NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பணயக் கைதிகளை மீட்பதற்கான புதிய பேச்சுவார்த்தை- நெதன்யாகு தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பணயக் கைதிகளை மீட்பதற்கான புதிய பேச்சுவார்த்தை- நெதன்யாகு தகவல்

    பணயக் கைதிகளை மீட்பதற்கான புதிய பேச்சுவார்த்தை- நெதன்யாகு தகவல்

    எழுதியவர் Srinath r
    Dec 17, 2023
    10:03 am

    செய்தி முன்னோட்டம்

    காசாவில் ஹமாஸால் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிணைக் கைதிகளை மீட்பதற்கான புதிய பேச்சுவார்த்தைகள், கத்தார் மத்தியஸ்தத்தில் நடந்து வருவதாக, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதிப்படுத்தினார்.

    மொசாட் தலைவர் டேவிட் பர்னியா மற்றும் கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி ஆகியோர், ஐரோப்பாவில் சந்தித்துக் கொண்டது குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் நெதன்யாகுவிடம் கேட்கப்பட்டது.

    நெதன்யாகு இந்த கேள்வியை புறக்கணித்தாலும், பேச்சு வார்த்தைகள் நடத்தும் குழுவிற்கு அறிவுரைகள் வழங்கி இருப்பதாக தெரிவித்தார்.

    "எங்களுக்கு கத்தார் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன. அதைப்பற்றி சரியான நேரத்தில் நீங்கள் கேட்பீர்கள் என்று நினைக்கிறேன். இருப்பினும் பணயக் கைதிகளை முழுவதுமாக மீட்க முயற்சிக்கிறோம்" என தெரிவித்தார்.

    பேச்சுவார்த்தைகள் தொடர்பான கூடுதல் தகவல்களை வழங்க, நெதன்யாகு மறுத்துவிட்டார்.

    2nd card

    ஹமாஸை அழிப்பதில் இஸ்ரேல் உறுதி

    இஸ்ரேலைச் சேர்ந்த 3 பணயக் கைதிகளை தவறுதலாக சுட்டுக்கொன்றதாக வெள்ளிக்கிழமை அந்நாட்டு ராணுவம் தெரிவித்ததை தொடர்ந்து, அங்கு வெடித்த போராட்டத்தின் எதிர்விளைவாக அந்நாடு இம்முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

    பணயக் கைதிகளை மீட்கும் பேச்சு வார்த்தைகள் நடந்தாலும், ஹமாஸை அழிப்பதில் இஸ்ரேல் உறுதியாக உள்ளது.

    "நாங்கள் எங்கள் இருப்புக்கான ஒரு போரில் இருக்கிறோம், சர்வதேச அழுத்தங்கள் மற்றும் தாங்க முடியாத பொருட்செலவுகளை தாண்டி, வீழ்ந்த இந்நாட்டின் மகன்கள் மற்றும் மகள்களுக்காக வெற்றி வரை போரை தொடர வேண்டும்" என நெதன்யாகு தெரிவித்தார்.

    3rd card

    காசாவில் குண்டு மழை பொழியும் இஸ்ரேல்

    கடந்த மாத இறுதியில் கத்தார் மற்றும் எகிப்தின் மத்தியஸ்த்தின் விளைவாக கிடைத்த ஏழு நாட்கள் போர் நிறுத்தத்தில், குழந்தைகள், பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட பணயக் கைதிகள் மீட்கப்பட்டனர்.

    இதற்கு பதிலாக, 240 பாலஸ்தீன சிறை கைதிகள், இஸ்ரேல் சிலைகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

    காசாவில் உள்ள 130 பணயக் கைதிகளில் குறைந்தது, 20 பேர் உயிரிழந்திருக்கலாம் என இஸ்ரேல் சந்தேகிக்கிறது.

    இந்நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட நட்பு நாடுகளின் எச்சரிக்கைகளை பொருட்படுத்தாமல், இஸ்ரேல், காசா மீது கடுமையான தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

    காசாவின் கான் யூனிஸ், நாசர் மருத்துவமனைக்கு 20 உடல்களும், டஜன் கணக்கான காயமடைந்தவர்களும் நேற்று அழைத்து வரப்பட்டதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இஸ்ரேல்
    ஹமாஸ்
    காசா

    சமீபத்திய

    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    இஸ்ரேல்-ஹமாஸ் போர் இடைநிறுத்த பேச்சுவார்த்தை வெற்றி: 50 பணயக்கைதிகளை விடுவிக்க ஒப்புதல் இஸ்ரேல்
    எக்ஸ் வலைதளம் மூலம் கிடைக்கும் வருமானம் இஸ்ரேல் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும்: எலான் மஸ்க் எலான் மஸ்க்
    வெள்ளிக்கிழமைக்கு முன் பணயக்கைதிகளை விடுவிக்க முடியாது: இஸ்ரேல் இஸ்ரேல்
    அல்-ஷிஃபா மருத்துவமனையின் இயக்குனர் கைது; தீவிரமடையும் இஸ்ரேல் போர்  இஸ்ரேல்

    இஸ்ரேல்

    தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதலில் மூத்த ஹிஸ்புல்லா தலைவர் கொல்லப்பட்டார் லெபனான்
    இஸ்ரேல்- ஹமாஸ் இடையே நான்கு நாள் போர் நிறுத்தம் தொடங்கியது இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    தாய்லாந்து, இஸ்ரேலைச் சேர்ந்த 25 பணயக் கைதிகளை, விடுதலை செய்தது ஹமாஸ் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    பாலஸ்தீனை சேர்ந்த 6 பெண்கள் மற்றும் 33 சிறுவர்களை இஸ்ரேல் விடுவித்தது பாலஸ்தீனம்

    ஹமாஸ்

    இஸ்ரேல் ஹமாஸ் போருக்கு இடையே, வைரலாகி வரும் அமெரிக்காவிற்கு ஒசாமா எழுதிய கடிதம் அமெரிக்கா
    '5 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து வெளியான தகவல் உண்மையல்ல': இஸ்ரேல்  இஸ்ரேல்
    அல்-ஷிஃபா மருத்துவமனையில் இருந்து 31 பச்சிளம் குழந்தைகள் பத்திரமாக மீட்பு காசா
    இஸ்ரேல் இசை விழாவில் ஹமாஸ் தாக்குதல் நடத்திய பயங்கரமான காட்சிகள் வெளியானது இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    காசா

    அல்-ஷிஃபா மருத்துவமனையை கைப்பற்றியது இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் ஹமாஸ்
    காசாவில் குழந்தைகள் கொல்லப்படுவதாக குற்றம் சாட்டிய ட்ரூடோ, பதிலளித்த நெதன்யாகு கனடா
    இஸ்ரேல்-ஹமாஸ் போர்: காசாவில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதற்கு பிரதமர் மோடி கண்டனம் இஸ்ரேல்
    பாலஸ்தீனத்திற்கு இரண்டாவது முறையாக நிவாரண பொருட்களை அனுப்பியது இந்தியா  பாலஸ்தீனம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025