்த பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி உக்ரைன் செல்லப்போவதாக தகவல்
செய்தி முன்னோட்டம்
ரஷ்யா-உக்ரைன் போர் நடைபெற்று கொண்டிருக்கும் இந்த நேரத்தில் பிரதமர் மோடி, உக்ரைன் செல்லவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த மாத இறுதியில் இவரின் பயணம் இருக்குமெனவும், பயணத்தின் விவரங்கள் அன்றைய தினம் பகிரப்படும் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவுடனான மோதலுக்குப் பிறகு போரினால் பாதிக்கப்பட்ட நாட்டிற்கு அவரது முதல் பயணம் இதுவாகும்.
அதோடு, கடந்த மாதம் மாஸ்கோவில் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்த ஒரு மாதத்திற்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துளதும் குறிப்பிடத்தக்கது.
2022 இல் உக்ரைன் மீது படையெடுத்ததைத் தொடர்ந்து மேற்கத்திய தலைநகரங்கள் மாஸ்கோ மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.
ஆனால் இந்தியா மற்றும் சீனா போன்ற நட்பு நாடுகள் அதனுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்து வருகின்றன.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
🇮🇳🇺🇦MODI TO VISIT UKRAINE
— Mario Nawfal (@MarioNawfal) August 19, 2024
The Indian Foreign Ministry announced that his first trip to the country since Russia’s invasion will take place soon, without revealing the exact date.
He is scheduled to visit Poland later this week, with some speculating the trip to Ukraine may… pic.twitter.com/cPSe9fjLJN
இந்தியாவின் பங்கு
பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தும் இந்தியா
இரு நாட்டிற்கிடையே போர் மூண்டதிலிருந்து பல மேற்கத்திய நாடுகள் கண்டன குரல்களும், வர்த்தக தடைகளையும் மேற்கொண்ட நிலையில் பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரம் மூலம் மோதலை தீர்க்குமாறு இந்தியா வலியுறுத்தி வருகிறது.
அதே வேளையில், ரஷ்யா மீது நேரடியாக குற்றம் சாட்டுவதையும் இந்தியா தவிர்த்து வருகிறது.
முன்னதாக பிரதமர் மோடியின் ரஷ்யா விஜயத்தின்போது, ரஷ்யாவுடனான இந்தியாவின் உறவு குறித்து அமெரிக்கா கவலைகளை எழுப்பி இருந்தது.
மறுபுறம், மத்திய அரசு தனது பழைய நண்பர் ரஷ்யாவுடன் உறவுகளை அப்படியே வைத்திருக்கும் அதே வேளையில், பல மேற்கு நாடுகளுடனான தனது உறவை ஆழப்படுத்த முயல்கிறது.